திகன வன்முறைகள்: 174 சொத்து சேதங்களுக்கு 17 கோடி ரூபா நஷ்டயீடு

0 637

கடந்த வருடம் கண்டி – திகன பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு இது­வரை காலம் நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டா­துள்ள  174 சொத்­து­க­ளுக்கு இன்னும் சில தினங்­களில் 17 கோடி ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ளது.

புனர்­வாழ்வு அமைச்­சுக்கும் பொறுப்­பான அமைச்­ச­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பணிப்பின் பேரில் நஷ்­டயீடு வழங்கும் பணிகள் புனர்­வாழ்வு அதி­கார சபை (இழப்­பீடு பணி­யகம்) யினால் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நஷ்­ட­யீட்­டினை வழங்­கு­வ­தற்­கான நிதி­யினை திறை­சேரி ஒதுக்­கி­யுள்­ளது.

இது தொடர்­பில் புனர்­வாழ்வு அதி­கார சபை (இழப்­பீடு பணி­யகம்) யின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம். பதூர்தீன் கருத்துத் தெரி­விக்­கையில்;

‘கண்டி – திகன பகு­தி­களில் கடந்த வருடம் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் 546 சொத்­துக்கள் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டன. இவற்­றில் பல சொத்­துக்கள் எரி­யூட்­டப்­பட்­டன. 546 சொத்­துக்­களில் 372 சொத்­துக்­க­ளுக்கு நஷ்­ட­யீ­டாக ஏற்­க­னவே 19 கோடி 48 இலட்­சத்து 45 ஆயிரம் ரூபா வழங்­கப்­பட்டு விட்­டது இவ்­வாறு நஷ்­ட­யீடு வழங்­கப்­பட்ட சொத்­துக்கள் ஒவ்­வொன்றும் தலா ஒரு இலட்சம் ரூபா­வுக்கும் குறை­வான நஷ்­ட­ஈட்­டுக்கு உரி­ய­வை­யாகும்.

546 சொத்­து­களில் 174 சொத்­து­களே இது­வரை காலம் நஷ்­ட­யீடு வழங்­கப்­ப­டா­தி­ருந்­தன. இந்தச் சொத்­து­களின் சேதம் ஒவ்­வொன்றும் ஒரு இலட்சம் ரூபா­வுக்கும் மேற்­பட்­ட­தென்­பதால் இதற்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. தற்­போது அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. அதற்­கி­ணங்க 174 சொத்­து­க­ளுக்கும் நஷ்­ட­ஈ­டாக 17 கோடி 5 இலட்­சத்து 67 ஆயிரம் ரூபா சில தினங்­களில் வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

வன்­செ­ய­லினால் பாதிக்­கப்­பட்ட கெங்­கல்ல ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­யீடும் பிர­த­மரின் பணிப்பின் பேரில் விரைவில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் 16 சொத்­து­களின் சேத விப­ரங்­களை மதிப்­பீடு செய்­வ­தற்கு குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சொத்­து­களின் சேத விப­ரங்­களை மதிப்­பீட்டு திணைக்­க­ளத்­தினால் மதிப்­பீடு செய்­வ­தற்கு இய­லாமல் இருப்பதனையடுத்தே குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சொத்துகளின் களஞ்சியசாலைகளில் இருந்த இருப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட வேண்டியுள்ளது. குழுவின் சிபாரிசுகளுக்கமைய சேதங்கள் மதிப்பீடு பூர்த்தி செய்யப்படும்’ என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.