பாதுகாப்பு தரப்பு வேடிக்கை பார்க்க ஊரடங்கின் போது கடும் தாக்குதல்

குருநாகல் மாவட்டத்தில் ஹெட்டிபொல, கொட்டம்பிட்டிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொட்டுவ, கினியம, பூவல்ல, அசனாகொடுவ, கல்ஹினியாகட்டுவ கிராமங்களில் அதிக சேதம்

0 604

வட மேல் மாகா­ணத்­திற்­குட்­பட்ட பல்­வேறு முஸ்லிம் கிரா­மங்கள் மீது வன்­முறைக் கும்­பல்கள் மேற்­கொண்ட தாக்­கு­தல்­களில் பலத்த சேதங்கள் பதி­வா­கி­யுள்­ளன. சுமார் 15 பள்­ளி­வா­சல்கள்  தாக்­கப்­பட்­டுள்­ள­துடன் பெருந்­தொ­கை­யான வர்த்­தக நிலை­யங்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

வீடு­களும் தாக்­கப்­பட்­டுள்­ள­துடன் உடை­மை­க­ளுக்கும் தீ வைக்­கப்­பட்­டுள்­ளது.
குறிப்­பாக குரு­நாகல் மாவட்­டத்தின் குளி­யா­பிட்­டிய, வாரி­ய­பொல, ஹெட்­டி­பொல, பிங்­கி­ரிய, நிக்­க­வ­ரட்­டிய, கொபேய்­கனே ஆகிய பொலிஸ் பிரி­வு­க­ளிலும் புத்­தளம் மாவட்­டத்தின் சிலாபம், மார­வில மற்றும் கொஸ்­வத்த பொலிஸ் பிரி­வு­க­ளி­லு­மேயே அதிக சேதங்கள் பதி­வ­கை­யுள்­ளன.

குரு­நாகல் மாவட்­டத்தில் ஹெட்­டி­பொல, கொட்­டம்­பிட்­டிய, பண்­டா­ர­கொஸ்­வத்த, மடிகே அனுக்­கன, எஹட்­டு­முல்ல, தோர­கொட்­டுவ, கினி­யம, பூவல்ல, அச­னா­கொ­டுவ, கல்­ஹி­னி­யா­கட்­டுவ கிரா­மங்­க­ளி­லேயே அதிக சேதங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

நிக்­க­வ­ரட்டி பகு­தியில் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யங்கள் முற்­றாக சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அங்கு சிலர் வெட்டிக் காயப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அறிய முடி­கின்­றது. எனினும் பாதிக்­கப்­பட்ட வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் வீடுகள் குறித்த சரி­யான புள்ளி விப­ரங்­களை நேற்று இரவு வரை உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

குறிப்­பாக வன்­மு­றை­யா­ளர்கள் முதலில் சொத்­துக்­களை இலக்கு வைத்த போதும் பின்னர் உயிர்­க­ளையும் இலக்கு வைத்து தாக்­கு­தலை ஆரம்­பித்­த­தாக வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட நபர் ஒருவர் தெரி­வித்தார்.

இதனால் பலர் புனித நோன்­புடன் காடு­க­ளிலும் வயல்­க­ளிலும் தஞ்­ச­ம­டைய வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். தொடர்ந்தும் வட மேல் மாகா­ணத்தின் முஸ்லிம் கிரா­மங்­களில் உள்­ள­வர்கள் அச்­சத்­து­ட­னேயே உள்­ள­தாக அவர் கூறினார்.

வன்­மு­றை­யா­ளர்கள் கற்கள், பொல்­லுகள், இரும்புக் கம்­பிகள், பெற்றோல் கலன்கள் மற்றும் பெற்றோல் குண்­டு­களைக் கொண்டு வந்தே தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­தாக பிர­தேச மக்கள் தெரி­வித்­தனர்.

அத்­துடன் குண்­டர்கள் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்த சமயம் அங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த படை­யி­னரும் பொலி­சாரும் அவற்றை வேடிக்கை பார்த்­த­தா­கவும் மக்கள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

பல திசை­க­ளி­லி­ருந்தும் குழுக்கள் குழுக்­க­ளாக மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் முச்­சக்­கர வண்­டி­க­ளிலும் வந்த குண்­டர்­களே இவ்­வாறு தாக்­கு­தலில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் சில முஸ்லிம் கிரா­மங்­களை சிங்­கள மக்கள் இணைந்து கடந்த 48 மணி நேர­மாக பாது­காத்து வரு­வ­தாகவும் பிர­தேச முஸ்­லிம்கள் தெரி­விக்­கின்­றனர். குறிப்­பாக கொபேய்­கனே பொலிஸ் பிரிவின் பன்­னவ முஸ்லிம் கிரா­மத்­துக்குள் உள் நுழையும் அனைத்து வழி­க­ளிலும் சிங்­கள மக்கள், வன்­மு­றை­யா­ளர்­களை உள்ளே நுழைய விடா­த­வாறு இரு தினங்­க­ளாக காவல் கட­மையில் இருந்­த­தா­கவும் அதனால் அந்த கிரா­மத்தில் எந்த அசம்­பா­வி­தங்­களும் நேற்று இரவு 7.00 மணி வரை பதி­வா­கி­யி­ருக்­க­வில்லை என பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.

இந் நிலையில் வடமேல் மாகாணம் முழுதும் நேற்று மாலை 4.00 மணி வரை நீடித்த பொலிஸ் ஊர­டங்குச் சட்டம் இரு மணி நேரம் தளர்த்­தப்­பட்டு மீள நேற்று மாலை 6.00 மணிக்கு பிறப்­பிக்­கப்­பட்­டது. அது முதல் இன்று காலை 6.00 மணி வரை அந்த ஊர­டங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் பேச்­சாளர் கூறினார்.

எனினும் கம்­பஹா மாவட்­டத்­துக்கு நேற்று இரவு 7.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது. அத்­துடன் வடமேல் மாகாணம் மற்றும் கம்­பஹா மாவட்டம் தவிர்த்த நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுக்கு நேற்று இரவு 9.00 மணி முதல் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­ட­துடன் அது இன்று அதி­காலை 4.00 மணிக்கு தளர்த்­தப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டது.

நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்­தவும், முஸ்லிம் கிரா­மங்கள் மீதான தாக்­கு­தல்­களை நெறிப்­ப­டுத்­திய, அதில் பங்­கேற்­ற­வர்­களைக் கைது செய்­யவும் இவ்­வாறு ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

இந் நிலையில் வன்­மு­றை­களில் ஈடு­பட எவ­ரேனும் எத்­த­னித்தால் அவர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடாத்த முப்படைகளின் தளபதிகளும் பொலிஸ் மா அதிபரும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதற்கிடையில் பிந்திக் கிடைத்த தகவல்களுக்கமைய நேற்றிரவு 7 மணியளவில் குருநாகல் மாவட்டத்திற்குட்பட்ட ஹிப்பம்பொல முஸ்லிம் கிராமத்தில் அரபுக் கல்லூரி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பன்னவ கிராமத்தை தாக்குவதற்கு தயாராவதாக கிடைத்த தகவல்களால் அக் கிராமத்தில் பதற்ற நிலையும் தோன்றியது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.