அசாதாரண நிலைமையை கட்டுப்படுத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்கவேண்டும்

ஜனாதிபதியுடன் இதுகுறித்து பேசவுள்ளோம் என்கிறார் கிரியெல்ல

0 594

பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து நிலவும் அசா­தா­ரண நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த உட­ன­டி­யாக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை நிய­மிக்க வேண்டும் எனவும் ஜனா­தி­பதி நாடு திரும்­பி­ய­வுடன் உட­ன­டி­யாக இது­கு­றித்து ஆராய்­வ­தா­கவும் சபை முதல்­வரும்  அமைச்ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது குறித்து எவரும் யோச­னை­யொன்று முன்­வைக்­க­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கடந்த சில தினங்­க­ளாக நாட்டில் சில பகு­தி­களில் தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் அர­சாங்­க­மாக இதனை கையாள என்ன செய்­யப்­போ­கின்­றீர்கள் எனவும் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக கொண்­டு­வரும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்த விட­யங்­களை வின­வி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்.

அமைச்சர் ரிஷா­திற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யொன்றை  கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக அது­ர­லியே ரதன தேரர் கூறி­ய­தாக ஊட­கங்கள் செய்­தி­களை முன்­வைத்து வரு­கின்­றன. ஆனால் அவர் அவ்­வாறு ஒரு முயற்­சியை எடுக்­கின்­றாரா என்ற விடயம் எமக்குத் தெரி­யாது. சபையில் இன்­னமும் அவ்­வா­றான யோசனை ஒன்று முன்­வைக்­கப்­பட்­ட­தாக அறி­ய­வில்லை. அவ்­வாறு ஏதேனும் தீர்­மா­னங்கள் எடுப்­பார்கள் என்றால் அப்­போது அது­கு­றித்து ஆராய முடியும். கட்­சி­யாக நாமும் இது குறித்து ஆரா­ய­வில்லை. பயங்­க­ர­வாத தாக்­குதல் நடத்­தப்­பட்டு அத­னுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்நிலையில் அனைவர் மீதும் குற்றம் சுமத்தி நாட்டின் நிலை­மை­களை சீர­ழிக்க எவரும் முயற்­சிக்­கக்­கூ­டாது.

அதேபோல் கடந்த ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்து ஆரா­யவும் அதன் பின்­ன­ரான சில தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து ஆரா­யவும் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு ஒன்­றினை அமைக்க வேண்டும். அதற்­கான யோச­னையை நாம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் முன்­வைத்­துள்ளோம், எனினும் ஜனா­தி­பதி நாட்டில் இல்­லாத கார­ணத்­தினால் அவர் நாடு திரும்­பி­ய­வுடன் உட­ன­டி­யாக இது குறித்து ஆராய்ந்து அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.  அதேபோல் பாது­காப்பு அதி­கா­ரிகள் சிலரின் ஒத்­து­ழைப்­புடன் தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தாக வெளி­யா­கி­யுள்ள காணொ­லிகள் குறித்தும் ஆராய வேண்டும். இது குறித்து பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தனவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் பாதுகாப்புத் தரப்பினரை கொண்டே நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.