சஹ்ரான் உயிரிழந்தமை மரபணு மூலம் உறுதி

சி.ஐ.டி. க்கு அறிக்கை கொடுத்தார் அரச இரசாயன பகுப்­பாய்­வாளர்

0 595

உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற  தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய தற்­கொ­லை­தா­ரிகள் அனை­வ­ரி­னதும் அடை­யா­ளங்கள் மர­பணு பரி­சோ­தனை மூலம் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.  இது தொடர்­பி­லான முழு­மை­யான அறிக்கை நேற்று மாலை அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் ஊடாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு அளிக்­கப்­பட்­டது. இத­னூ­டாக பொலிஸ் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தி­களே இந்த தற்­கொலை தாக்­கு­தலை நடாத்­தி­யுள்­ளமை  உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

‘குறிப்­பாக ஷெங்­ரில்லா ஹோட்­டலில்  தற்­கொலை தாக்­குதல் நடாத்­தி­யவர் சஹ்ரான் ஹாஷிம் என்­பவர் என நாம்  பொலிஸ் விசா­ர­ணை­களில் உறுதி செய்­தி­ருந்தோம். தற்­போது டி.என்.ஏ. சோத­னை­க­ளிலும் அது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.  சில ஊட­கங்கள் சஹ்ரான் உயி­ரி­ழக்­க­வில்லை என பொய்­யான தக­வல்­களை பரப்பி மக்­களை அச்­ச­ம­டையச் செய்­தி­ருந்­தன. எனினும் டி.என்.ஏ. சோத­னையில் சஹ்ரான் உயி­ரி­ழந்­து­விட்­டமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது’ என  அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரின் அறிக்­கையை மையப்­ப­டுத்தி பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. கரை­யோர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வ­பிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­யன தாக்­கு­த­லுக்­கி­லக்­கான கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளாகும்.

இத­னை­விட  கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய மூன்று ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி  காலை 8.45 மணிக்கும்  9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

இந் நிலையில் அன்று பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக  உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும்  சாதா­ரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம்  பதி­வா­னது. அதனைத் தொடர்ந்து பிற்­பகல்  2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களை இலக்கு வைத்து  தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்­கொலை குண்­டு­தா­ரி­யினால்  தாக்­குதல் நடாத்­தப்ப்ட்­டது.

இந் நிலையில் இவை தொடர்பில்  சி.ஐ.டி.இன்  15 சிறப்பு குழுக்­களும் சி.ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவும் முன்­னெ­டுக்கும் சிறப்பு  விசா­ர­ணை­களில், பல்­வேறு வாக்­கு­மூ­லங்கள் சாட்­சி­களின் அடிப்­ப­டையில் தற்­கொலை குண்­டு­தா­ரிகள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.  எனினும் அதனை மேலும் உறுதி செய்ய அவர்கள் தொடர்பில் டி.என்.ஏ. சோத­னை­களை முன்­னெ­டுக்க சி.ஐ.டி. தீர்­மா­னித்த நிலையில் அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்ப்ட்­டன.

இந் நிலை­யி­லேயே நேற்று மாலை அது தொடர்­பி­லான முழு­மை­யான டி.என்.ஏ. அறிக்கை சி.ஐ.டி.க்கு அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் ஊடாக வழங்­கப்­பட்­டது.

சாட்­சி­களின் பிர­காரம் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வ­லுக்கு அமை­யவும் டி.என்.ஏ. சோத­னைகள் பிர­கா­ரமும்  கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவ­ல­யத்தில் தற்­கொலை தாக்­குதல் நடாத்­தி­யவர் இலக்கம் 121/3 சென்ட்ரல் வீதி, மட்­டக்­குளி எனும் முக­வ­ரியைக் கொண்ட அலா­வுதீன் மொஹம்மட் முவாத் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். அவ­ரது பெற்­றோரின் டி.என்.ஏ. மூலக் கூறு­களைப் பெற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட பகுப்­பாய்­வு­களில் அது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.  இந்த தற்­கொ­லை­தா­ரிக்கு உத­விய குற்­றச்­சாட்டில் அவ­ரது சகோ­த­ரர்கள், சகோ­தரி சி.ஐ.டி.யால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை  நீர்­கொ­ழும்பு, கடான – கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில்  தற்­கொலை தாக்­குதல் நடாத்­தி­யவர் வாழைச்­சேனை, ஏ.எப்.சி.  வீதியைச் சேர்ந்த அச்சு முஹம்­மது மொஹம்மட் ஹஸ்துன் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். ஹஸ்­தூனின் பெற்­றோரின் டி.என்.ஏ. மூலக் கூறுகள் நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் பெறப்­பட்டு அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ரினால் பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டதில் இது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.  இந் நிலையில் இவ­ருக்கு உத­வி­ய­வர்கள் மற்றும் அவ­ரது குடும்ப பின்­னணி குறித்தும் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இவ­ரது மனை­வியே சி.ஐ.டியால் தேடப்­பட்டு வந்த நிலையில்,  சாய்ந்­த­ம­ருது, வொலி­வோ­ரியன் வீட்­டுத்­திட்­டத்தில் உள்ள வீட்டில் தற்­கொலை செய்­து­கொண்­டோரில் அடங்கும் புலஸ்­தினி ராஜேந்­திரன் அல்­லது சாரா எனும்  பெண் என பொலிஸார் தெரி­வித்­தனர். .

அத்­துடன் மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­ல­யத்தில் தற்­கொலைத் தாக்­குதல் நடாத்­தி­யவர்  மைய­வாடி வீதி, புதிய காத்­தான்­குடி எனும் முக­வ­ரியைச் சேர்ந்த மொஹம்மட் நசார் மொஹம்மர் அசாத் என உறுதி செய்­யப்­பட்­டுள்ளார். இவ­ரது தாயாரின் டி.என்.ஏ. மூலக் கூறு­களைப் பெற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட பகுப்­பாய்வில் இது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கொழும்பு – கிங்ஸ்­பரி நட்­சத்­திர ஹோட்­டலில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடாத்­தி­யவர், புதிய யோர்க் வீதி கொழும்பு 12, பண்­டா­ர­நா­யக்க மாவத்தை கொழும்பு 12 ஆகிய முக­வ­ரி­களைக் கொண்ட  மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக் என பொலி­ஸாரால் அடை­யாளம் கண்ட நிலையில், அவ­ரது மனைவி மற்றும் பிள்­ளை­களின் டி.என்.ஏ. மூலக் கூறு­க­ளுடன் ஒப்­பிட்டு செய்த பகுப்­பாய்வில் அவ­ரது அடை­யாளம் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.   இவ­ரது மனை­வியை சி.ஐ.டி. கைது செய்­துள்ள நிலையில் அவர் கண­வ­ருக்கு தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் உதவி ஒத்­தாசை வழங்­கி­னாரா என்­பது தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஷங்­ரில்லா ஹோட்­டலில் இரு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் பதி­வா­கின. அதி­லேயே இந்த தற்­கொலை தாக்­கு­தல்­களை வழி நடாத்­தி­ய­தாக நம்­பப்­படும் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்­க­ர­வாதி உயி­ரி­ழந்­துள்­ளமை தற்­போது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இரு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில்   ஒரு குண்­டு­தாரி மொஹம்மட் காசிம் மொஹம்மட் சஹ்ரான் என சி.ஐ.டி. அடை­யாளம் கண்­டி­ருந்­தது.  குடைக்­காரன் ஒழுங்கை, மொஹிடீன் பள்­ளி­வாசல் வீதி – காத்­தான்­குடி 3 எனும் முக­வ­ரியைக் கொண்ட சஹ்­ரானின் மனை­வி­யான அப்துல் காதர் பாத்­திமா ஹாதியா மற்றும் அவர்­க­ளது 4 வயது மகள் ஆகியோர்  சாய்ந்­த­ம­ருது வீட்டில்  நடாத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலில் காய­ம­டைந்து அம்­பாறை வைத்­தி­ய­சா­லையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்­போது சி.ஐ.டி. பிடியில் உள்­ளனர். அவர்­க­ளது டி.என்.ஏ. மூலக் கூறு­க­ளையும் சஹ்­ரானின் சகோ­த­ரியின் டி.என்.ஏ. கூறு­க­ளையும் பெற்று சஹ்­ரானின் தலைப்­ப­கு­தியில் இருந்து பெறப்­பட்ட டி.என்.ஏ. மாதி­ரி­க­ளுடன் ஒப்­பீடு செய்தே  பகுப்­பாய்வில்  குறித்த தற்­கொ­லை­தாரி சஹ்­ரானே என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஷங்­ரில்லா நட்­சத்­திர ஹோட்­டலில் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் நடாத்­திய மற்­றை­யவர்  தெமட்­ட­கொடை, பேஸ்லைன் வீதி, மஹ­வில கார்டின் எனும் முக­வ­ரியைக் கொண்ட மொஹம்மட் இப்­ராஹீம் இல்ஹாம் அஹமட் என்­ப­வ­ராவார்.  இவ­ரது சகோ­த­ர­ரான மொஹம்மட் இப்­ராஹீம் இன்ஷாப் அஹமட் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்­டுத்­தா­க்­கு­தலை நடாத்­தி­யி­ருந்தார்.

இது தொடர்பில் சி.ஐ.டி.யினர் இவர்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கிய குற்­றச்­சாட்டில் இந்த சகோ­த­ரர்­களின்  தந்­தை­யான  மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்­ராஹீம் மற்றும் அவர்­க­ளது இரு சகோ­த­ரி­களைக் கைது செய்து விசா­ரித்து  வரு­கின்­றனர். அத்­துடன் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தாக்­குதல்  நடாத்­திய இன்­ஷாப்பின் மனை­வி­யையும் சி.ஐ.டி கைது  செய்­துள்­ளது. இந் நிலையில் இவ்­விரு தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளி­னதும் அடை­யாளம் அவர்­க­ளது தந்­தை­யான மொஹம்மட் யூசுப் இப்­ரா­ஹீமின் டி.என்.ஏ. மாதி­ரி­க­ளுடன் ஒத்துப் போயுள்­ளன. அதன்­படி அவ்­வி­ரு­வரின் அடை­யா­ளங்­களும் தற்­போது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் தெமட்­ட­கொடை, பேஸ்லைன் வீதி, மஹ­வில கார்­டினில் இடம்­பெற்ற மூன்று பொலி­சாரின் உயிர்­களைப் பறித்த தற்­கொலை தாக்­கு­தலை ஷங்­ரில்லா ஹோட்டல் தற்­கொ­லை­தா­ரி­களில்  ஒரு­வ­ரான இல்ஹாம் அஹ­மட்டின் மனை­வி­யான பாத்­திமா ஜிப்­ரியா நடாத்­தி­யுள்­ள­தாக பொலிசார் அடை­யாளம் கண்­டனர்.இதன்போது அவரது மூன்று பிள்ளைகளும் அங்கு உயிரிழந்துள்ளன. இவை அனைத்தும் டி.என்.ஏ. பகுப்பாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தெஹிவளை ட்ரொபிகல் இன் எனும் தங்கு விடுதியில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்  தாக்குதலை வெலம்படை -கம்பளை மற்றும் லன்சியாஹேன வெல்லம்பிட்டி ஆகிய இரு முகவரிகளைக் கொன்ட அப்துல் லதீப் ஜெமீல் மொஹம்மட் நடாத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் தற்கொலைதாரியின் மனைவி மற்றும் இரு சகோதரர்களை கைது செய்து விசாரித்து வருகின்றது.  அதன்படி குறித்த தற்கொலைதாரியின் மனைவி, பிள்ளைகளின் டி.என்.ஏ. மூலக் கூறுகளைப் பெற்று செய்த பகுப்பாய்வில் அவரது அடையாளமும் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.