கல்முனை தமிழ் பிரதேச செயலக கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பொதுபலசேனா அமைப்பும் ஆதரவு

0 470

கல்­முனை வடக்கு தமிழ்ப் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­மாறு கோரி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள கல்­முனை சுபத்­திரா ராமய விகா­ரையின் விகா­ரா­தி­பதி ரன்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரரை தொடர்­பு­கொண்டு அவ­ரது உடல் நலம் குறித்து கேட்­ட­றிந்­த­துடன் போராட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

கல்­முனை வடக்கு தமிழ்ப் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு இரு நாள் கால அவ­காசம் வழங்­கு­வ­தா­கவும் இல்­லையேல் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் கடந்த 17 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு கல்­முனை வடக்கு தமிழ்ப் பிர­தேச செய­ல­கத்­துக்கு முன்னால் ஆரம்­பிக்கப் பட்­டது. இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் கல்­முனை சுபத்­திரா ராமய விகா­ரையின் விகா­ரா­தி­பதி ரண்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர், கிழக்­கி­லங்கை இந்து குருமார் ஒன்­றி­யத்தின் தலைவர் ஸ்ரீ.க.கு. சச்­சி­தா­னந்­த­சிவம் குருக்கள், பெரிய நீலா­வணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவா­லய பாதி­ரியார் அருட் தந்தை தங்­க­மணி கிரு­பை­நாதன் ஆகி­யோரும் கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­னர்­க­ளான அழ­கக்கோன் விஜ­ய­ரத்­தினம், சா.சந்­தி­ர­சே­கரம் ராஜன் ஆகி­யோரும் ஈடு­பட்­டுள்­ளனர்.

கல்­முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.