முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பில்லாத பெரும் அச்ச சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது

இராஜினாமா குறித்து அறிவிக்கும் மாநாட்டில் ஹக்கீம்

0 591

இன்று நாடு பாரிய அனர்த்­தத்­திற்கு தள்­ளப்­படும் அபா­ய­நிலை உரு­வா­கி­யுள்­ளது. எமது மக்­க­ளுக்கு உரிய பாது­காப்பு இல்­லாத அச்ச சூழல் உரு­வாகி வரு­கின்­றதை எம்மால் தெளி­வாக உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்­சர்கள் சிலர் மீது தொடர்ச்­சி­யாக அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்ற நிலை­யிலும் அவர்கள் பத­வி­வி­லக வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அனை­வரும் நேற்று காலையில் கூடி ஆராய்ந்­த­துடன் நண்­பகல் அளவில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து தமது நிலைப்­பாட்­டினை தெரி­வித்­துள்­ளனர். அதன் பின்னர் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அனை­வ­ரு­மாக நேற்று பிற்­பகல் அல­ரி­மா­ளி­கையில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்­தினர்.

இது­கு­றித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரி­விக்­கையில்.

தற்­போ­துள்ள நெருக்­கடி நிலை­மையை அடுத்து முஸ்லிம் பிர­தி­நி­திகள் மீது  குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு வரு­கின்ற நிலையில் இது­கு­றித்து  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் அனை­வ­ரு­டனும் நீண்ட கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை நடத்­தினோம். அத­னை­ய­டுத்து அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள், இரா­ஜங்க அமைச்­சர்கள் என அனை­வரும் எமது பத­வி­களை துறக்கத் தீர்­மானம் எடுத்­துள்ளோம். இந்த தீர்­மானம் எவ­ரதும் அழுத்­தத்தின் கார­ண­மாக எடுக்­க­வில்லை. மாறாக தற்­போ­துள்ள நிலை­மையை கையாள எமக்­குள்ள வழி­மு­றை­யையே நாம் கையாண்­டுள்ளோம். அனைத்து முஸ்லிம் பிர­தி­நி­திகள் ஒன்­றி­ணைந்தே இந்த தீர்­மா­னத்தை எடுத்­துள்ளோம். குறிப்பாக் கடந்த 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்­கு­த­லை­ய­டுத்து அது குறித்த விசா­ர­ணை­களை சுயா­தீ­ன­மாக நடத்­த­வி­டாது தடுக்க அமைச்­சர்கள் சிலர் தடை­யாக உள்­ள­தா­கவும் இந்த செயற்­பா­டு­களில் முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் தொடர்­புகள் இருப்­ப­தா­கவும் ஒரு சில அமைப்­புகள் குற்றம் சுமத்தி வரு­வ­துடன் அதனை கார­ண­மாக வைத்­து­கொண்டு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் சூழ்­ச்சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆகவே இதற்கு இட­ம­ளிக்­காது சுயா­தீ­ன­மாக உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்ற கார­ணத்­திற்­கா­கவே நாம் பதவி துறக்­கின்றோம்.

இன்று நாடு பாரிய அனர்த்­தத்­திற்கு தள்­ளப்­படும் அபா­ய­நிலை உரு­வா­கி­யுள்­ளது. எமது மக்­க­ளுக்கு உரிய பாது­காப்பு இல்­லாத அச்ச சூழல் உரு­வாகி வரு­கின்­றதை எம்மால் தெளி­வாக உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதேபோல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­கு­தலில் ஈடு­பட்ட எமது சமூ­கத்தின் சார்ந்த நபர்­களை கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு தண்­டனை பெற்­று­கொ­டுக்க சகல உத­வி­க­ளையும் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் நாம் பூர­ண­மாக வழங்­கி­யுள்ளோம். குறிப்­பாக கூறு­வ­தாயின் 21 ஆம் திகதி நடத்­தப்­பட்ட தாக்­குதல் எமது சமூ­கத்தை சார்ந்த சிலரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அவர்­களை கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு கடு­மை­யான தண­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்­பதில் எமது சமூகம் உறு­தி­யாக இருந்­தது. அவ்­வாறு இருந்­தும்­கூட அடிக்­கடி நெருக்­க­டி­களை கொடுத்து இந்த நாட்டில் மிக மோச­மான இன­வாதக் கருத்­துக்­களை பரப்பும் சக்­திகள் வெறுப்­பூட்டும் பேச்சுக்கள் என்­ப­வற்றை பார்த்து நாம் அச்­சப்­ப­டு­கின்றோம். இந்த அச்ச சூழ­லி­லி­ருந்து நாடு விடு­பட வேண்டும். இந்த நாட்­டி­லுள்ள சகல மக்கள் இடையில் நல்­லி­ணக்கம் உரு­வாக வேண்டும். சர்­வ­தேச ரீதியில் உள்ள நன்­ம­திப்பு பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது. அவ்­வா­றி­ருக்­கையில் எமது தரப்பில் ஒரு­சி­ல­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களின் உண்­மைத்­தன்மை முழு­மை­யாகக் கண்­ட­றி­யப்­பட வேண்டும். அதற்­கான அவ­கா­சத்தை வழங்­கு­வது எமது கட­மை­யாகும்.

இன்று மிகச் சிறிய, பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்பு இல்­லாத எமது மக்கள் பலர் தடுப்­புக்­க­ாவலில் உள்­ளனர். அவர்­க­ளுக்­கான நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்­பதில் அவ­தா­ன­மாக உள்ளோம். இது குறித்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். விசா­ர­ணை­களை முடி­வுக்கு கொண்­டு­வந்து பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பி­லில்­லாத சக­ல­ரையும் விடு­விக்க வேண்டும், அதேபோல் மக்­க­ளுக்கு மத்­தியில் பிள­வு­களை ஏற்­ப­டுத்தும் சக்­தி­களை இனங்­கண்டு அவர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­ப­டு­ப­வர்­களை மாத்­திரம் தீ­வி­ர­வா­திகள் என கூறி­விட முடி­யாது. இன்று பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக பேசும் நபர்கள் கூட தீவி­ர­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு எதி­ரா­கவும் அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எங்­களில் ஒரு சில­ருக்கு எதி­ராக ஏதா­வது குற்­றச்­சாட்­டுக்கள்  இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்து ஒரு நிலை­ப்பாட்­டுக்கு வர­வேண்டும். உண்­மையில் எம்மில் சிலர் குற்­ற­வா­ளிகள் என்றால் அதனை நிரூ­பித்து அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதில் எமது தரப்பில் எந்த தடையும் ஏற்­ப­டாது. இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் பலிக்­க­டா­வாக ஆக்­கப்­ப­டு­வது தடுக்­கப்­பட வேண்டும். அதேபோல் இந்த நாடு வெகு விரைவில் சமா­தான பாதையில் பய­ணிக்க வேண்டும். அதற்­கான நகர்­வு­க­ளுக்கு நாம் பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்கத் தயா­ராக உள்ளோம். இந்த விசா­ர­ணைகள் ஒரு­மாத காலத்தில் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். தொடர்ந்தும் இந்த சந்­தேக நிலைமை இருந்தால் இந்த நாட்­டினை குழப்பும் சக்­தி­க­ளுக்கு நாட்டில் மிகப்­பெ­ரிய இரத்தக் கள­ரியை உரு­வாக்கும் பின்­புலம் உரு­வாக்­கி­விடும். அந்த அச்சம் எல்லோர் மத்­தி­யிலும் உள்­ளது. அதேபோல் இந்த விசா­ர­ணை­களை நடத்துவதில் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. ஆகவே இந்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கி உடனடியாக ஒருமாத காலத்தில் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும். ஆகவே, இந்த விசாரணைகளுக்கு எமது பூரண ஒத்துழைப்புகளை வழங்கி சுயாதீனமாக ஒரு தீர்வு எட்டப்பட நாம் இடமளித்துள்ளோம். அதேபோல் அரசாங்கத்தின் பின்வரிசையில் இருந்து இந்த அரசாங்கத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுப்போம். அமைச்சுப் பதவிகளை நாம் துறந்தாலும் கூட அரசாங்கத்தை கொண்டுநடத்த சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.