அடிப்படைவாதத்தை தடைசெய்ய மகஜர்

பொதுபலசேனா கையளிக்க தீர்மானம்

0 600

அரபுக் கல்­லூ­ரிகள், தௌஹீத் பள்­ளி­வா­சல்கள், காதி நீதி­மன்­றங்கள் மற்றும் ஹலால் விவ­காரம் உட்­பட முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு அவற்றைத் தடை­செய்­யு­மாறு அர­சாங்­கத்­திடம் மகஜர் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்தத் தீர்­மா­னங்கள் எதிர்­வரும் 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி தலதா மாளிகை திடலில் நடை­பெ­ற­வுள்ள பிக்­குகள் மாநாட்டில் மேற்­கொள்ள வுள்­ள­தா­கவும் பொது­ப­ல­சேனா அமைப்பு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்கப் பட்­டுள்­ளது.

இந்த பெளத்த குரு­மார்­களின் மாநாட்டில் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட பொது­மக்­களும் 10 ஆயிரம் பௌத்த குரு­மாரும் கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் இன ரீதி­யான சட்­டங்­க­ளுக்குத் தடை­வி­தித்து நாட்டு மக்கள் அனை­வரும் ஒரு­மித்த ஒரு சட்­டத்தின் கீழ் ஆளப்­ப­டு­வ­தற்கு மகஜர் தயா­ரித்து பொது­மக்­க­ளி­னதும், பௌத்த குரு­மார்­க­ளி­னதும் கையொப்­பங்கள் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

கண்டி தல­தா­மா­ளிகைத் திடலில் இந்த மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளதால் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமை­வ­துடன் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தா­கவும் அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை பொது­ப­ல­சே­னா­வினால் ஏற்­பாடு செய்­துள்ள இம்­மா­நாடு முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌஸி கடந்த வியா­ழக்­கி­ழமை தனது பாரா­ளு­மன்ற உரையின் போது தெரி­வித்­துள்ளார். அவ­ச­ர­கால சட்­டத்தை முழு­மை­யாக மீறி நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்­டுக்கு எதி­ராக பாது­காப்புத் தரப்­பினர் இது­வரை எவ்­வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் போது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் மாநாடு தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.