ஐ.தே.க. அமைச்­சர்கள் எமக்கு உத­வ­வில்லை

பிர­த­ம­ரிடம் முஸ்லிம் எம்.பி.க்கள் சுட்­டிக்­காட்டு

0 857

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பொய் பிர­சா­ரங்கள் மற்றும் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவைத் தவிர எந்­த­வொரு ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்­களும் எமக்கு உதவ முன்­வ­ர­வில்லை என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் சுட்­டிக்­காட்­டினர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு முன்னர் அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஆளும் தரப்பு முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்­த­போதே இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இது தொடர்பில் திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் விப­ரிக்­கையில்,

முஸ்­லிம்கள் சம­கா­லத்தில் எதிர்­நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பில் அனை­வ­ரு­மாக இணைந்து சுட்­டிக்­காட்­டினோம். அத்­துடன் வேண்­டு­மென்றே பாது­காப்பு கெடு­பி­டிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை மற்றும் சிறு குற்­றங்­க­ளுக்­காக கைது­செய்­யப்­பட்டு பயங்­க­ர­வா­திகள் போல் சித்­தி­ரிக்­கப்­ப­டு­வது குறித்து பிர­த­மரை தெளி­வு­ப­டுத்­தினோம்.

இதன்­போது ஐ.தே.க. தவி­சாளர் கபீர் ஹாசிம் மிகவும் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கதைத்தார். நாம் வெறு­மனே இரா­ஜி­னாமா செய்யக் கூடாது. எமது இரா­ஜி­னாமா நாட்­டுக்கு நல்­ல­தொரு பாடத்தை சொல்ல வேண்டும் என்­பதை பிர­த­ம­ரிடம் தெளி­வு­ப­டுத்­தினார். அத்­துடன் பயங்­க­ர­வா­தத்தை தடுப்­ப­தற்­கான ஆரம்ப நட­வ­டிக்­கையை தான் முன்­னெ­டுத்­த­போது தடை ஏற்­பட்­டது. எனினும், விசா­ர­ணை­க­ளுக்­கான ஆரம்பப் புள்­ளியை நான் காட்­டி­யி­ருந்தும் நட­வ­டிக்கை பொறுப்­புடன் மேற்­கொள்­ளப்­ப­டா­த­தையும் சுட்­டிக்­காட்­டினார்.

மு.கா. தலைவர் ஹக்கீம் அநா­வ­சிய கைதுகள் மற்றும் அப்­பா­விகள் சிறு சிறு குற்­றங்­க­ளுக்­காக பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தின் கீழ் விளக்­க­ம­றி­யலில் இருப்­பது பற்­றியும் தெளி­வு­ப­டுத்­தினார்.

தான் நிர­ப­ராதி என்­பதை அர­சி­யல்­வா­தி­களே, அதா­வது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­நி­தி­களே ஏற்­றுக்­கொள்­கி­றார்கள் இல்லை என்­பதை இதன்­போது அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதி­யுதீன் சுட்­டிக்­காட்­டினார். மட்­டு­மன்றி, தன்னை தான் குற்­ற­மற்­றவன் என்­பதை விப­ரிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்­தையும் ஐ.தே.க. அமைச்­சர்கள் தரு­வ­தில்லை என்றும் குறிப்­பிட்டார்.

இதே­வேளை, அமைச்சர் மங்­கள சம­ர­வீர முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி துறப்­ப­தற்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்டார். அப்­ப­டி­யானால் முதலில் தான் அமைச்சுப் பத­வியை தூக்கி எறி­வ­தாக ஆவே­சத்­துடன் கூறினார். அமைச்சர் மனோ கணே­சனும் இவ்­வாறு கடு­மை­யாக எதிர்ப்பை தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்கள் முஸ்­லிம்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­போது எமக்கு உதவ முன்­வ­ர­வில்லை என ஐ.தே.க.வின் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இதன்­போது குற்­றச்­சாட்டை முன்­வைத்­தனர். அமைச்சர் மங்­கள சம­ர­வீர மட்­டுமே துணிந்து எமக்­காகப் பேசினார். அவரைப் போன்ற அமைச்சர்கள் இருந்­தி­ருந்தால் இன­வா­தி­க­ளுக்கு நல்ல பாடத்தை கற்­பித்­தி­ருக்­கலாம். முஸ்­லிம்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் பிர­சா­ரங்­க­ளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும், ஆனால் எமது தரப்பினர் அதனை செய்யத் தவறி விட்டனர் என்பதை சுட்டிக்காட்டியதாக இம்ரான் மஹ்ரூப் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.