முஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யாடத் தயார்

அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

0 780

முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு கலந்­து­ரை­யா­டு­வ­தற்குத் தான் தயா­ராக இருப்­ப­தாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் சிவில் சமூ­கத்­தூ­துக்­குழு ஒன்று அண்­மையில் ஜாதிக ஹெல உறு­ம­ய­வியன் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவை அவ­ரது இல்­லத்தில் சந்­தித்து நாட்டின் தற்­போ­தைய நெருக்­கடி நிலை குறித்து கலந்­து­ரை­யா­டி­யது. நீதிக்கும் நியா­யத்­துக்­கு­மான அமைப்பின் அங்­கத்­த­வரும் மாலை­தீவின் முன்னாள் இலங்கை தொழிற்­றுறை அதி­கா­ரி­யு­மான எம்.கே.எம்.நௌபரின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் தேசிய பாது­காப்பு ஆணைக்­கு­ழுவின் அங்­கத்­தவர் சட்­டத்­த­ரணி ஜாவித் யூசுப், ஹிழ்ரு சித்திக், சட்­டத்­த­ரணி ரிசாம் தஹ்லான் மன்சூர், ஸ்ரீலங்கா டெலிகொம் ஓய்­வு­பெற்ற சந்­தைப்­ப­டுத்தல் முகா­மை­யாளர் எம்.எஸ்.எம். முஸம்மில், டாக்டர் ரியாஸ் காசிம் ஆகி­யோ­ருடன் அமைச்­சரின் இணைப்­பா­ளரும் கோட்டே மாந­கர சபை உறுப்­பி­னரும் கலந்­து­கொண்­டனர்.

இச்­சந்­திப்பில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்கள் மற்றும் இஸ்லாம் தொடர்­பாக எழுப்­பப்­படும் சந்­தே­கங்கள் பற்றி தூதுக்­கு­ழு­வினர் விளக்­கினர். இது­போன்ற கலந்­து­ரை­யா­டல்­களை எதிர்காலத்தில் தொடருவதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக கூட்ட ஏற்பாட்டாளர் எம்.கே.எம். நௌபர் தெரிவித்தார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.