சிலர் இனவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முயற்சி

அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவிப்பு

0 604

நாட்டில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற அசா­தா­ரண சூழ்­நி­லையை பயன்­ப­டுத்தி சிலர் இன­வா­தத்தை – மத­வா­தத்தை தூண்டி அதனை அர­சியல் ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­கவும், இவ்­வா­றான செயற்­பா­டு­களை  சகல இன மக்­களும் இணைந்து தோற்­க­டிக்க வேண்டும் எனவும் நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

‘ரன் மாவத்’ வேலைத்­திட்­டத்தின் கீழ் மாவ­னெல்லை, உயன்­வத்த – வெலே­கட வீதி அபி­வி­ருத்தி பணி ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வு இடம்­பெற்­றது. இதில் நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது:-

“ஏப்ரல் 21 மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சர்­வ­தேச தீவி­ர­வாத பின்­ன­ணியில் இடம்­பெற்­றுள்­ளது. இது எமது நாட்­டுக்கோ – சமூ­கத்­துக்கோ பொருத்­த­மான ஒன்­றல்ல. அவர்கள் தீவி­ர­வா­திகள்! அத­னால்தான் அவர்­க­ளது உடல்­களை முஸ்லிம் முறைப்­படி அடக்கம் செய்­யப்­போ­வ­தில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை அறி­வித்­தது.

எமது மார்க்­கத்தில் அப்­பாவி உயிர்­களை கொலை செய்ய எங்கும் கூறப்­பட்­டில்லை. என­வேதான் சமூகம் என்ற ரீதியில் நாங்கள் சுய­வி­மர்­சனம் செய்து இந்த தீவி­ர­வாதம் வளர ஏது­வான கார­ணி­களை கண்­ட­றிந்து அதனை மாற்­றி­ய­மைக்கத் தீர்­மா­னித்தோம். அத­ன­டிப்­ப­டையில் சில சில மாற்­றங்­களை செய்து கொள்­ளவும் நாங்கள் தயா­ரா­கி­யுள்ளோம்.

இரா­ணு­வத்­தினர் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்­லிம்கள் பூரண ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வரு­கின்­றார்கள். குறிப்­பாக மாவ­னெல்லை மக்கள் இரா­ணு­வத்தை அணுகி தக­வல்­களை வழங்கி வரு­கின்­றனர். சந்­தேக நபர்கள் எவ­ரேனும் இருந்தால் அவரை காண்­பித்து தங்­க­ளது பொறுப்­பினை அவர்கள் நிறை­வேற்­று­கின்­றனர். சில பெற்றோர் தனது சொந்த பிள்­ளை­க­ளையே பாது­காப்புத் தரப்­புக்கு ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

நாம் முதலில் தாய் நாடு தொடர்­பி­லேயே சிந்­திக்க வேண்டும். முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை இது மிகவும் கஷ்­ட­மான – நெருக்­க­டி­யான கால­மாகும். ஒரு சிலரின் தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளினால் ஒட்­டு­மொத்த சமூ­கத்தின் மீதும் விரல் நீட்­டு­கின்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. ஆனால், கணி­ச­மான முஸ்­லிம்கள் இந்த நாட்­டுக்­காக செய்ய வேண்­டிய அர்ப்­ப­ணிப்­புக்­களை எந்த நாளும் செய்­துள்­ளார்கள்.

யுத்த காலத்தில் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவில் அதி­க­ள­வான முஸ்­லிம்கள் பணி­யாற்­றி­னார்கள். அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ. பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தற்­காக பெரும் பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளார்கள். கேர்ணல் முத்­தலிப் போன்ற பெரு­ம­ள­மா­ன­வர்கள் தங்­க­ளது உயிர்­க­ளையே நாட்­டுக்­காகத் தியாகம் செய்­துள்­ளனர்.

அதேபோல், சுதந்­திரப் போராட்­டத்­திலும் பல அர்ப்­ப­ணிப்­புக்­களை முஸ்லிம் சமூகம் செய்­துள்­ளது. அக்­கா­லத்தில் சிங்­களத் தலை­வர்­க­ளுக்கு எந்­த­வித கோரிக்­கை­க­ளு­மின்றி ஆத­ரவு வழங்­கி­யி­ருந்தோம். நாங்கள் இன்றும் நாட்­டுக்­காக அர்ப்­ப­ணிப்­புக்­களை செய்யத் தயா­ரா­கவே உள்ளோம்.

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் நாங்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து இந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. சிலர் இதனைப் பயன்­ப­டுத்தி இன­வா­தத்தை – மத­வா­தத்தை தூண்டி விட முயற்­சிக்­கின்­றனர்.

நான் இன்று சிங்­கள பிர­தே­ச­மொன்­றுக்கு செல்­ல­வி­ருந்த நிலையில் அங்கு எனக்கு செல்ல இட­ம­ளிப்­ப­தில்லை என்று சிலர் கூறி­யி­ருந்­தார்கள். எனினும், நான் அங்கு சென்று நான் முஸ்லிம் என்­றாலும் நான் முதலில் இலங்­கையர். இங்கு என்­னை­விட பௌத்த மதத்­துக்கு உதவி செய்­துள்ள ஒரு­வரை காண்­பிக்­கு­மாறு கூறினேன். சகல மதத்­தையும் ஒரே மாதிரி கவனிக்குமாறு கூறியே எனது பெற்றோர் என்னை வளர்த்துள்ளார்கள்.

என்னிடம் இனவாதம் கிடையாது. இனவாதம் என்பதே எனக்கு உணர்வதில்லை. எமது உடலில் உள்ளது ‘சிங்கள லே’ (சிங்கள இரத்தம்). எங்களது தாய்மார்களை எவரும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரவில்லை. ஆகவே,  இனவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துபவர்களை தோற்கடிக்க நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.