குனூத் அந்நாஸிலாவை தொடர்ந்தும் ஓதுங்கள்

ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை

0 578

ஏப்ரல் 21 ஆம் திகதி நடை­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலைத் தொடர்ந்து நாட்டில் உரு­வான அசா­தா­ரண நிலை நீங்கி நாட்டு மக்­க­ளுக்கு மத்­தியில் சாந்­தியும், சமா­தா­னமும் மேலும் ஐக்­கி­யமும் ஏற்­பட ஐவேளைத் தொழு­கை­யிலும் குனூத் அந்­நா­ஸி­லாவை ஓதி­வ­ரு­கின்றோம்.

இதனை தொடர்ந்தும் சுருக்­க­மாக ஓதி வரு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா கோரிக்கை விடுத்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பத்வாக் குழு செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம் இல்யாஸ் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், அல்­லா­ஹு­த­ஆலா அடி­யார்­க­ளுக்கு சோத­னை­களை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் அவர்கள் தன்­பக்கம் திரும்ப வேண்டும் என்­ப­தையே விரும்­பு­கின்­கிறான். இச்­சோ­த­னைகள் நீங்­கு­வ­தற்­காக நாம் மேற்­கொள்ளும் துஆ, திக்ர், தொழுகை, நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்­ல­மல்­களை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

எனவே, நாம் தொடர்ந்தும் அந்த அமல்­களைச் செய்து அவன் பக்கம் நெருங்­கு­வ­துடன், இந்­நாட்டு மக்கள் அனை­வரும் சமா­தா­னத்­து­டனும், சாந்­தி­யு­டனும் மேலும் ஐக்­கி­யத்­து­டனும் வாழ்­வ­தற்குப் பிரார்த்­த­னையும் செய்வோம்.
அத்­தோடு ஓதி­வரும் குனூத் அந்­நா­ஸி­லாவில் பாவ­மன்­னிப்புக் கோரு­த­லுடன் பின்­வரும் துஆக்­களை ஓதி குனூத்தை சுருக்கிக் கொள்ளுமாறு தொழுகை நடாத்தும் இமாம்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.