வைத்தியர் ஷாபி விவகாரம் : குரு­நாகல் நீதி­வானிடம் விசா­ரணை நடத்­தவும்

நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0 989

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் பெண்­ணியல் நோய் தொடர்­பி­லான பிரிவின் சிரேஷ்ட வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்­பி­லான வழக்கில் குரு­நாகல் நீதி­வானின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் விஷேட விசா­ர­ணை­களை நடாத்­து­மாறு இலங்கை இளம் ஊட­க­வி­ய­லாளர் சங்கம் சுயா­தீன நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­விடம் முறைப்­பாடு செய்­துள்­ளது.

நேற்று அந்த சங்கம் இந்த முறைப்­பாட்டை எழுத்து மூலம் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­விடம் கையளித்­துள்­ளது. குரு­நாகல் பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட வைத்­தியர் ஷாபி குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் என்­ப­துடன், அவ­ருக்கு எதி­ராக விசா­ரிக்க உத்­த­ர­விட்ட குரு­நாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்ட நீதிவான் ஆகி­யோரின் மனை­வி­மாரும் குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­யர்கள் என குறித்த முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் கடந்த இரு வழக்குத் தவ­ணை­களின் போது, குரு­நாகல் நீதிவான் நடந்­து­கொண்ட முறைமை தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­யொன்றை நடாத்­து­மாறும், வைத்­தியர் ஷாபி விவ­கா­ரத்தில் நீதி­வானின் கைகளால் தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளதா என ஆரா­யு­மாறும் அவ்­வாறு இடம்­பெற்­றி­ருப்பின் அது சதி நட­வ­டிக்­கை­யொன்றின் அங்­க­மான குற்­ற­வியல் நட­வ­டிக்­கையா என ஆரா­யு­மாறும் இளம் ஊட­க­வி­ய­லாளர் சங்கம் சுயா­தீன நீதிச்­சேவை ஆணைக் குழு­விடம் கோரி­யுள்­ளது.

கடந்த 2019.06.27 அன்­றைய வழக்கு விசா­ர­ணை­க­ளின்­போது, வழக்கின் அல்­லது பாதிக்­கப்பட்ட தரப்போ, பிர­தி­வாதி தரப்போ அல்­லாத குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் சரத் வீர­பண்­டா­ர­வுக்கு திறந்த மன்றில் கருத்­துக்­கூற அனு­ம­தி­ய­ளித்­தமை, பிர­சவ மற்றும் பெண்­ணியல் நோய் விவ­காரம் தொடர்பில் விஷேட நிபு­ண­ரல்­லாத பல் வைத்­தி­ய­ரான அந்தப் பணிப்­பா­ள­ரிடம் எச்.எஸ்.ஜீ. சோதனை குறித்து வினவி அதனை மையப்­ப­டுத்தி அச்­சோ­த­னை­களை இரத்துச் செய்­தமை, அந்தப் பணிப்­பாளர் மன்றில் கூறிய விட­யங்­களை வழக்குப் பதி­வு­க­ளி­லி­ருந்து பின்னர் நீக்­கி­யமை போன்ற விட­யங்­களை இளம் ஊட­க­வி­ய­லாளர் சங்கம் அந்த முறைப்­பாட்டுக் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களால் முறைப்­பாட்­டாளர் தரப்பு, பாதிக்­கப்­பட்ட தரப்பு மற்றும் சந்­தேக நபர் தரப்­புக்கு பாதிப்­புக்கள் ஏற்­ப­டலாம் எனவும், பொது­மக்­க­ளுக்கு நீதி­மன்றம் குறித்த நம்­பிக்­கையில் மாற்றம் ஏற்­ப­டலாம் என்­ப­தாலும் இது­கு­றித்து உடன் அவ­தானம் செலுத்தி விசா­ரிக்­கு­மாறு அந்த முறைப்­பாட்டில் கோரப்பட்­டுள்­ளது. குறித்த முறைப்­பாட்டில் இளம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சங்கம் முக்­கிய 5 விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யுள்ள நிலையில் தண்­டனை சட்டக் கோவையின் 311 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் சி.ஐ.டி.யால் கைது செய்­யப்­ப­டாத சந்­தேக நபரை (வைத்­தியர் ஷாபியை) அதனை மையப்­ப­டுத்தி நீதிவான் எவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

பொது­மக்கள் குழப்பம் ஏற்­ப­டு­மென ஒரு­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க அவர் சந்­தேக நப­ராக இருக்க வேண்டும். எனினும் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட ஷாபி அக்­குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வ­தாக சி.ஐ.டி. தெளி­வாக அறி­வித்­தது. வேறு எந்த சட்டத்தின் கீழும் அவரைக் கைது செய்வதாக அறிவிக்காத நிலையில், அவரை எப்படி பொதுமக்கள் குழப்பத்தை காரணம் காட்டி நீதிவானால் விளக்கமறியலில் வைக்க முடியுமெனக் கேள்வி எழுப்பியுள்ள இளம் ஊடகவியலாளர் சங்கம், குருநாகல் நீதிவானின் செயற்பாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு சதி நடவடிக்கையா என ஆராயுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.