வேடிக்கை பார்ப்பதற்கு படையினர் தேவையா?

0 749

கடந்த சில தினங்­க­ளாக நாட்டின் பல பகு­தி­களில் முஸ்லிம் மக்கள் இலக்கு வைத்து தாக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்டு, எரி­யூட்­டப்­பட்­டுள்­ளன.

ஏப்ரல் 21 ஆம் திகதி நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும், தேவா­ல­யங்­க­ளையும் இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்தே இந்த வன்­முறைச் சம்­ப­வங்கள் திட்­ட­மிட்டு நடத்­தப்­ப­டு­கின்­றன.
நீர்­கொ­ழும்பு– பல­கத்­துறை, பெரி­யமுல்லை பகு­தி­களில் ஆரம்­ப­மான வன்­முறைச் சம்­ப­வங்கள் அத­னை­ய­டுத்து சிலாபம், குரு­நாகல் மாவட்டம், குளி­யாப்­பிட்டி மற்றும் நிக்­க­வ­ரட்­டிய பகு­தி­க­ளி­லுள்ள முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்கும் வியா­பித்­தன. நேற்று முன்­தினம் கம்­பஹா மாவட்­டத்தில் மினு­வாங்­கொடை நக­ரையும் வன்­மு­றை­யா­ளர்கள் விட்டு வைக்­க­வில்லை. தொடர்ந்து இடம்­பெற்று வந்­துள்ள தாக்­குதல் சம்­ப­வங்கள் பள்­ளி­வா­சல்­க­ளையும் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­க­ளையும் வீடு­க­ளையும் இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இது­வரை 15 க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. இப்­பள்­ளி­வா­சல்­களில் சில தினங்­க­ளாக தொழுகை நடாத்த முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. 30 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் கிரா­மங்கள் இன­வா­தி­க­ளுக்கு இரை­யா­கி­யுள்­ளன.

மினு­வாங்­கொடை நகரில் 27 கடைகள் தாக்­கப்­பட்டுள்ளன. இவற்றில் 12 கடைகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளன. முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான தாக்­கு­தல்கள் திட்­ட­மிட்ட குழு­வொன்­றி­னாலே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் கண்­டி–­தி­கன வன்­செ­யல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான மஹசொன் பல­கா­யவின் தலைவர் அமித் வீர­சிங்க கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

தாக்­குதல் சம்­ப­வங்­களும் வன்­மு­றை­களும் பொலிஸ் ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த போதே இடம்­பெற்­றுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. பாது­காப்புப் படை­யினர் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த போதே வன்­மு­றை­யா­ளர்கள் தங்­க­ளது தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தா­கவும், படை­யினர் எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்­லை­யெ­னவும் மக்­களும் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களும் தெரி­வித்­துள்­ளார்கள்.

பொலிஸ் ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லி­ருந்த நேரத்தில் வன்­செ­யல்­களைத் தடுப்­ப­தற்கு பாது­காப்பு படை­யினர் நட­வ­டிக்கை எடுக்­கா­ம­லி­ருப்­பது கண்­ட­னத்­துக்­கு­ரி­யது. வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக, கடு­மை­யாக நட­வ­டிக்­கை­களை அதி­கா­ரத்­தி­லுள்ளோர் எடுக்­க­வேண்டும் என கோரு­கிறோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

மேலும் இந்­நாட்டில், தான் சுய­மாக வாழ்­வ­தற்கு போராட்­டத்தை கையி­லெ­டுக்க வேண்டும் என இன்னும் ஒரு சமூ­கத்­தையும் நினைக்கத் தூண்­டா­தீர்கள். கிறிஸ்­தவ ஆல­யங்­களைத் தாக்­கு­கின்ற பயங்­க­ர­வாதம் என்­றாலும் சரி, பள்­ளி­வா­சல்­களைத் தாக்­கு­கின்ற பயங்­க­ர­வாதம் என்­றாலும் சரி, எந்­த­வி­த­மான பயங்­க­ர­வா­தத்­துக்கும் இந்­நாட்டில் இட­மி­ருக்­கக்­கூ­டா­தென அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டின் சமா­தா­னத்தைக் குலைக்க சில குழுக்கள் செயற்­பட்டு வரு­கின்­றன என்­பதை ஏற்­றுக்­கொண்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு பாது­காப்புப் படை­யி­ன­ருக்கு சகல அதி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன எனத் தெரி­வித்­துள்ளார். எனினும் பாது­காப்புப் படை­யினர் தங்கள் அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.
வன்­செ­யல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்தும் அவர்கள் அத­னையும் மீறிச் செயற்­பட்டால் துப்­பாக்கிச் சூடு நடத்த வேண்­டி­யேற்­படும். அதனால் காயம் அல்­லது உயிர் ஆபத்­துக்கள் ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க முடி­யாது என கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் பியல் டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இன, மத, கட்சி, பதவி பாகுபாடுகளின்றி இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். படைத்தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுகளை படைவீரர்கள் கடுமையாக அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு உத்தரவுகள் அமுல்படுத்தப் பட்டாலே இன வன்முறையாளர்களின் பிடியிலிருந்து முஸ்லிம்களையும் நாட்டையும் காப்பாற்ற முடியும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.