கிழக்கு ஷரீஆ பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும்

கவிந்த, அப்புஹாமி எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

0 826

கிழக்கில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்தை அரசு பொறுப்­பேற்று அங்கு அனைத்து மதங்­க­ளையும் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு திறந்த கல்வி வச­தி­களை வழங்­க­வேண்டும். அத்­தோடு சம­யத்தை முதன்­மை­யாகக் கொண்டு நாட்­டினுள் இயங்கும் கட்­சிகள் தடை­செய்­யப்­ப­ட­வேண்டும். இதற்­கான சட்டம் இயற்­றப்­பட வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளார்கள்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜய­வர்­தன மற்றும் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி ஆகிய இரு­வரும் இணைந்து ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­துள்ள 10 கோரிக்­கைகள் அடங்­கிய கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இக் கடிதத்தின் பிர­திகள் பிர­தமர், எதிர்க்­கட்சித் தலைவர், பேராயர் கர்­தினால் மெல்கம் ரன்ஜித் மற்றும் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

‘‘நாட்டின் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய பாது­காப்புப் பிரி­வினர் அப்­பாவி மக்­களின் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­தா­த­தி­னா­லேயே உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. இவ்­வா­றான சூழ்­நி­லையில் அர­சி­யல்­வா­திகள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் விரல் நீட்­டிக்­கொண்­டி­ருப்­பதை நாம் எதிர்­பார்க்­க­வில்லை. நாட்டின் ஜனா­தி­பதி என்ற வகையில் நீங்கள் நாட்டு மக்கள் அனை­வ­ரதும் பாது­காப்­புக்குப் பொறுப்­பா­ன­வ­ராக இருக்­க­வேண்டும்.

கத்­தோ­லிக்க மக்கள் இச்­சந்­தர்ப்­பத்தில் சொந்­தங்­களை இழந்து துன்­பத்தில் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்கள். அடிப்­ப­டை­வா­திகள் ஏனைய இன மக்­க­ளுக்கு எதி­ராக மீண்டும் தாக்­கு­தல்­களை நடத்­தலாம். இதனால் மீண்டும் உயிர்கள் காவு கொள்­ளப்­ப­டலாம். அதனால் நாம் உங்­க­ளிடம் பின்­வரும் கோரிக்­கை­களை முன்­வைக்­கிறோம். இவற்றை நீங்கள் கவ­னத்­தில்­கொண்டு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டு­மெனக் கோரு­கிறோம்.

*கிழக்கில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் அர­சினால் கையேற்­கப்­பட வேண்டும். அங்கு அனைத்து மதங்­க­ளையும் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு திறந்த கல்வி வச­தி­களை வழங்­க­வேண்டும்.

*சம­யத்தின் அடிப்­ப­டையில் இயங்­கு­வ­தற்கு நாட்­டினுள் எந்­தவோர் அர­சியல் கட்­சிக்கும் இட­ம­ளிக்கக் கூடாது. அவ்­வா­றான கட்­சிகள் சட்­டத்தின் மூலம் தடை செய்­யப்­பட வேண்டும்.

*பிர­தான நான்கு அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் அர­சி­யலை முழு­மை­யாக மறந்து இச்­சந்­தர்ப்­பத்தில் நாட்­டைப்­பற்றி மாத்­தி­ரமே சிந்­தித்து உரிய தீர்­வு­களைப் பொறுப்­புடன் நிறை­வேற்றிச் செயற்­பட வேண்டும்.

*இலங்­கை­யி­லுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் அக­திகள் அனை­வ­ரையும் ஒரு முகாமில் ஒன்­றி­ணைக்க வேண்டும். நாட்­டி­னதும், அவர்­க­ளதும் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லற்ற வகையில் இச்­செ­யற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

*நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் வீடு­களில் பொலிஸ் மற்றும் இரா­ணுவம் சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். மக்­களின் பாது­காப்­புக்­காக திட்­டங்கள் வகுக்­கப்­பட வேண்டும்.

*சட்டம், ஒழுங்கு அமைச்சு பாது­காப்பு தொடர்பில் அனு­ப­வ­முள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்­கப்­படல் வேண்டும்.

*நாட்டில் அசா­தா­ரண நிலை­யொன்று உரு­வா­காமல் தடுத்து, நாட்டின் சமா­தா­னத்தைப் பாது­காக்க பேராயர் கர்­தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்­டகை உட்­பட மதத் தலை­வர்கள் நாட்டின் பாது­காப்பு தொடர்பில் தொடர்­பு­களைப் பேணு­வ­தற்கு பாது­காப்புப் பிரிவில் அதி­கா­ரி­யொ­ரு­வரை நிய­மிக்­க­வேண்டும்.

*நாட்­டி­லுள்ள பாட­சா­லைகள், உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் அனைத்து மதங்­க­ளையும் சேர்ந்த மாண­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வேண்டும்.

* இன­வாதம் அடிப்­ப­டை­வாதம் மற்றும் தீவி­ர­வா­தத்­துக்கு ஆத­ரவு வழங்கும் அனைத்து சமய நிறு­வ­னங்கள் மற்றும் அமைப்­புகள் அனைத்தும் தடை­செய்­யப்­ப­ட­வேண்டும்.

*தீவி­ர­வா­தத்­துக்கு ஆதரவு வழங்கியுள்ள அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் தாங்கள் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தின் பிரதிகள் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளுக்கும் கையளிக்கப்பட்டுள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.