அஸாத்சாலி, றிஸ்வி முப்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்புகிறோம்

தெரி­வுக்­குழுவிடம் வாய்ப்பு கோருகிறது எஸ்.எல்.ரி.ஜே

0 688

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ம­ளிப்­ப­தற்கு பிர­தி­ச­பா­நா­ய­கரும் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ரு­மான ஆனந்த குமா­ர­சி­ரி­யிடம் அனு­மதி கோரி­யுள்­ளது. இவ்­வாறு அனு­மதி கோரி ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா­அத்தின் தலைவர் ஏ.கே.ஹிசாம் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ரான ஆனந்த குமா­ர­சி­ரிக்கு கடி­த­மொன்­றினை அனுப்­பி­வைத்­துள்ளார்.

குறிப்­பிட்ட கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரணை நடாத்­தி­வரும் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்த முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத்­சா­லியும், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்­தியும் தவ­றான தக­வல்­களை வழங்­கி­யுள்­ளார்கள். உண்­மைக்கு மாற்­ற­மான கருத்­து­களை வெளி­யிட்­டி­ருக்­கி­றார்கள். அத்­தோடு எமது நட்­பு­றவு அமைப்­பான தமிழ்­நாடு தெளஹீத் ஜமாஅத் தொடர்­பிலும் தவ­றான கருத்­து­களைத் தெரி­வித்­துள்­ளார்கள். அவர்கள் இரு­வ­ரதும் குற்­றச்­சாட்­டு­களை நாம் முழு­மை­யாக மறுக்­கிறோம்.

அசாத் சாலியும், ரிஸ்வி முப்­தியும் முன்­வைத்­துள்ள பொய்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதில் வழங்­கு­வ­தற்­கா­கவும், அவை ஆதார பூர்­வ­மற்­றவை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கா­கவும் எமது அமைப்பின் பிரதிநிதிகளுக்கு தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.