சர்வாதிகாரத்தை தடுக்கும் 19 அவசியமே

0 601

அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 18 ஆவது திருத்­தமும் 19 ஆவது திருத்­தமும் நாட்­டிற்கு சாபக்­கேடு என்றும் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் 19 ஆவது திருத்தம் நடை­மு­றை­யி­லி­ருந்து நீக்கப்­பட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த ஜூன் 26 ஆம் திகதி தெரி­வித்தார். ஊடக பிர­தா­னி­களை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டும்­போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு கவலை வெளி­யிட்­டுள்ளார். ஜனா­தி­பதி இந்த அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 19 ஆவது திருத்தம் குறித்து மன­மு­டைந்து விரக்தி நிலையில் இருந்து வரு­வதன் வெளிப்­பாடே இவ்­வாறு பகி­ரங்­க­மாக அதுவும் ஊடக பிர­தா­னிகள் முன்­னி­லையில் தெரி­விக்க கார­ண­மா­கின்­றது.

பொது­வாகப் பார்க்­கின்­ற­போது ஜனா­தி­பதி, அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 19 ஆவது திருத்தம் தொடர்­பாக ஏன் இந்­த­ள­விற்கு வெறுப்­பிலும் விரக்­தி­யிலும் இருக்­கின்றார் என்று பார்த்தால் அதற்குப் பல கார­ணங்கள் இருக்­கின்­றன. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும் அவரால் நினைத்த எதையும் தன்­னிச்­சை­யாக அதி­காரம் என்ற பெயரில் செய்­து­கொள்ள முடி­யாத இக்­கட்­டான நிலை இருந்து வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 19 ஆவது திருத்­தத்தை தவ­றான முறையில் பயன்­ப­டுத்த முயற்சி செய்ய முடி­யாத நிலையில் தோல்­வியை ஏற்­க­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அதுவே 19, நாட்­டிற்கு சாபக்­கே­டாகத் தெரி­வ­தற்கு கார­ண­மா­கின்­றது.

2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி மக்­க­ளாணை மூலம் பத­விக்கு வந்த ஐ.தே.க. தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ள­டங்­க­லாக 2018 ஒக்­டோபர் 26 ஆம் திகதி பல­வந்­த­மாகப் பதவி நீக்­கினார். ஆனால் இந்த செயற்­பாட்டை நிரா­க­ரித்த ஐ.தே.க.வின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அவர் தலைமை­யி­லான அமைச்­ச­ர­வையும் அவர்கள் இருந்த இடத்தை விட்டு ஒரு அங்­கு­லமும் நக­ர­வில்லை. பதவி நீக்­கப்­பட்ட பிர­த­மரும் அவ­ரது அமைச்­ச­ர­வையும் அல­ரி­மா­ளி­கையை விட்டு வெளி­யேற மஹிந்த அணி 72 மணித்­தி­யால கால அவ­கா­சத்தை அறி­வித்­தது. அவ்­வாறு வெளி­யேறத் தவ­றினால் மக்கள் படை­யுடன் சென்று பல­வந்­த­மாக வெளி­யேற்­று­வ­தாக சபதம் விடப்­பட்­டது. ஆனாலும் அலரி மாளி­கையை விட்டு வெளி­யே­ற­வில்லை. இக்­கட்­டான நிலையில் மாட்­டிய ஜனா­தி­பதி 14 நாட்­களின் பின்னர் விஷேட வர்த்­த­மானி அறி­வித்­த­லூ­டாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­த­லுக்கு அறி­வித்தல் செய்தார்.

ஜனா­தி­ப­தியால் பிர­த­ம­ராக நிய­மி­க்கப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவும் அமைச்­சர்­களும் அர­சாங்­கத்தை நடத்த காத்­தி­ருந்த நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மீண்டும் பத­வியில் நிய­மிக்கும் நிலை ஏற்­பட்டால் அடுத்த நிமி­டமே பதவி வில­குவேன் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சவால் விட்டார். அதுவும் விட்­டுக்­கொ­டுக்­காத ரணில் தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை உயர் நீதி­மன்­றத்தின் தயவை நாடி­யது. கடை­சியில் ஜனா­தி­பதி ஐ.தே.க. அர­சாங்­கத்தை பதவி நீக்­கி­யமை, தன்­னிச்­சை­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தமை அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தை மீறும் செய­லென்று உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

இறு­தியில் பிர­தமர் ரணில் தலை­மை­யி­லான ஐ.தே.க. அர­சாங்­கத்தை மீண்டும் நிய­மிக்கும் நிலை ஏற்­பட்­ட­தோடு அது­வ­ரையில் மைத்­தி­ரி­பால சிறி­சேன அனு­ப­வித்து வந்த 23 அமைச்­சர்­களைக் கொண்ட ஸ்ரீல.சு.கட்­சியை இணைத்த கூட்­டாட்­சி­யையும் இழந்தார். அதன்­பின்னர் உயர் பத­வி­யி­லி­ருந்த அதி­காரி ஒரு­வரை ஜனா­தி­பதி பதவி நீக்­கி­ய­போது அந்தப் பதவி நீக்கம் அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணான செயல் என்று அர­சி­ய­ல­மைப்பு பேரவை தெரி­வித்து பதவி நீக்­கி­ய­வரை மீண்டும் பத­வியில் அமர்த்­தி­யது.

2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்­பாக விசா­ரணை செய்ய நிய­மிக்­கப்­பட்ட, அவ்­வாறே தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்­கின்ற பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை உடன் நிறுத்­தா­விட்டால் இனி ஒரு­போதும் அமைச்­ச­ரவை கூட்­டங்­களை நடத்­து­வ­து­மில்லை, அமைச்­ச­ரவை கூட்­டத்­திற்கு வரு­வ­து­மில்லை என்று 2019 ஜூன் 07 ஆம் திகதி இரவு 8.00 மணி­ய­ளவில் அவ­சர அமைச்­ச­ரவைக் கூட்­ட­மொன்றை நடத்தி ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்­திற்கு சவால் விடும் வகையில் எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருந்தார். ஆனாலும் ஒரு வாரத்தின் பின்னர் ஐ.தே.க. அமைச்­ச­ர­வையின் முன்­னி­லையில் மண்­டி­யிடும் வகையில் வந்து அமைச்­ச­ரவை கூட்­டத்தை நடத்­தினார். ஜனா­தி­ப­தியின் எதிர்­பார்ப்­பின்­படி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்த பின்னர் நிறுத்த முடி­யாது. அதற்கும் பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­காரம் வேண்டும். அதனால் அந்த விட­யத்­திலும் ஜனா­தி­ப­தியின் எதிர்­பார்ப்­புக்கு 19 தடை­யாக அமைந்­தது.

அதே­போன்று நிய­ம­னங்கள் விடயம், பொலிஸ்மா அதி­பரை பதவி நீக்க எடுத்த நட­வ­டிக்கை என்று பல விட­யங்­களில் ஜனா­தி­பதி முட்டி மோதிக்­கொண்­டுள்ளார். இந்­நி­லையில் பார்க்­கும்­போது ஜனா­தி­ப­திக்கு இந்த அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 19 ஆவது திருத்தம் மனத்­தாங்­க­லையும் விரக்­தி­யையும் ஏற்­ப­டுத்­தா­ம­லி­ருக்க முடி­யாது. அத­னால்தான் இந்­த­ள­விற்கு விரக்­தி­ய­டைந்­துள்ளார். ஆனால், இவர் 2014 ஆம் ஆண்டு பொது வேட்­பா­ள­ராக ஐ.தே.க. வால் நிய­மிக்­கப்­பட்ட போது வழங்­கிய வாக்­கு­று­தி­களில் இந்த 19 மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அதற்­காக இதே ஜனா­தி­பதி எடுத்த முயற்­சி­களை பின்­னோக்கிப் பார்த்தால் அவ­ரது அன்­றைய தேவை எவ்­வா­றி­ருந்­தது என்­பது புல­னா­கின்­றது.
அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 19 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக சமர்ப்­பித்து 2015 ஏப்ரல் 28 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­ய­போது கூற­ய­தா­வது. “உலகில் எந்த ஆட்­சி­யா­லா­வது ஜனா­தி­பதி ஒருவர் தமக்­கி­ருக்­கின்ற அதி­கா­ரங்­களை குறைத்துக் கொள்­வ­தற்கு இணங்­கிய வர­லாறு இருக்­கின்­றதா? அந்­த­ள­விற்கு நான் மிகவும் வெளிப்­ப­டை­யாக நடந்­து­கொள்­கின்றேன். ஏற்­க­னவே பல சந்­தர்ப்­பங்­களில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தை கூட்­டிக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால் நானோ அதற்கு மாற்­ற­மாக செயற்­ப­டு­கின்றேன். இதனை கருத்­தி­லெ­டுத்து அர­சி­ய­ல­மைப்­பிற்­கான இந்த திருத்­தத்­திற்கு முரண்­பா­டு­களை மறந்து ஆத­ரவு வழங்க வேண்டும்” என்ற வேண்­டு­கோளை முன்­வைத்தார்.

இந்த 19 நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்னர் பல்­வே­று­வி­த­மான முறைப்­பா­டு­களும் விமர்­ச­னங்­களும் இருந்து வந்­தன. 19 ஆவது திருத்தம் 2015 மார்ச் 24 இல் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது உயர் நீதி­மன்­றத்தில் 19 மனுக்கள் சமர்ப்­பிக்ப்­பட்­டி­ருந்­தன. அவற்றுள் 14 மனுக்கள் 19 இற்கு எதி­ராக செய்­யப்­பட்ட மனுக்­க­ளாகும். அந்த 14 மனுக்­க­ளையும் பரி­சீ­லனை செய்த கே. ஸ்ரீபவன் தலை­மை­யி­லான உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றவும் சில பிரி­வு­களை திருத்தம் செய்­யவும் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. அத்­துடன் அன்று நிலை­மைய சரி­யாகப் புரிந்­து­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அப்­போது முன்­வைக்­கப்­பட்ட திருத்­தங்­களை சமர்ப்­பிக்­கவும் அதனைப் பரி­சீ­லிக்­கவும் பாரா­ளு­மன்­றத்தில் ஆறு­பேர்­களைக் கொண்ட ஒரு குழுவை நிய­மித்தார். அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், அஜித் பெரேரா ஆகி­யோரும் எம்­பிக்­க­ளான எம். சுமந்­திரன், அனுர பிரி­ய­தர்­சன யாப்பா, ரஜீவ விஜே­சிங்க மற்றும் பைசர் முஸ்­தபா ஆகியேர் அந்தக் குழுவில் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்­கட்சி தரப்பில் இருந்து 174 திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. உயர் நீதி­மன்­றத்தின் பரிந்­து­ரையின் பின்னர் ஆளும் கட்சி தரப்பால் 63 திருத்­தங்­களும் எதிர்க்­கட்சி தரப்பால் 111 திருத்­தங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன. இவற்றைப் பரி­சீ­லனை செய்து வாக்­கெ­டுப்பு நடை­பெற்ற 2015 ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு முன்னர் குழுவின் சமர்ப்­பணம் முன்­வைக்­கப்­பட வேண்­டு­மென்று ஜனா­தி­ப­தியால் கோரப்­பட்­டது. ஆனாலும் வாக்­கெ­டுப்பு நடை­பெற்ற செவ்­வா­யன்று மாலை 6.00 மணி­யா­கியும் முடிவு எட்­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. பின்னர் 6.00 மணிக்கு முடி­வ­டை­ய­வி­ருந்த விவாதம் மேலும் ஒரு மணித்­தி­யா­லத்தால் நீடிக்­கப்­பட்டு திருத்தம் முன்­வைத்­த­வர்­க­ளான மஹிந்த தரப்பு மற்றும் ஜனா­தி­ப­தி­யான மைத்­தி­ரி­பால சிறி­சேன தரப்பு சுதந்­திரக் கட்­சி­யி­ன­ரோடு பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு குறிப்­பிட்ட முக்­கி­ய­மான இரண்டு திருத்­தங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்னர் நிலைமை சாத­க­மாக மாறி­யது. இறு­தியில் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 212 வாக்­கு­களும் எதி­ராக 01 வாக்கும் பதி­வா­கி­யது. எவ்­வா­றா­யினும் 10 உறுப்­பி­னர்கள் சபையில் பிர­சன்­ன­மாகி இருக்­க­வில்லை. இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் இந்­த­ளவு ஆத­ர­வுடன் நிறை­வே­றிய ஒரு மசோ­தா­வாக 19 ஆவது திருத்தம் அமை­கின்­றது.

இவ்­வாறு மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகவும் அர்ப்­ப­ணிப்­புடன் நிறை­வேற்­றிய 19 இன்று அதே ஜனா­தி­ப­திக்கு நாட்டின் சாபக் கேடா­கவும் அதனை நீக்­கா­த­வ­ரையில் நாட்டை முன்­னேற்ற முடி­யாது என்ற நிலையும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்­நி­லைக்கு பிர­தான காரணம் நிறை­வேற்று அதி­காரம் என்ற பெயரில் தனி நபர் ஒருவர் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சர்­வா­தி­கா­ரி­யாக மாறும் நிலைக்கு 19 ஆவது திருத்­தத்தில் தடை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 19 இன்­படி பத­விக்­கு­வரும் அர­சாங்கம் ஒன்று ஒரு­வ­ருடம் பூர்த்­தி­ய­டைந்த எந்த சந்­தர்ப்­பத்­திலும் ஜனா­தி­பதி நினைத்தால் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்­தலாம் என்ற நிலை இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் 19 இற்கு முன்னர் இருந்த ஒரு வருட நிறைவில் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடியும் என்ற அதி­கா­ரத்தை வைத்தே 2004 ஆம் ஆண்டு சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா குமா­ர­துங்கா அப்­போ­தைய ஐ.தே.க. ஆட்­சியை கவிழ்த்தார். அந்த அதி­காரம் கார­ண­மாக ஜனா­தி­பதி வேறு கட்சி, பிர­த­மரும் அமைச்­ச­ர­வையும் கொண்ட அர­சாங்கம் வேறு கட்சி என்ற நிலையில் ஆட்சி அமைந்தால் அர­சியல் ஸ்திர­மற்ற நிலை உரு­வாகி அடிக்­கடி தேர்தல் நடத்­தப்­ப­டு­கின்ற நிலை ஏற்­ப­டு­கின்­றது.

இந்­நி­லை­மை­களைக் கவ­னத்தில் எடுத்தே 19 இல் பத­விக்கு வரு­கின்ற அர­சாங்கம் அதன் முத­லா­வது கூட்­டத்தை நடத்தும் தினத்தில் இருந்து நான்­கரை வரு­டங்கள் (4 ½) நிறை­வ­டையும் வரையில் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது என்று 70(1) சேர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவ்­வாறே ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் 06 வரு­டங்கள் என்­றி­ருந்­தது 05 ஆக குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் அரச பதவி நிய­ம­னங்கள், பதவி நீக்கம் தொடர்­பாக கவனம் செலுத்த 10 சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தோடு அர­சி­ய­ல­மைப்பு பேர­வையும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஏனைய திருத்­தங்­க­ளாக அர­சி­ய­ல­மைப்பின் பிரி­வு­க­ளான 30, 31, 33, மற்றும் 33அ என்­ப­வை­க­ளாக அமை­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பின் 07 ஆம் அத்­தி­யத்­திற்கு புதிய இணைப்பு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­படும் போது ஜனா­தி­பதி பிர­த­மரின் அறி­வு­ரைக்­க­மைய அமைச்­ச­ர­வையை நிய­மிப்பார் என்று இருந்த பிரிவை பிர­த­ம­ரிடம் வின­விய பின்னர் என்று திருத்தம் செய்­யு­மாறும் எதிர்க்­கட்­சி­யினர் அப்­போது வேண்டிக் கொண்­டனர். இறு­தியில் அவ்­வாறே திருத்தம் செய்ய வேண்­டி­யேற்­பட்­டது. அத்­துடன் அமைச்­ச­ர­வையின் தலைவர் பிர­தமர் என்ற விட­யமும் உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

10 சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் கார­ண­மாக அரச நிர்­வாக மற்றும் உயர் பத­விகள் அனைத்தும் அர­சியல் மயப்­ப­டுத்­த­லி­லி­ருந்து பாது­காக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. தேர்தல் ஆணைக்­குழு, பொதுச் சேவைகள் ஆணைக்­குழு, தேசிய பொலிஸ் ஆணைக்­குழு, கணக்­காய்வு சேவை ஆணைக்­குழு, மனித உரி­மைகள் ஆணைக்­குழு என்­பன அந்த 10 ஆணைக்­கு­ழுக்­களில் முக்­கி­ய­மான 05 ஆணைக்­கு­ழுக்­க­ளாகும். அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­க­னவே நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்த அமைப்­பிற்­கான 17 ஆவது திருத்­தத்தில் இவை உட்­ப­டுத்­தப்­பட்­ட­வை­க­ளாக இருந்­தாலும் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 18 ஆவது திருத்­தத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் அவை நீக்­கப்­பட்­ட­வை­க­ளாகும்.

19 இல் உள்ள அர­சி­ய­ல­மைப்பு பேரவை கார­ண­மாக 2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டு தாக்­கு­தலின் பின்னர் பத­வி­யி­லி­ருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­தரவை ஜனா­தி­ப­தியால் பதவி நீக்­கி­விட முடி­ய­வில்லை. அதனால் அவரை கட்­டாய லீவில் அனுப்­பி­விட்டு ஜனா­தி­பதி அவ­ருக்குத் தேவை­யான ஒரு­வரை பொலஸ்மா அதி­ப­ராக நிய­மித்­துள்ளார். இவ்­வாறு பார்க்­கும்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சி­ய­ல­மைப்பை மீறும் வகையில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை பல சந்­தர்ப்­பங்­களில் பயன்­ப­டுத்த முற்­பட்­ட­போதும் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளுக்கும் இந்த 19 ஆவது திருத்தம் தடை­யாக அமைந்­தி­ருக்­கின்­றது. 19 ஆவது திருத்­தத்தில் ஜனா­தி­ப­தியின் அதி­காரம் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால் 2016 ஆம் ஆண்டே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.தே.க. ஆட்­சியை கவிழ்த்து பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தி­ருப்பார். ஆனாலும் முடி­ய­வில்லை.

இவ்­வாறு பார்க்­கின்­ற­போது அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 19 ஆவது திருத்தம் சாபக்­கே­டாக அமைந்­தி­ருப்­பது நாட்­டிற்­கல்ல. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்­கே­யாகும். எந்த வகை­யிலும் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 19 ஆவது திருத்தம் நீக்­கப்­ப­டக்­கூ­டாது. நடை­மு­றைக்கு அவ­சி­ய­மான திருத்­த­மாகும். நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு 19ஐ நீக்க வேண்­டிய தேவை எதுவும் தற்­போ­தைக்கு இல்லை. செய்ய வேண்­டி­யது ஐ.தே.க. அர­சாங்­கத்­தோடு பத­விக்கு வந்த காலம் முதல் இன்று வரையில் கடைப்­பி­டித்து வரும் முரண்­பாட்டு அர­சியல் நிலை­யையும் சுய­நல அர­சியல் போக்­கையும் கைவிட்டு இணங்கி போயி­ருந்தால் நாடு அபி­வி­ருத்தி அடைந்­தி­ருக்கும். ஏப்ரல் 21 தற்­கொலைத் தாக்­கு­த­லுக்­கு­கூட இத்­த­கைய அர­சியல் ரீதி­யான முரண்­பா­டு­களே கார­ண­மென்ற குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

தற்­போ­தைய நிலையில் அவ­ருக்குத் தேவைப்­பட்­டி­ருப்­பது பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தாகும். ஏதா­வ­தொரு வகையில் ஜனா­தி­பதித் தேர்­தலை இழுத்­த­டிப்­ப­தாகும். ஆனால் அதற்கு முட்­டுக்­கட்­டை­யாக இருந்து வரு­வது 19 என்­பதால் அதனை சாபக் கேடா­கவும் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தடை­யா­கவும் காட்டி நாட்டில் மற்­றொரு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்த முயற்சி செய்­கின்றார் என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. 18 ஆவது திருத்தம் பற்றி இப்­போது பேச வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. 19 நிறை­வேற்­றப்­பட்­ட­துடன் 18 செல்லுபடியற்றதாக்கப்பட்டது. அதில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் இரண்டு முறைக்கு மேலும் எத்தனை தடவையும் ஜனாதிபதியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் பதவி வகிக்கலாம் என்ற திருத்தம் உட்படுத்தப்பட்டிருந்ததால் அந்தப் பிரிவு நீக்கப்பட்டது.

அதனால் தற்போதிருப்பது 19 ஆவது திருத்தமாகும். இந்நிலையில் பார்க்கின்றபோது 19ஐ நீக்க எடுக்கும் ஜனாதிபதியின் முயற்சி கண்மூடித்தனமான ஒன்றென்றே கூறவேண்டும். 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதால் நிறைவேற்று அதிகாரத்தை சர்வாதிகாரி போன்று பயன்படுத்தி பதவி வகிக்கும் ஜனாதிபதி நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளமுடியும். அதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது. 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பு ஏற்பட்டுத்தப்பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகம் செய்யப்பட்டபோது மாக்சிஸ இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இந்த ஜனாதிபதி முறை நாட்டிற்கு பாதகமானது என்ற குற்றச்சாட்டாகும். ஆனாலும் அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் 37 வருடங்களாக இந்த முறையில் ஒரு திருத்தத்தை செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. ஆனாலும் ஜனாதிபதியின் அதிகார குறைப்பு என்ற அடிப்படையில் 2015 ஏப்ரலில் பதவியிலிருந்த ஜனாதிபதியே தம்மிடம் குவிந்திருக்கும் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்று முன்வந்ததால் அது சாத்தியமானது.

ஆனால் தற்போதைய நிலையில் அதே அதிகாரத்தை தமக்கு தேவையான முறையில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டபோது அதற்கு 19 ஆவது திருத்தம் தடையாக இருப்பதால் அதனை நீக்க வேண்டுமென்ற தேவை ஏற்படுத்தப்படுவதால் மக்களே இறைமையுள்ளவர்கள் என்ற முறையில் 19ஐ நீக்குவதற்கு எதிரான அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கின்றது.

எம்.எஸ். அமீர் ஹுசைன்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.