தங்கொட்டுவ வாராந்த சந்தையில் சகலரும் வியாபாரத்தில் ஈடுபடலாம்

மாரவில நீதிமன்ற நீதிவான் சுட்டிகாட்டு

0 540

தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் அனைத்து இனத்­தினைச் சேர்ந்த வியா­பா­ரி­களும் எவ்­வித தடை­க­ளு­மின்றி தங்­க­ளது வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யு­மென கடந்த வெள்­ளிக்­கி­ழமை மார­வில நீதி­வானும் மேல­திக மாவட்ட நீதி­ப­தி­யு­மான கேமிந்த பெரேரா உத்­த­ர­விட்­டுள்ளார்.

வென்­னப்­புவ பிர­தேச சபையின் தலைவர் சுசந்த பெரே­ரா­வினால் தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் முஸ்லிம் வியா­பா­ரிகள் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்குத் தடை விதித்­தமை தொடர்­பான வழக்கு விசா­ரணை கடந்த வெள்­ளிக்­கி­ழமை மார­வில நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­ற­போதே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதை தற்­கா­லி­க­மாகத் தடை செய்­யு­மாறு உத்­த­ர­விட்டு வென்­னப்­புவ பிர­தேச சபையின் தலைவர் கே. வி. சுசந்த பெரே­ரா­வினால் தங்­கொட்­டுவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு கடந்த திங்­கட்­கி­ழமை எழுத்து மூல­மாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் கிடைத்த முறைப்­பாட்­டை­ய­டுத்து தங்­கொட்­டுவ பொலிஸார் இது தொடர்பில் மார­வில நீதி­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தனர். இத­னைத்­தொ­டர்ந்து வென்­னப்­புவ பிர­தேச சபையின் தலைவர் உள்­ளிட்ட ஆறு பேருக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை மார­வில நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறு நீதி­மன்­றத்­தினால் அழைப்­பாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த வழக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை மார­வில நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது அடுத்த மாதம் 23ஆம் திகதி இது தொடர்பில் எழுத்து மூல­மான வாதங்­களைச் சமர்ப்­பிக்­கு­மாறு இரு தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் நீதிவான் உத்­த­ர­விட்டார். அன்­றைய தினம் இவ்­வ­ழக்கை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­வதா இல்­லையா என்­பது தொடர்பில் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் நீதிவான் தெரிவித்தார். இதன் போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட ஆறு பேரும் எவ்வித பிணையுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

(மது­ரங்­குளி நிருபர்)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.