அப்பாவிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும்

0 725

ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் தீவி­ர­வாத குழுவொன்று மேற்­கொண்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்­லிம்களின் சக­வாழ்வு பாதிப்­புக்­குள்­ளாகி விட்­டது. முஸ்­லிம்­களின் வர்த்­தக நட­வ­டிக்கைள் பெரு­ம­ளவில் வீழ்ச்சி கண்­டு­விட்­டன.

நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­ட­துடன் அச்­சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்­கி­றது. அச்­சட்­டத்தின் கீழ் 2,000 க்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் அநேகர் இன்­னமும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அப்­பாவி முஸ்­லிம்கள் சிறு சிறு கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். இது தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் என்.டி. உடா­கம பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­கி­ர­மா­ரச்­சிக்கு கடிதம் மூலம் சுட்டிக் காட்­டி­யுள்ளார். அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்­றுள்ள சட்­ட­வி­ரோத கைதுகள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கலா­சார புரிந்­து­ணர்­வின்மை நிச்­ச­ய­மற்ற தன்மை கார­ண­மாக சில கைதுகள் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவும் மேலும் சில கைதுகள் பொது மக்கள் வெளிப்­ப­டுத்­திய சந்­தே­கத்தின் பேரில் இடம்­பெற்­றுள்­ளன என்றும் தெரிவித்துள்ளார். உதா­ர­ண­மாக அணிந்­தி­ருந்த ஆடையில் பிரச்­சி­னையை தூண்டும் வகை­யி­லான அடை­யாளம் பொறிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறி ஒரு பெண் கைது செய்­யப்­பட்டார். அரபு நூல்­களை வைத்­தி­ருந்­த­வர்கள் அப்­புத்­த­கங்­களில் என்ன உள்­ள­டங்­கி­யுள்­ளன என உறு­திப்­ப­டுத்த முன்பே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கைதுகள் இடம்­பெற்ற பின்பே விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் பதில் பொலிஸ் மா அதி­பரின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்ளார். வெறும் வதந்­திகள் அடிப்­ப­டையில் கைதுகள் இடம்­பெ­றக்­கூ­டாது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை என்­றாலும் ஒரு குழு­வினர் செய்த தாக்­கு­தல்­க­ளுக்­காக முழு முஸ்லிம் சமூ­கமும் பலிக்­க­டா­வாக்­கப்­ப­டக்­கூ­டாது. இதற்கு இட­ம­ளிக்­கவும் முடி­யாது.

நியூ­யோர்க்கைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கமும் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தன்­னிச்­சை­யான கைதுகள் மற்றும் ஏனைய துஷ்­பி­ர­யோ­கங்­களை இலங்கை அதி­கா­ரிகள் முடி­வுக்குக் கொண்டு வர வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யி­ருந்த நிலையில் அதன் பின்பு இலங்கை முஸ்­லிம்கள் வன்­மு­றை­களை எதிர்­கொண்­டுள்­ளனர். அவர்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­ப­டு­வது அதி­க­ரித்­துள்­ளது. தாக்­கு­தல்கள் மற்றும் இதர துஷ்­பி­ர­யோ­கங்­களை பௌத்த தேசி­ய­வா­தி­க­ளி­ட­மி­ருந்து எதிர்­நோக்­கி­யுள்­ளனர். இலங்கை அதி­கா­ரி­களும் அர­சி­யல்­வா­தி­களும் வெறுப்­பு­ணர்வு பேச்சை பயன்­ப­டுத்தல், கல­கக்­கா­ரர்­களின் வன்­மு­றை­களை அலட்­சி­யப்­ப­டுத்தல், அங்­கீ­க­ரித்தல் என்­ப­ன­வற்றை நிறுத்த வேண்டும் என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தனது அறிக்­கையில் கோரி­யுள்­ளது.

இலங்கை அர­சாங்கம் தனது பிர­ஜை­களைப் பாது­காத்தல் மற்றும் ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்­களை விசா­ரணை செய்தல் போன்ற கட­மையைக் கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் இந்த குற்றச் செய­லுக்­காக முஸ்லிம் சமூ­கத்தை தண்­டிக்கக் கூடாது என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் தெற்­கா­சி­யா­வுக்­கான பணிப்­பளார் மீனாட்சி கங்­குலி தெரி­வித்­துள்­ள­மையை இலங்கை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு மற்றும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் என்­பன அர­சாங்­கத்தின் தன்­னிச்­சை­யான கைதுகள் மற்றும் செயற்­பா­டுகள் தொடர்பில் விடுத்­துள்ள பரிந்­து­ரை­களை அர­சாங்கம் கவ­னத்திற் கொள்ள வேண்டும். கைது செய்­யப்­பட்­டுள்ள அப்­பாவி முஸ்­லிம்கள் மேலும் தாம­த­மின்றி விடு­விக்­கப்­பட வேண்டும்.

தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மீதும் பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. அவர்கள் சமூ­கத்தின் பாது­காப்பு கருதி தங்கள் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­ட­துடன் தங்கள் மீதான குற்­றச்­சாட்­டு­களை நிரூ­பிக்­கு­மாறு சவால் விட்­டனர். முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஆதாரம் எதுவும் இல்லை என பதில் பொலிஸ் மா அதிபர் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வுக்கு அறி­வித்­துள்ளார். இதேவேளை, ஏனையோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

டாக்டர் ஷாபிக்கு எதிரான கருக்கலைப்பு குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் என்று கூறி ஆதாரமற்ற தன்னிச்சையான கைதுகளை மேற்கொள்ளக் கூடாது. குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டுமே தவிர அப்பாவிகள் கைது செய்யப்படக் கூடாது். தற்போது தடுப்பில் இருக்கும் அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.