முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்த சிங்களக் குடும்பம் ஒன்றின் கதை

0 842

‘‘பெற்றோல் குண்டுச் சத்தம் கேட்­ட­வு­டனே எனக்கு மரண பீதியே ஏற்­பட்­டது. எமது கதை முடிந்து விட்­ட­தென்றே எண்­ணினோம். எமது முன்­வீட்டு சுஜீ­வனீ தங்கை எங்­களை அவ­ரது வீட்­டுக்குள் எடுத்து பாது­காக்­கா­விட்டால் எங்­க­ளுக்கு என்ன நடந்­தி­ருக்கும் என்­பது இறை­வ­னுக்­குத்தான் வெளிச்சம். எங்கள் குடும்­பத்­துடன் இந்த வீட்டில் மூன்று குடும்­பங்­க­ளுக்குப் பாது­காப்புக் கிடைத்­தது’’ இவ்­வாறு நாத்­தாண்­டியா, தும்­மோ­த­ரையைச் சேர்ந்த ஏ.கே. ஹலீமா என்ற பெண் கூறினார்.

கடந்த 13 ஆம் திகதி மேற்­படி பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றையின் போது சிங்­கள வீடொன்றில் தமது குடும்­பத்­துடன் மூன்று முஸ்லிம் குடும்­பங்கள் காப்­பாற்­றப்­பட்­டமை குறித்து, பீ.பீ.ஸீ. சிங்­கள ஊடக சேவைக்கு வழங்­கிய செவ்­வி­யொன்றின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஹலீ­மாவின் குடும்பம் உள்­ளிட்ட மூன்று குடும்­பங்கள் சம்­பவ தினத்தைத் தொடர்ந்து சில தினங்கள் பாது­காப்­புக்­க­ருதி அதே சிங்­கள வீட்­டிலே தங்­கி­யி­ருந்­துள்­ளனர்.

நேர்­கா­ணலில் ஹலீமா மேலும் விப­ரிக்­கையில்,

குண்­டர்கள் குழு எமது வீட்டைத் தாக்க முனைந்­த­போது, ‘அது சிங்­கள வீடு சிங்­கள வீடு’ என்று சிங்­கள அன்பர் ஒருவர் கூச்­ச­லிட்டே எமது வீட்டைத் தாக்­கு­த­லி­லி­ருந்து காப்­பாற்­றினார்.

இவர்கள் எங்­க­ளையும் எங்கள் வீடு­க­ளையும் காப்­பாற்றித் தந்­தது மட்­டு­மன்றி எங்­க­ளுக்கு உண்­ணவும், குடிக்­கவும் தந்­தார்கள். இப்­போதும் (பேட்டி எடுத்த சந்­தர்ப்­பத்தில்) தேநீர் தந்­தார்கள்.

உத­வி­களை நன்­றி­யு­ணர்­வோடு ஹலீமா வெளி­யி­டு­கையில், இவர்­களைப் பாது­காத்த வீட்டுப் பெண் சுஜீ­வனீ சந்­தியா கூறி­ய­தா­வது, “நான், உள்­ளிட்ட எனது வீட்­டார்கள், எமது அய­ல­வர்­களைக் காப்­பாற்ற தேவை­யான சந்தர்ப்பத்தில் எடுத்­துக்­கொண்ட பணிகள் குறித்து மன­நி­றை­வ­டை­கிறோம்.
சிங்­க­ள­வர்கள் தாக்க வரும்­போது ஹலீ­மாவின் குடும்­பத்தைச் சேர்ந்த நால்­வரும் ஏனைய முஸ்லிம் குடும்­பத்­த­வர்­களும் நிர்க்­க­திக்­குள்­ளா­கி­யதைக் கண்டோம். இவர்­களைக் காப்­பாற்­றினால் எமக்கும் பிரச்­சினை வரும் என்ற நிலையில் அத­னையும் பொருட்­ப­டுத்­தாது, எங்கள் உயி­ரையும் துச்­ச­மாக மதித்து இவர்கள் உயிரைக் காப்­பாற்­றினோம்.

எமது ஊட­கத்­துக்கும் செவ்­வி­ய­ளிக்க சுஜீ­வனீ ஆரம்­பத்தில் தயக்கம் காட்­டினார். தனக்கும் ஆபத்து நேரலாம் என்­ப­தால்தான் அவர் அவ்­வாறு தயங்­கி­ய­தாகக் கரு­து­கிறோம்.

அவ­ரது கூற்­றுக்­க­மைய இங்கு ஊர் மக்­களின் அனு­ச­ர­ணை­யோடு இத்­தாக்­குதல் இடம்­பெ­ற­வில்லை என்­பது தெளிவு.

வந்­த­வர்கள் முஸ்லிம் வீடு­களைத் தாக்கி விட்­டுப்­போன பின்னர் எமது நிலை குறித்து அவர்கள் சிந்­திப்­ப­தில்லை. நாம் பல வரு­டங்­க­ளாக எத்­த­கைய பிரச்­சி­னை­க­ளு­மின்றி ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கிறோம். இப்­போது நடந்த சம்­ப­வத்தால் எமக்குப் பிரச்­சி­னைதான்’’ என்று சுஜீ­வனீ அதி­ருப்­தியை வெளி­யிட்டார்.

சுஜீவனீயின் குடும்­பத்தால் காப்­பாற்­றப்­பட்ட மற்­றொரு குடும்பத்தைச் சேர்ந்த முகம்­மது ரிஸ்வி கூறு­கையில்,

‘‘குழப்­பக்­கா­ரர்கள் நாலா பக்­கங்­க­ளி­லி­ருந்தும் கூச்­ச­லிட்­டுக்­கொண்டு வரு­வதைக் கண்டு ஓடி ஒளிந்­து­கொள்­வ­தற்கு இட­மின்றித் தவித்துக் கொண்­டி­ருந்தோம். இக்­கட்­டான இச்­சந்­தர்ப்­பத்­தி­லேதான் சுஜீ­வ­னீயின் கணவர் குமார எங்கள் வீட்­டுக்கு ஓடி வந்தார். நாலா புறங்­க­ளி­லி­ருந்தும் தாக்குதல் நடத்­திக்­கொண்டு வரு­கி­றார்கள். நீங்கள் அவ­ச­ர­மாக எங்கள் வீட்­டுக்குள் வாருங்கள் என்றார். உடனே நானும் மனை­வியும் எனது மூன்று பிள்­ளை­களும் சுஜீ­வ­னீயின் வீட்­டுக்குச் சென்றோம். அங்கு ஏற்­க­னவே வந்­தி­ருந்த இரண்டு முஸ்லிம் குடும்­பங்­களும் இருந்­தன. அவர்கள் சிறிய அறை­யொன்­றினுள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அதில் எமது குடும்­பத்­தையும் உள்­ளே­ய­னுப்பி கதவை மூடி­வைத்­தனர். அவ்­வ­றையில் மூன்று குடும்­பங்­க­ளையும் சேர்ந்த 14 பேர் தங்­கி­யி­ருந்தோம். இருட்­டறை, வெளியே பயங்­கரக் கூச்சல் இவற்றால் சிறு பிள்­ளைகள் அழுது புலம்­பினர். நாம் இயன்­ற­வரை பிள்­ளை­களின் வாயை மூட வைத்தோம். எமது வீட்­டுக்கு தீ வைக்க முயன்­ற­போது எமது அயல் வீட்டு சிங்­கள சகோ­தரர் கலகக் காரர்­க­ளுக்கு கும்­பிடு போட்டு, அவ்­வீட்­டுக்குத் தீ வைக்க வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்­டுள்ளார். இதனால் ஆவே­சக்­கா­ரர்கள் அடங்கி அகன்று சென்­றுள்­ளனர். இதனால் எனது வீடு தப்­பி­யுள்­ளது’’ என்றார் ரிஸ்வி.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பலி­யான, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான அனு­தாபம் தெரி­வித்தும் நினைவு கூர்ந்தும் தும்­மோ­தர மெல்­ல­கெலே பகு­தியில் இடம்­பெற்ற விளக்­கெ­ரியச் செய்யும் நிகழ்வில் ரிஸ்வி உட்­பட முஸ்­லிம்­களும் கலந்து கொண்டுள்ளனர். தற்­கொலைத் தாக்­கு­தலைக் கண்­டித்து காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பெனரும் வெள்ளைக் கொடியும் ஊர்ப்­பள்­ளி­யிலும் மற்றும் இடங்­க­ளிலும் இப்­போதும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளன.

ரிஸ்வி கருத்துத் தெரி­வித்­ததைத் தொடர்ந்து அவ­ரது மனைவி பாத்­திமா ரிஸ்­வியா கூறி­ய­தா­வது,

‘‘இவர்­களால் நாங்கள் காப்­பாற்­றப்­ப­ட­வில்­லை­யானால் கொட்­டா­ர­முல்­லையில் நடந்­தது போன்று இங்கும் மர­ணங்கள் சம்­ப­வித்­தி­ருக்கும். எங்­க­ளுக்குப் பாரிய அழி­வுகள் நிகழ்ந்­தாலும் கூட இங்­குள்ள சிங்­கள மக்கள் அதற்கு பொறுப்பு தாரிகள் அல்ல என்­ப­தையும் நாம் அறிவோம். இங்­குள்ள சிங்­கள மக்­க­ளுடன் எமக்கு எத்­த­கைய குரோ­தங்­களும் இல்லை’’ என்று அப்­பெண்­மணி கூறினார்.

நாத்­தாண்­டிய தும்­மோ­தர மற்றும் மெல்­லே­கலே பகு­தியில் வசிக்கும் சிங்­கள – முஸ்லிம் மக்கள் நல்­லி­ணக்­கத்­து­டனே வாழ்­கி­றார்கள். ஆனாலும் கடந்த 13 ஆம் திகதி இடம்­பெற்ற வன்­செயல் கார­ண­மாக இன­நல்­லு­றவில் ஒரு பெரும் கரும்­புள்ளி ஏற்­பட்­டுள்­ள­தா­கவே இப்­ப­குதி மக்­களின் கருத்­தா­க­வுள்­ளது.
அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்­துள்ள இப்­ப­கு­தியைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக சிலாபம் அருட்­தந்தை வெலன்ஸ் சென்­றுள்ளார். அதன் போதே தும்­மோ­தர கிராம அபி­வி­ருத்திச் சங்கத் தலைவர் சுமித் பிரே­ம­கு­மார, அருட்­தந்­தை­யிடம் சிங்­கள குடும்பம் ஒன்றால் முஸ்லிம் குடும்­பங்கள் காப்­பாற்­றப்­பட்ட விட­யத்தைத் தெரி­வித்­துள்ளார். அது பற்றி அவர் கூறு­கையில், “உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலால் எமது முகத்தைப் பார்க்க முடி­ய­வில்­லை­யென்று ஹலீமா கூறிக் கொண்­டி­ருந்தார். எங்களிடம் மன்­னிப்புக் கோரினார். ஆனால் இன்று எங்­களால் ஹலீ­மாவின் முகத்தைப் பார்க்க முடி­ய­வில்லை. நான் இப்­போது அவ­ரிடம் எமது எல்லா மக்கள் சார்­பா­கவும் இரு கை கூப்பி கும்­பிட்டுக் கேட்­கிறேன் எங்­களை மன்­னித்து விடுங்கள் என்றே.”

இதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், சுமித் பிரே­ம­கு­மா­ரவின் தலை­மையில் தும்­மோ­தர விகா­ரையில் கூட்டம் ஒன்று இடம்­பெற்­றது. பிர­தேச மக்­களைக் காப்­பாற்­று­வது தொடர்­பா­கவே இக்­கூட்டம் நடத்­தப்­பட்­டது. அதில் இரண்டு முக்­கிய தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

1. கொந்­த­ளிப்­பான சந்­தர்ப்­பங்­களில் ஊரின் பாது­காப்புக் கருதி, வெளி இடங்­க­ளி­லி­ருந்து ஊருக்குள் வரும் கலகக் காரர்­களை உள்ளே பிர­வே­சிக்கச் செய்­யாது தடுக்கும் செயற்­திட்­ட­மொன்றை உரு­வாக்கல்.

2. இலக்கு வைக்­கப்­படும் தரப்­பி­னரைக் காப்­பாற்ற ஏனைய தரப்பு நட­வ­டிக்கை எடுத்தல்.

இவ்­வா­றி­ருந்தும் சுமார் 500 க்கும் மேற்­பட்ட கூட்­டத்­தினர் ஒன்று திரண்டு படையெ­டுத்­ததால் எங்­களால் எதுவும் செய்ய முடி­யாத நிலைக்­குத்­தள்­ளப்­பட்டோம். வெளி­யூர்­க­ளி­லி­ருந்து எமது ஊருக்குள் பிர­வே­சிக்கும் குழப்­பக்­கா­ரர்­களைத் தடுக்க நாம் இயன்ற வரை முயற்­சித்தோம். கட்­டுக்­க­டங்­காத கூட்டம் என்­பதால் எமது முயற்சி கை கூட­வில்லை. அவர்கள் வந்த மாத்­தி­ரத்­தி­லேயே பர­ப­ர­வென வீடு­களை உடைத்துக் கொண்டே முன்­னே­றினர். இரண்டு பள்­ளி­வா­சல்­க­ளையும் தாக்­கினர். இதனால் எமது முஸ்லிம் மக்­களை எங்கள் வீட்­டுக்குள் நுழைத்து கதவை மூடிக் கொண்டு அவர்­களைப் பாது­காக்­கவே எங்­களால் முடி­யு­மாக இருந்­தது. அது போன்று ஒரு சில முஸ்லிம் வீடு­களை இது சிங்­கள வீடுகள் என்று கூறிக் காப்­பாற்­றவும் எங்­களால் முடிந்­தது. வந்­த­வர்கள் முஸ்லிம் வீடுகள், பள்­ளி­களை மட்­டு­மல்ல எங்கள் உள்­ளங்­க­ளையும் உடைத்து சிதைத்தே சென்­றுள்­ளனர்’’ என்று சுமித் பிரே­ம­கு­மார சோகத்­தோடு கூறினார்.

இப்போது மோதர பகுதியில் கடற்படை அதிகாரிகளால் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று மூன்று வாரங்களின் பின்னர் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பலைகள் மோதச்செய்தமை அரசியல் தேவையை ஈடுசெய்யும் ஓர் உபாய நடவடிக்கையென்றே சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு தரப்பு மீது மற்றொரு தரப்பு அச்சம், சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் ஒருசில ஊடகங்கள் அறிக்கைகளை வெளியிட்டமையும் இத்தகைய விபரீதங்கள் தலைதூக்கக் காரணமென ஒரு சில ஊடகங்கள் மீதும் விரல் நீட்டப்படுகின்றன.

எண்பத்திமூன்று கறுப்பு ஜூலைக்கு ஈடாக அண்மையில் முடுக்கி விடப்பட்ட தாக்குதல்களிலும் பகற்கொள்ளையும் கச்சிதமாக அரங்கேறியதான முறைப்பாடுகளும் முன்வைக்கப்படுகின்றன.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.