கடும்போக்காளர்களின் கழுக்குப்பார்வையிலிருந்து உலமா சபை விடுபடுமா?

0 696

ஏப்ரல் 21 தாக்­கு­தல்கள் மத­வாதத்­தி­னதும், இன­வா­தத்­தி­னதும் கோர முகங்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றன. மத­வாத, இன­வாத கோர முகங்­கொண்­டோ­ரினால் முஸ்­லிம்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள், வெறுப்புப் பேச்­சுக்கள், செயற்­பா­டுகள் இந்­நாட்டின் பிர­ஜை­க­ளான முஸ்­லிம்­களை அர­சியல், ஆன்­மிக மற்றும் சமூக ரீதியில் அடி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­யா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

ஒரு சமூ­கத்தின் முது­கெ­லும்­பா­க­வுள்ள அர­சியல் சக்­தியும், ஆன்­மிக வழி­காட்­டலின் பலமும், பொரு­ளா­தார வளர்ச்­சியும் உடைக்­கப்­ப­டு­மாயின் அச்­ச­மூ­கத்­தினால் எழுச்­சி­பெற முடி­யாது. உல­க­ளவில் இம்­மூன்றும் உடைக்­கப்­பட்ட சூழல் முஸ்லிம் உலகில் காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்­கலாம்.

இந்­நி­லையில், பல்­லாண்டு கால­மாக இந்­நாட்டில் இன ஒற்­று­மை­யுடன் வாழும் முஸ்­லிம்­களை ஏனைய சமூ­கங்­க­ளி­லி­ருந்து பிரித்­தாளும் இலக்­குடன் செயற்­படும் இன ஐக்­கி­யத்தை விரும்­பாத கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு ஏப்ரல் 21 தாக்­கு­தல்கள் வரப்­பி­ர­சா­த­மாக அமைந்­து­விட்­டது போலவே அவர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற கருத்­துக்கள் மற்றும் அறிக்­கைகள், தீர்­மா­னங்கள் வெளிப்­ப­டுத்தி வரு­வதைக் காண­மு­டி­கி­றது.

கடந்த இரண்­டரை மாதங்­க­ளாக முஸ்­லிம்­களின், ஆடை, ஹாலால் உணவு, மத்­ரஸா கல்வி என பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் போலிக் குற்­றச்­சாட்­டுக்­களும், வெறுப்புப் பேச்­சுக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரும் சூழலில் கடந்த 7ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பொது­பல சேனா அமைப்­பினால் கண்டி போகம்­பறை விளை­யாட்டு மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்­டத்­தின்­போது அவ்­வ­மைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரின் போகம்­பறைத் தீர்­மா­னங்கள் என இன­மே­லான்­மையை மையப்­ப­டுத்­திய அறி­விப்­புக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இவ்­வ­றிப்­புக்கள் பல்­வேறு விமர்­ச­னங்­களை எழுப்­பி­யுள்ள நிலையில் அக்­கூட்­டத்தில் உலமா சபையும், உல­மாக்­களும் இலக்கு வைக்­கப்­பட்­டி­ருப்­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

முஸ்­லிம்­களின் அர­சியல், சமூக, பொரு­ளா­தார விட­யங்கள் தொடர்­பிலும், உலமா சபையின் செயற்­பா­டுகள் குறித்தும் கடந்த காலங்­களில் அடக்கி வாசிக்­கப்­பட்டு வந்த விட­யங்­களை தற்­போது பெரும்­பான்மை சமூ­கத்தின் மத்­தியில் சமூக மயப்­ப­டுத்­து­வ­தற்­காக உப­யோ­கப்­ப­டுத்­தப்­படும் பொறி­மு­றை­களில் பொது­ப­ல­சே­னாவின் போகம்­பறை தீர்­மா­னங்­களும் ஒன்றா என்ற கேள்­யையும் எழச் செய்­துள்­ளது.

பொது­ப­ல­சே­னாவும், போகம்­பறை தீர்­மா­னமும்

2012இல் உரு­வாக்­கப்­பட்ட பொது­ப­ல­சேனா அமைப்பு உரு­வான காலம் முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கி­றது. ஆறு வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட கால­மாக பழைய பல்­ல­வி­களைப் பாடி முஸ்­லிம்கள் தொடர்­பான நல்­லெண்­ணத்தை பெரும்­பான்மை சமூ­கத்­தி­லி­ருந்து இல்­லாமல் செய்­வ­தற்கு பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு தமக்­கான இடத்தை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்கு முயற்­சித்­தாலும் அம்­மு­யற்­சி­களின் இலக்­குகள் வெற்­றி­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பதை கடந்த 2015 பாரா­ளு­மன்றத் தேர்தல் புடம்­போட்­டி­ருக்­கி­றது.

‘பொது­ஜன பெர­முன’ என்ற பெயரில் பொது­பல சேனா நாட்டின் பல மாவட்­டங்­களில் கடந்த 2015 பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்­டது. 16 மாவட்­டங்­களில் இவ்­வ­மைப்பு போட்­டி­யிட்டு ஏறக்­கு­றைய 23,000 வாக்­கு­களைப் பெற்­றது. ஏறக்­கு­றைய 15,000,000 சிங்­கள மக்கள் வாழும் இந்­நாட்டில் இவ்­வ­மைப்பை விசு­வா­சித்து வடக்கு மாகாணம் தவிர்த்து சகல மாகா­ணங்­க­ளிலும் ஏறக்­கு­றைய 23,000 மக்­களே ஆத­ரித்து வாக்­க­ளித்­தி­ருந்­தனர். ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரைக்­கூட பெறு­வ­தற்­கான மக்கள் ஆத­ரவை இவ்­வ­மைப்­பினால் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பெற­மு­டி­ய­விலை.

இந்­நாட்டின் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற சிங்­கள மக்­க­ளையும் பௌத்த மதத்­தையும் பாது­காப்­பது எங்­க­ளது தலை­யாய கடமை என்று கூறி பிர­சா­ரங்­களை மேற்­கொண்ட போதிலும், இவர்­களின் இப்­பி­ர­சா­ரங்கள் கடந்த பொதுத் தேர்­தலில் சிங்­கள பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் பய­ன­ளிக்­க­வில்லை.
அம்­மக்கள் இவர்­களின் இன­வாதக் கருத்­துக்­களை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. வெறும் 23 ஆயிரம் வாக்­கா­ளர்­களே இவர்­களின் கருத்­துக்­களை ஏற்­றி­ருந்­தனர். இவ்­வாறு இவர்­க­ளுக்கு ஏற்­பட்ட தோல்வி நிலை­யி­லி­ருந்து மீள்­வ­தற்கும் சிங்­கள பெரும்­பான்மை சமூ­கத்தின் ஆத­ரவை மீண்டும் பெறு­வ­தற்கும், அதன் வழியே அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கு­மாக முன்­வைக்­கப்­பட்ட இன­வாதக் கருத்­துக்­களைக் கொண்ட தீர்­மா­ன­மா­கவே போகம்­பறை தீர்­மானம் அர­சியல் அரங்கில் நோக்­கப்­ப­டு­கி­றது.

அவ்­வ­மைப்­பினால் எதிர்­பார்த்த எண்­ணிக்கை பிக்­கு­க­ளையும், மக்­க­ளையும் இக்­கூட்­டத்தில் இணைத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை என்ற கருத்து நிலவும் சூழலில் இக்­கூட்டம் தொடர்பில் பிர­தேச முஸ்­லிம்கள் பெரும் அச்சம் கொண்­டி­ருந்­த­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும். இந்­நி­லை­யில்தான் இக்­கூட்­டத்தில் இன மேலாண்மை அடிப்­ப­டையில் முன்­வைக்­கப்­பட்ட ஒன்­பது தீர்­மா­னங்­களும் இந்­நாட்டில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் உட்­பட சிறு­பான்மை சமூ­கங்­களை புறந்­தள்­ளிய நிலைப்­பாட்டை முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தி­யி­ருப்­பதை காண முடி­கி­றது.

சிறு­பான்­மை­யி­னரின் தய­வில்­லாத தனி சிங்­கள இராச்­சியம் அமைக்­கப்­பட வேண்டும் என்­பதை பல­மாக வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் இம்­மா­நாட்டுத் தீர்­மா­னங்கள் தொடர்­பிலும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் என்­பதை மூலோ­பா­ய­மாகக் கொண்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்ற ஞான­சார தேரரின் கருத்­துக்கள் குறித்தும் பலரும் பல்­வேறு விமர்­ச­னங்­களை வெளி­யிட்டு வரு­வதை ஊட­கங்கள் வாயி­லாக அவ­தா­னிக்க முடி­கி­றது.

பொது­ப­ல­சேனா அமைப்பின் ஞான­சார தேரர் சிங்­கள பௌத்த இன­வா­தி­யாவார். அப்­ப­டி­யா­னாவர் மத­வாதம் தொடர்பில் பேசு­வ­தற்கு முன்னர் அவர்­களின் கைகளை சுத்­தப்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மென ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார ஊடக செய்­தி­யொன்றில் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஞான­சார தேரர் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம், இன­வாதம் தொடர்பில் பேசி­வ­ரு­கிறார். அடிப்­ப­டை­வாதம், இன­வாதம் எந்த மதத்­தி­லி­ருந்­தாலும் அதனைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கைகள் எல்லை மீறும்­போ­துதான் பங்­க­ர­வாத நட­வ­டிக்­கைக்குத் தள்­ளப்­ப­டு­கி­றது.

ஆனால், ஞான­சார தேரரின் கடந்­த­கால நட­வ­டிக்­கைகள் சிங்­கள அடிப்­ப­டை­வாதம் அல்­லது இன­வா­தத்தைத் தூண்டும் வகை­யி­லேயே இருந்து வந்­துள்­ள­ன. அப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராக செயற்­படத் தகுதி இருக்­கின்­றதா என்ற கேள்­வி­யையும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தனது ஊடகச் செய்­தி­யி­னூ­டாக எழுப்பி இருக்­கிறார்.
“இதே­வேளை, கண்­டியில் பொது­பல சேனா­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட மாநாட்டில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தீர்­மா­னங்­களில் சில முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு எதி­ரான போர்ப்­பி­ர­க­ட­னத்­திற்கு ஒப்­பா­னது” என ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பின் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இந்­நி­லையில், “நாட்டில் ஆண்­டாண்டு கால­மாக சிங்­கள பௌத்­தத்­திற்கு அனைத்து விதங்­க­ளிலும் ஆட்­சி­யா­ளர்­க­ளினால் முன்­னு­ரிமை வழங்­கப்­பட்டு வந்­த­மையின் உச்­ச­கட்ட விளைவே கண்­டியில் இடம்­பெற்ற பொது­பல சேனாவின் மாநா­டாகும்.

“இனிமேல் எந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும் ஆட்­சி­யா­ளர்கள் இந்த நாட்டை ஆளப்­போ­வ­தில்லை. மாறாக சிங்­கள பௌத்த இன­வா­தம்தான் நாட்டை ஆட்சி செய்­யப்­போ­கி­றது” என அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான தேசிய இயக்­கத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர் அருட்­தந்தை சக்­திவேல் ஊடக செய்­தி­யொன்றில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக கடும்­போக்கு அமைப்­புக்கள் கடந்த காலங்­களில் செயற்­பட்டு வந்­தாலும், ஏப்ரல் 21 தாக்­கு­தல்கள் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் கடும்­போக்கு அமைப்­புக்­களை செயற்­படச் செய்­தி­ருக்­கி­றது. இந்­நி­லை­மையை ஜனா­தி­ப­தியின் பொது மன்னிப்பின் கீழ் நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் சிறையில் அடைக்­கப்­பட்ட ஞான­சார தேரர் சிறை­யி­லி­ருந்து விடு­தலை பெற்று வந்த பின்னர் மேற்­கொண்டு வரு­கின்ற நட­வ­டிக்­கைகள் ஊக்­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றன. முஸ்­லிம்கள் எதிர்­நோக்கி வரும் சம­கால சவால்­களை இவரின் வருகை மேலும் சிக்­க­லுக்குள் தள்­ள­ியி­ருப்­பது வெளிப்­ப­டை­யா­னது.

ஒரு குறிப்­பிட்ட அம்­சங்­களை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு மக்கள் பிரிவின் அகம்­சார்ந்த உணர்­வு­களை முற்­றாக நிரா­க­ரித்து, நீங்கள் இவ்­வா­றுதான் உங்­களை அடை­யா­ளப்­ப­டுத்த முடியும் என்று விதி­மு­றை­களை யாரும் திணிக்க முடி­யாது.

ஆனால், கடந்த காலங்­க­ளிலும் சம­கா­லத்­திலும்; இந்­நாட்­டி­லுள்ள கடும்­போக்­க­ளர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட, முன்­வைக்­கப்­ப­டு­கின்ற வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்­களும், தீர்­மா­னங்­களும் அவர்­களின் செயற்­பா­டு­களும் ஓர் இனத்தைக் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தா­கவும், வாழ்­வியல் உரி­மைக்கு பங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும், தனித்­துவப் பண்­பு­களை நிரா­க­ரிப்­ப­தா­கவும் அமைந்­து­வி­டு­கி­றது.
ஓர் இனத்­தினர் தம்மை எது­வாக அடை­யா­ளப்­ப­டுத்த விரும்­பு­கி­றார்­களோ அது­வாக அவர்­களை அங்­கீ­க­ரிப்­ப­துதான் இனங்­களின் தனித்­து­வத்தை, அம்­மக்­களின் அபி­லா­சை­களை மதிப்­ப­வர்­களின் கட­மை­யாகும்.

ஆனால் கடும்­போக்கு மத­வா­திகள் இலங்கை வாழ் சிறு­பான்மை சமூ­கங்­களின் குறிப்­பாக, முஸ்லிம் மக்­களின் தனித்­துவ உணவு, தனித்­துவ ஆடை எனப் பல தனித்­துவ அடை­யா­ளங்­களை சிதைப்­பதை இலக்­கா­கக்­கொண்டு கடந்த ஆட்சிக் காலத்தில் செயற்­பட்­டார்கள். அவற்­றிற்கு அக்­கா­லங்­களில் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டன போன்­ற­தொரு சூழல் இந்த ஆட்­சி­யிலும் காணப்­ப­டு­கி­றது. மாறாக இந்தச் சூழல் அன்றும் தடுக்­கப்­ப­ட­வில்லை; இன்றும் தடுக்­கப்­ப­ட­வில்லை. அத­னால்தான் ஆட்­சி­யா­ளர்கள் இவ்­வா­றுதான் செயற்­பட வேண்­டு­மென்ற உத்­த­ரவை பகி­ரங்­க­மாகத் தெரி­விக்க கடும்­போக்­கா­ளர்கள் முற்­ப­டு­கின்­றனர்.

உலமா சபையும் எதிர்­கா­லமும்

1924ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா சபை 15 உப­கு­ழுக்­களைக் கொண்டு இயங்கு­கி­றது. ஒவ்­வொரு குழு­விற்கும் வெவ்­வேறு பணிக்­கூ­றுகள் வழங்கப்­பட்டு செயற்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
உல­மா­சபை உள்­நாட்டு தேவை­களை பூர்த்தி செய்யும் வகை­யிலும் சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கிலும் உரு­வாக்­கப்­பட்­டதே தவிர சிலர் சுட்­டிக்­காட்­டு­வது போன்று வெளி­நாட்டு நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு ஏற்ப உரு­வாக்­கப்­பட்­டதல்ல என்­பதை உலமா சபை வலி­றுத்திச் சொல்­கி­றது. இச்­ச­பையில் 90 வீதத்­திற்கு அதி­க­மானோர் உள்­ள­நாட்டில் கற்றுத் தேர்ந்தோர் என்றும். 90 வருட பய­ணத்தில் ஆலிம்கள் பொது­மக்கள் துறை­சார்ந்­தோ­ருக்கு ஆன்­மிக ரீதி­யி­லான வழி­காட்­டல்­க­ளையும், முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் ஐக்­கி­யத்­தையும், முஸ்லிம், முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கு மத்­தியில் சக­வாழ்­வையும் கட்­டி­யெ­ழுப்பும் முயற்­சி­யிலும் ஈடு­பட்டும் வரு­கி­றது.

2000ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க சட்­டத்தின் பிர­காரம் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கூட்­டி­ணைக்­கப்­பட்ட உலமா சபைக்கு நாடளா­விய ரீதியில் பல மாவட்ட, பிர­தேச கிளைகள் உள்­ள­தா­கவும் இதில் 5000க்கும் மேற்­பட்ட ஆலிம்கள் உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வி­டத்­தில்தான் விமர்­ச­னங்­களும், கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. உலமா சபையின் கீழ் இயங்கும் 15 உப குழுக்­க­ளுக்கும் அங்­கத்­த­வர்கள் நிய­மிக்­கப்­ப­டு­கின்­ற­போது அவற்றில் துறைசார் புத்­தி­ஜீ­வி­களும் உறுப்­பி­னர்­க­ளாக உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கைகள் பல வரு­டங்­க­ளாக முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன. ஆனால், இந்த நடை­முறை உலமா சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றதா என்ற கேள்­வியும் தற்­போது எழுப்­பப்­ப­டு­கின்ற இச்­சந்­தர்ப்­பத்தில் பல ஆலோ­ச­னை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஓர் அமைப்பை வழி­ந­டத்­து­வற்கு மும்­மொழி அறிவு மாத்­திரம் போதாது. மாறாக, பல்­துறை அறி­வுசார் நிபு­ணத்­து­வமும், அனு­பவமும், ஆளு­மையும் அவ­சியம். அத்­த­கைய முப்­ப­ரி­மாண திறன்­மிக்­க­வர்கள் உலமா சபையின் உப­கு­ழுக்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு ஏற்ப நிய­மிக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. அத்­துடன், குர்­ஆனும், நபி வழியும் காட்டும் அடிப்­ப­டையில் தலை­மைத்­துவ சபை ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­வதும் காலத்தின் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. விட்­டுக்­கொ­டுப்­புக்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு இச்­ச­பைக்­கான உறுப்­பினர் தெரி­வு­களும், பத­வி­களும், பொறுப்­புக்­களும் வழங்­கப்­பட வேண்டும். சமூக அக்­க­றை­யுள்ள துறைசார் அனு­ப­வமும், ஆளுமைத் திறனும் கொண்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வதும் அவ­சியம். ஏனெனில், நிகழ்­கால மற்றும் எதிர்­கா­லத்தில் சமூகம் எதிர்­நோக்­க­வுள்ள நெருக்­க­டி­க­ளுக்கும், சவால்­க­ளுக்கும் முஸ்லிம் சமூ­கத்தை முறை­யான பொறி­மு­றை­க­ளி­னூ­டாக நெறிப்­ப­­டுத்தி வழி­காட்­டப்­ப­டு­வ­தற்கு துறைசார் அனு­பவம் கொண்­ட­தொரு தலை­மைத்­துவ சபையின் அவ­சியம் இன்­றி­ய­மை­யா­தது என்­பது புரி­த­லுக்­குள்­ளாக வேண்­டி­ய­தாகும்.

ஏப்ரல் 21 இன் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்ற சவால்­க­ளையும், நெருக்­க­டி­க­ளையும் வெற்­றி­கொள்ள உலமா சபை முழு­மூச்­சாக செயற்­பட்­டி­ருக்­கி­றது என்­பது வெளிப்­படை. இருப்­பினும், எதிர்­கா­லத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற செயற்­பா­டுகள் வினைத்­தி­றன்­மிக்­க­தாக அமைய வேண்­டு­மென்ற கோரிக்­கை­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வதும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

இந்­நி­லை­யி­ல்தான். உலமா சபை­யி­னு­ட­னான அனைத்­து­விதப் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் அர­சாங்­கமும் அதி­கா­ரி­களும் உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும். பல உலக நாடு­களின் தடை செய்­யப்­பட்ட இஸ்­லா­மிய அடிப்­படை வாத 4 அமைப்­புக்­க­ளுடன் உலமா சபை தொடர்­பு­களைப் பேணி வரு­கின்­றது. எனவே இவர்­களை அர­சாங்கம் அங்­கீ­க­ரிகக் கூடாது 1956ஆம் ஆண்டில் சிங்­க­ளத்தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்ட குர்­ஆனை இலங்கை வாழ் முஸ்­லிம்கள் பின்­பற்ற வேண்டும். ஒரு கடவுள் என்றால் ஒரு குர்­ஆன்தான் காணப்­பட வேண்டும். இதனை விடுத்து உலமா சபை அடிப்­ப­டை­வா­தத்தை விதைத்தால் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுப்போம். உல­மாக்கள் இங்கு வெளி­யேறும் காலம் வெகு தொலைவில் இல்லை போன்ற பல எச்­ச­ரிக்கைக் கருத்துக்கள் உலமா சபையை நோக்கி கண்டி மாநாட்டில் பாய்ந்துள்ளன.

ஒவ்வொரு சமூகத்திலும் அச்சமூகத்தின் மத, கலாசார செயற்பாடுகள் தொடர்பில் அச்சயமத்தைப் பின்பற்றுகின்ற மக்களை வழிப்படுத்துவதற்கு சபைகளும், அமைப்புக்களும் செயற்படுகின்ற நிலையில் முஸ்லிம்களின் சமய, கலாசார மற்றும் இதர விடயங்களில் தொடர்பில் வழிகாட்டி நெறிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செய்றபாடுகள் தொடர்பில் கடும்போக்காளர்களின் கழுகுப்பார்வை திருப்பப்பட்டுள்ளதன் பின்னணி தொடர்பிலும் உலமா சபையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் சிந்தித்து செயற்பட வேண்டிய சூழலுக்குள் உலமா சபை தள்ளப்பட்டிருப்பதையே கண்டி மாநாட்டில் எதிரொலித்த கருத்துக்கள் சொல்லும் செய்தியாகக் காணப்படுகிறது.

கண்டி மாநாட்டில் மாத்திரமல்ல, அதற்கப்பாலும் உலமா சபை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் உலமா சபையின் மத்திய சபை கூட்டம் நாளை 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் உலமா சபையின் அடுத்த தலைவர் யார்? அல்லது தற்போது தலைமைப் பதவி வகித்து வரும் தலைவரா தொடர்ந்தும் தலைமைப் பதவியை வகிக்கப்போகிறார் என்ற கேள்வி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுப்பப்படும் இச்சந்தர்ப்பத்தில் தலைமைப் பதவிக்காக முரண்பட்ட சமூகம் என்ற அவப்பெயர் எழுந்திடாமல், மாற்றங்களுக்கு முன்னுரிமை வழங்கி, வழிவிட்டு முஸ்லிம்களும், உலமா சபையும் கடும்போக்காளர்களின் கழுகுப்பார்வையிலருந்து விடுபடுவதற்கும் எதிர்நோக்கி யிருக்கின்ற சவால்களை வெற்றி கொள்வதற்கும் உலமா சபையின் மத்திய சபைக் கூட்டம் பிளவுகளின்றி நிறைவுபெற வல்ல இறைவன் துணைபுரிய வேண்டும் என்பதோடு விட்டுக்கொடுப்புடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்’ என்பதும் சமகால கோரிக்கையாகும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.