நாட்டில் யுத்த பீதி கொண்டுள்ளமை ஒரு துர்ப்பாக்கியமே

வன்னி மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்தான் பாராளுமன்றத்தில் ஆற்­றிய உரையின் தொகுப்பு:

0 656

 

30 வருட யுத்தம் நிறை­வ­டைந்து 10 வருட அமை­தியை அனு­ப­வித்த நிலையில் மீண்டும் யுத்­த­பீதி நாட்டில் நிலை­கொண்­டுள்­ளமை ஒரு துர்ப்­பாக்­கி­ய­மான விட­ய­மாகும். ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்­தெ­ழுந்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­களை நான் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன். ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற வகையில், குறித்த தீவி­ர­வாத நட­வ­டிக்கை மூலம் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டனும், அதே­போல உடல் ரீதி­யா­கவும், உள­ரீ­தி­யா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டனும், பொது­வா­கவே அனைத்து இலங்கை மக்­க­ளுடன் நான் ஆழ்ந்த அனு­தா­பங்­களைப் பகிர்ந்து கொள்­கிறேன்.

மன்­னிப்புக் கோருதல், மற்­றை­ய­வர்­களைக் குறை­கூ­றுதல், இன­வாத்­தைக்­கக்­குதல், அர்த்­த­மின்றி விமர்­சித்தல், பிணங்­க­ளுக்கு மேலே இருந்து அரசில் இலாபம் தேடுதல், அல்­லது ஒன்­றுமே பேசாது ஒதுங்­கி­யி­ருத்தல் எனும் எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எமது நாட்டில் நிலை­யான அமை­தியைக் கொண்­டு­வ­ராது.

மாறாக, அர்த்­த­மற்ற விமர்­ச­னங்­களும், இன­வாதக் கருத்­துக்­களும் இலங்­கையில் வாழும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் இன மக்­க­ளுக்­கி­டை­யி­லான வெறுப்­பு­ணர்வை மேலும் அதி­க­ரிக்கச் செய்து நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும்.

ஆகவே, அர­சி­ய­ல­மைப்பில் உறு­தி­செய்­யப்­பட்­டுள்ள வகையில் பௌத்த மதத்­துக்கு முதன்மை ஸ்தானத்தை வழங்­கு­வ­துடன் தொல்­கால வர­லாற்றைக் கொண்ட இலங்கைப் பிர­ஜை­க­ளான இந்து, முஸ்லிம், கத்­தோ­லிக்க மத மற்றும் ஏனைய இனக்­கு­ழுக்­க­ளுக்கும் உரிய கௌர­வத்­தையும், மத உரி­மை­யையும், பாது­காப்­பையும் வழங்­கு­வதன் மூலமே எமது நாடு ஆசி­யாவில் அமை­தி­யான வள­மிக்க நாடாக மாறும் என்று இந்த சபையில் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

07 ஆம் திகதி இந்த சபையில் உரை­யாற்­றிய, ஜனா­தி­பதி, இந்த யதார்த்­தத்தை மிகத் தெளி­வான முறையில் எடுத்துக் கூறினார். இந்த தீவி­ர­வாதக் கும்­பலை பூண்­டோடு அழிப்­பதில் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் வழங்­கி­வரும் பங்­க­ளிப்பை தெளி­வு­ப­டுத்­தினார். இந்த தீவி­ர­வாத, நாச­கார நட­வ­டிக்­கை­க­ளுடன் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் தொடர்­பு­ப­டுத்த வேண்டாம் என்று அவர் உறு­தி­யா­கவே வேண்டிக் கொண்டார்.

அதே­போல, 30 வருட யுத்­தத்தின் போது அப்­பாவி தமிழ் பொது­மக்கள் அனு­ப­வித்த இன்­னல்­களை கண்­கூ­டாகக் கண்ட வட மாகாண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக முன்­வைத்த கருத்­துக்கள் வர­வேற்­கத்­தக்­கது. குறிப்­பாக, பா .உ. ஸ்ரீதரன் முஸ்­லிம்­களை மனி­தா­பி­மானம் அற்­ற­வ­கையில் நடாத்த வேண்டாம் என்றும் துன்­பு­றுத்த வேண்டாம் என்றும் வேண்­டிக்­கொண்டார். இலங்கை முஸ்­லிம்கள் சார்­பாக அவ­ருக்கும் நான் நன்­றி­கூறக் கட­மைப்­பட்­டுள்ளேன்.

ஆனால், யதார்த்­தத்­துக்குப் புறம்­பான முறையில் சில ஊட­கங்­களும் அர­சி­யல்­வா­தி­களும் இலங்கை வாழ் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் குறி­வைத்து தொடர்ந்தும் தாக்­கி­வ­ரு­வது மிகவும் கவ­லைக்­கி­ட­மா­ன­தாகும். இன்­றைய இலங்­கையில் உரி­மைகள் மறுக்­கப்­பட்ட திறந்­த­வெளிக் கைதி­க­ளாக முஸ்­லிம்கள் பீதி­யுடன் வாழ்ந்­து­வ­ரு­கின்­றனர். இன்று முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்­பற்ற ஒரு நாடாக இலங்கை மாறி­வ­ரு­கி­றது. முஸ்­லிம்கள் பாட­சா­லை­க­ளிலும், அரச அலு­வ­ல­கங்­க­ளிலும், அரச வைத்­தி­ய­சா­லை­க­ளிலும், அனைத்து அரச நிறு­வ­னங்­க­ளிலும் புறக்­க­ணிப்­பட்டும் சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டும் வரு­கின்­றனர். நாம் இதனை இந்த ஜன­நா­யக நாட்டில் எதிர்­பார்க்­க­வில்லை. மேற்­கத்­தேய சதி­வ­லையில் சிக்­கிய 50 அலல்து 100 பேரைக் கார­ணங்­காட்டி 20 இலட்சம் முஸ்­லிம்­க­ளையும் பலிக்­க­டா­வாக்கும் சதித்­திட்டம் தோற்­க­டிக்­கப்­பட வேண்டும்.

உண்மை அறி­யப்­ப­டாமல் எந்­த­வ­கை­யான நிலை­யான தீர்­வையும் அடைய முடி­யாது.

– 21 ஆம் திகதி குண்­டு­வெ­டித்­தது, உட­ன­டி­யாக நிகாப் தடை­செய்­யப்­ப­டு­கி­றது. ஆனால் எந்­த­வொரு தற்­கொலை குண்­டு­தா­ரியும் முகத்தை மறைத்துக் கொண்டு இந்த தாக்­கு­தலில் ஈடு­ப­ட­வில்லை.

– 21 ஆம் திகதி குண்­டு­வெ­டித்­தது, மறுநாள் பள்­ளி­வா­சல்­களில் பாங்கு சொல்­லு­வது நிறுத்­தப்­பட வேண்டும் என்றும் கூறு­கின்­றனர். ஆனால் பள்­ளி­வா­சல்கள் அனைத்தும் இந்தத் தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றன.

– 21 ஆம் திகதி குண்­டு­வெ­டித்­தது, மஸ்ஜித் பதி­வுகள் தடை­செய்­யப்­பட வேண்டும் என்று கூறு­கின்­றனர்.

– 21 ஆம் திகதி குண்­டு­வெ­டித்­தது, மறுநாள் அரபு மத்­ர­ஸாக்கள் தடை­செய்­ய­பட வேண்டும் என்று கூறு­கின்­றனர்.

– 21 ஆம் திகதி குண்­டு­வெ­டித்­தது, மறுநாள் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் புறக்­க­ணிக்­கப்­பட வேண்டும் என்று பிர­சாரம் செய்­கின்­றனர்.

– 21 ஆம் திகதி குண்­டு­வெ­டித்­தது, மறுநாள் சிறு­பான்மைக் கட்­சிகள் தடை­செய்­யப்­பட வேண்டும் என்று திட்டம் தீட்­டு­கி­றார்கள்.

– 21 ஆம் திகதி குண்­டு­வெ­டித்­தது, மறுநாள் இது பௌத்த நாடு முஸ்­லிம்கள் இந்த நாட்­டை­விட்டு வெளி­யேற வேண்டும் என்று கர்ச்­சிக்­கின்­றனர்.

– 21 ஆம் திகதி குண்­டு­வெ­டித்­தது, மறுநாள் இது இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் என்று பெயர் நாமம் சூட்­டு­கின்­றனர்.

– 21 ஆம் திகதி குண்­டு­வெ­டித்­தது, மறுநாள் அனைத்து மஸ்­ஜித்­களும், மத்­ர­ஸாக்­களும், முஸ்லிம் வீடு­களும் ஆயுதக் கிடங்­கு­க­ளாக சித்­தி­ரிக்­கப்­பட்­டன
இவை அனைத்தும் ஆழ­மாக பதிந்­துள்ள இன­வாத்தின் வெளிப்­பாடே அன்றி யதார்த்­த­பூர்­வ­மா­னதோ அல்­லது புத்­தி­சா­து­ரி­ய­மான கருத்­துக்­களோ, பிர­சார நட­வ­டிக்­கை­களோ அல்ல.

உலக முஸ்­லிம்­களின் அமை­திக்கு எதி­ராக மேற்­கத்­தேய சக்­தி­களால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு தீய சக்­தியே இந்த ISIS. இதனை ஒரு இஸ்­லா­மிய அமைப்பு என்று கூறு­ப­வர்­க­ளுக்கும் இந்த ISIS ஐ பின்­தொ­டர்ந்து தற்­கொலை செய்து கொண்­ட­வர்­க­ளுக்கும் இடையே எவ்­வித வித்­தி­யா­சமும் இல்லை. இந்த இரு தரப்­பி­னரும் சதி­கா­ரர்­க­ளே­யன்றி வேறு­யா­ரு­மல்ல.

யார் இந்த ISIS?

மேற்­கத்­தேய நாடு­களால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட யூத இனத்­தைச்­சேர்ந்த ஒரு­வனே இந்த அபுபக்ர் அல்­பக்­தாதி. அறபு மொழியில் புலமை பெற்ற இவன் ஒரு முஸ்­லி­மல்ல. ஆகவே இந்த ISIS தாக்­கு­தலை இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் என்று முத்­தி­ரை­குத்த யாரும் முயற்­சித்தால் அது அவர்­களின் அறி­யா­மை­யாகும்.

யார் இந்த வஹா­பிகள்?

மேற்­கத்­தேய ஊடு­ரு­வ­லி­லி­ருந்தும், கலா­சார ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்தும் சவுதி அரசை விடு­தலை செய்ய 18 ஆம் நூற்­றாண்டில் போராடி வெற்­றி­பெற்ற ஒரு­வரே இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப். இவர் ஒரு விடு­தலைப் போரா­ளியும், சீர்­தி­ருத்­த­வா­தி­யு­மாவார். இவ­ரு­ட­னான ஒப்­பந்­தத்­திற்கு இணங்­கவே புனித இஸ்­லா­மிய சமயம் சவுதி அரே­பி­யாவில் அரச மார்க்­க­மாக இன்றும் பேணப்­பட்­டு­வ­ரு­கி­றது.

சுமார் 1400 வரு­டங்­க­ளாக இந்­தி­யாவின் மேற்­குக்­கரை கடல் வர்­த்த­க­வழி ஊடாக இலங்­கைக்கு இஸ்லாம் சமயம் வந்­து­சேர்ந்­தாலும், அதில் பொது­வா­கவே கலா­சாரக் கலப்பு காணப்­பட்­டது. இந்து கலா­சா­ரத்தின் தாக்கம் காணப்­பட்­டது. அதன் கார­ண­மா­கவே அன்­றைய முஸ்லிம் பெண்கள் சேலை கட்டி அதே துணி­யினால் தலை­யையும் முகத்­தையும் மறைத்­தனர். சேலை இலங்­கையின் தேசிய கல­ாசார ஆடை­யல்ல. அது இந்­தி­யாவின் கலா­சாரம். ஆனால் அன்­றைய முஸ்லிம் பெண்கள் நீள­மான சட்­டை­களை உடுத்தே அதன் மேலால் சேலை கட்­டி­னார்கள். அது அப்­போதும் தேசிய ஆடைக் கலா­சா­ரத்­தி­லிந்து வேறு­பட்ட அந்­நி­ய­மான ஓர் ஒழுக்­க­மான ஆடை­யாகக் காணப்­பட்­டது என்­பதை இந்த சபையில் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

இருப்­பினும் 1977 திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கை­யுடன் கலா­சாரக் கலப்­பற்ற தூய இஸ்லாம் பின்­பற்­றப்­பட்ட மத்­திய கிழக்கு நாடு­க­ளு­ட­னான தொடர்­புத்­தன்மை இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் சமய மறு­ம­லர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. இந்த சமய மறு­ம­லர்ச்­சியை வெறு­மனே ஒரு தௌஹீத்­வாத ஊடு­ருவல் என்று குறிப்­பி­டு­வது பொருத்­த­மற்­றது. மாறாக, இன்று இலங்கை வாழ் 90 வீத­மான முஸ்­லிம்கள் இந்த சமய மறு­ம­லர்ச்­சியின் பங்­கா­ளர்கள், தூய இஸ்­லாத்தை பின்­பற்­று­வதில் ஆர்வம் கொண்­ட­வர்கள் அல்­லது ஏகத்­துவக் கொள்­கையை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­வர்கள் என்று குறிப்­பி­டு­வது மிகவும் பொருத்­த­மா­ன­தாகும்.

அதா­வது, முன்னர் இந்­தி­யாவின் சேலை கட்­டிய இலங்கை இஸ்­லா­மிய பெண்கள் தற்­போது இஸ்­லா­மிய நாடு­க­ளிலும் மேற்­கற்­தேய நாடு­க­ளிலும் இஸ்­லா­மிய பெண்கள் பொது­வாக அணியும் ஆடை­களைத் தெரி­வு­செய்­வதில் ஆர்வம் காட்­டு­கின்­றனர். இதனை ஒரு நவீ­னத்­துவம் அல்­லது FASHION என்றும் குறிப்­பி­டலாம். இதனை அடிப்­ப­டை­வா­த­மாக அல்­லது கறுப்பு அபா­யாவை தீவி­ர­வாதத்தின் அடை­யா­ள­மாகச் சித்­தி­ரிக்க முயற்­சிப்­பது ஒரு அறி­வு­பூர்­வ­மான விட­ய­மல்ல. இதனை முஸ்­லிம்­களின் சமய மறு­ம­லர்ச்­சியைச் சகிக்க முடி­யாத பெரும்­பான்­மையின் நச்­ச­ரிப்­பா­கவும் குறிப்­பிட முடியும்.

பௌத்த, இந்து, கிறிஸ்­தவ சம­யத்­த­வர்கள் ஆடை அணி­வது போல, அவர்­க­ளது உணவுப் பழக்கம், மதுப் பாவனை, அவர்­க­ளது சமூக தொடர்­புகள், விவாக – மரண சம்­பி­ர­தா­யங்­களும் முஸ்­லிம்­களால் கடை­ப்பி­டிக்­கப்­பட வேண்­டு­மென யாரா­வது எதிர்­பார்த்தால் அது அப்­பட்­ட­மான ஓர் இன­வாத நட­வ­டிக்­கை­யாகும். சர்­வ­தேச மனித உரிமை மீற­லாகும்.

இதனைக் கலா­சாரத் திணிப்பு என்றும் கூறலாம். ஒவ்­வொரு சமயக் குழுக்­க­ளுக்கும் தனித்­து­வ­மான பண்­பு­களும் விழு­மி­யங்­கழும் உள்­ளதை நாம் பொது­வா­கவே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே நாக­ரிகம், இதுவே கலா­சார முதிர்ச்சி என்­பதை மற்­றைய சம­யங்­களும் உணர வேண்டும். வேறு­வார்த்­தையில் குறிப்­பிடின், இதனைப் பன்­மைத்­து­வ­வாதம் “Pluralism” என்றும் குறிப்­பி­டலாம்.

பன்­மைத்­து­வ­வாதம் இன்று நாக­ரிக முதிர்ச்­சி­ய­டைந்த மேற்­கத்­தைய நாடு­க­ளான கனடா, நியு­ஸி­லாந்து, ஐக்­கிய இராச்­சியம், ஜேர்மனி, அவுஸ்­தி­ரே­லியா, சுவிட்­சர்­லாந்து, இத்­தாலி ஆகிய பல நாடு­களில் மிகச் சிறந்­த­மு­றையில் கடைப்­பி­டிக்­கப்­பட்­டு­வ­ரு­கி­றது. இருப்­பினும் இந்த நாடு­க­ளி­லிலும் சில மத­வாத அடிப்­ப­டை­வா­தி­களின் நாச­காரச் செயல்கள் இல்­லாமல் இல்லை. ஆனால் குறிந்த நாடு­களின் பாரா­ளு­மன்­றங்கள் மிகவும் நிதா­ன­மா­கவும் பொறுப்­பு­டனும் நாக­ரி­க­மான முறை­யிலும் நடந்து கொள்­கின்­றன.

கிறிஸ்ட் சேர்ச் தாக்­கு­தலின் பின்னர் நியு­ஸி­லாந்து பிர­தமர் நடந்­து­கொண்ட விதம் மிகவும் வர­வேற்­கத்­தக்­கது. ஆனால், இலங்கைப் பாராளுமன்றத்தில் எல்லைமீறிய இனவாதக் கருத்துப்பரிமாறல்கள் எமது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டுவதையிட்டு நான் இந்த நாட்டில் சமாதானத்தை விரும்பும் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

இறுதியாக, பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மக்களின் தாய்நாடான எமது தாய்நாட்டில் மீண்டும் சமாதானமும் அமைதியும் நிலவி வேகமாகவும் நிலையானதுமான அபிவிருத்தியை அடைவதில் இந்தப் பாராளுமன்றம் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இந்த வகையில், 2009இன் பின்னர் இந்த நாட்டில் நிலையான சமாதானத்தை அடைவதில் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும், குறித்த 10 வருடகாலத்தில் இடம்பெற்ற வெறுப்புணர்வை தீவிரப்படுத்திய விடயங்கள் குறித்தும் மீளாய்வுக்கு உட்படுத்துவதுடன், குறித்த தறகொலைத் தாக்குதலுக்கு ஏதுவாக அமைந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை கண்டறிந்து தேசிய சமாதானத்தையும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்புவதற்கானதொரு பொறிமுறையை உருவாக்குவதற்கானதொரு தெரிவுக்குழு அல்லது ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.