மக்களின் ஒத்துழைப்புடன் விரைவில் அமைதி நிலை

அம்பாறை பிராந்திய கட்டளை தளபதி தெரிவிப்பு

0 637

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலை­மையைக் கருத்திற் கொண்டு பொலி­ஸாரும் படை­யி­னரும் முன்­னெ­டுத்து வரு­கின்ற தேடுதல் மற்றும் ஏனைய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்­லிம்கள் பூரண ஒத்­து­ழைப்பை வழங்கி வரு­கின்­றனர். அது­போ­லவே ஏனைய இன மக்­களும் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­கின்­றனர். இதன் கார­ண­மாக ரமழான் மாத ஆரம்­பத்­தி­லேயே நாட்டில் அமை­தி­யையும் இயல்பு வாழ்க்­கை­யையும் உறு­திப்­ப­டுத்த முடி­யு­மென அம்­பாறை பிராந்­திய 24ஆவது பிரிவின் கட்­டளை தள­ப­தி­யான மேஜர் ஜெனரல் மஹிந்த முத­லிகே தெரி­வித்தார்.

அக்­க­ரைப்­பற்­றி­லுள்ள இரா­ணு­வத்தின் 241 ஆவது படைப் பிரிவு அலு­வ­ல­கத்தில் அம்­பாறை மாவட்ட ஊட­க­வி­ய­லாளர் பேர­வையின் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து தற்­போ­தைய நிலை­வரம் குறித்து கருத்துத் தெரி­விக்­கும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

241ஆவது படைப்­பி­ரிவின் கட்­ட­ளை­யிடும் அதி­கா­ரி­யான கேர்ணல் விபுல சந்­தி­ர­சி­றியும் இச்­சந்­திப்பில் கலந்­து­கொண்டார்.

பிராந்­திய கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் மஹிந்த முத­லிகே இங்கு மேலும் கூறு­கையில், நமது நாட்டில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. அப்­பாவி மக்கள் உயி­ரி­ழந்தும் பாதிக்­கப்­பட்டும் உள்­ளனர். இந்த நாட்டில் யுத்தம் முடி­வ­டைந்த பிறகு கிட்­டத்­தட்ட 10 வரு­டங்­க­ளாக அதா­வது, கடந்த 20ஆம் திகதி வரைக்கும் மூவின மக்­க­ளி­டை­யேயும் இருந்த இன சௌஜன்­யமும் அமை­தியும் சீர்­கு­லைந்து போயுள்­ளன. முஸ்­லிம்கள், சிங்­க­ள­வர்கள், கிறிஸ்­தவர், தமிழர் என எல்லா மதங்­களைப் பின்­பற்­று­கின்ற மக்­களும் மன அமை­தியை இதனால் இழந்­தி­ருக்­கின்­றனர். எனவே பாது­காப்­பையும் அமை­தி­யையும் நிலை­நாட்ட வேண்­டிய கடப்­பாடு பொலி­ஸா­ருக்கும் முப்­ப­டை­யி­ன­ருக்கும் உள்­ளது.

இந்த சந்­தர்ப்­பத்தில் கிழக்கில் சாய்ந்­த­ம­ருதில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து படை­யினர் சோத­னை­க­ளையும் தேடு­தல்­க­ளையும் பர­வ­லாக மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

தேடுதல் மற்றும் சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கையின் போது பலர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் ஆயு­தங்கள், வெடி­பொ­ருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளதை யாவரும் அறிவோம். சாய்ந்­த­ம­ருதில் இங்கு இடம்­பெ­ற­வி­ருந்த பாரிய அனர்த்­தத்தை முறி­ய­டிக்க அப்­பி­ர­தேச மக்கள் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­னார்கள்.

அதே­போன்று நிந்­தவூர், சம்­மாந்­து­றையில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான வீடுகள் பற்றி அப்­பி­ர­தே­ச­வா­சி­களே பாது­காப்புத் தரப்­பிற்கு அறியத் தந்­தி­ருந்­தனர். அந்த வகையில், தேடுதல் மற்றும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் எமது முயற்­சி­க­ளுக்கும் முஸ்­லிம்கள் பூரண ஒத்­து­ழைப்பை படைத்­த­ரப்­பிற்கு வழங்கி வரு­கின்­றனர்.

இதே­வேளை, இந்த தேடுதல் மற்றும் சோதனை நட­வ­டிக்­கை­க­ளுக்கும் சந்­தே­க­ந­பர்கள் தொடர்பில் அறி­விப்­ப­திலும் இப்­ப­கு­தியில் வாழும் முஸ்லிம் மக்கள் முப்­ப­டை­யி­ன­ருக்கும் மிகவும் உதவி புரி­கின்­றனர். ஏனைய தமிழ், சிங்­கள மக்­களும் தம்­மா­லான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­கின்­றனர் என்­பதை குறிப்­பிட விரும்­பு­கின்றேன்.

தற்­போது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­டுள்­ள­வர்­களை கைது செய்­வ­தற்கும் பொலி­ஸாரும் இரா­ணுவம் உள்­ளிட்ட முப்­ப­டை­யி­னரும் தீவிர சோத­னைகள், சுற்­றி­வ­ளைப்­புக்­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இதற்கு முஸ்­லிம்கள் மற்றும் ஏனைய மக்கள் ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கின்ற நிலையில், நிலைமை ஓர­ள­வுக்கு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. நாட்­டி­னதும் இப்­பி­ராந்­தி­யத்­தி­னதும் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்­து­வதும் நிரந்­தர அமை­தியை நிலை­நி­றுத்­து­வதும் எமது கட­மை­யாகும். முஸ்­லிம்­களின் புனித ரமழான் நோன்பை ஆரம்­பிக்கத் தயா­ராகி வரு­கின்­றனர்.

கூடு­மா­ன­வரை நோன்பு ஆரம்­பிப்­ப­துடன் இப்­பி­ராந்­தி­யத்தில் அமை­தி­யையும் இயல்பு வாழ்க்­கையும் உறு­திப்­ப­டுத்­து­வதே எமது நோக்­க­மா­க­வுள்­ளது. மக்­க­ளுக்கு அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தாமல் சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கையர் என்ற வகையில் இதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள், நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு மக்கள் அறியத்தர வேண்டும். அதேபோல் சர்வ மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

இச்சந்திப்பில் 241ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேர்ணல் விபுல சந்திரசிறியும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.