முஸ்லிம்களை பாதுகாக்கத் தறினால் பயங்கரவாதிகளுக்கே வெற்றியாக அமையும்

0 649

தற்­போ­துள்ள நிலையில் நாம் சிந்­திக்க வேண்­டிய பல விட­யங்கள் எங்கள் முன்­னுள்­ளன. நாம் முஸ்லிம் மக்­களைப் பாது­காக்க வேண்டும். இங்­குள்ள முஸ்­லிம்­க­ளுக்கு ஏதும் பாதிப்­புகள் நிகழும் பட்­சத்தில், அது பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு பெரும் வெற்­றி­யாகவே அமையும் என்று தேசிய பாது­காப்புத் துறை தொடர்­பான நிபுணரும் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஆய்வு மையப் பணிப்­பா­ள­ரு­மான கலா­நிதி ஹரிந்த விதா­னகே தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் நாட்டில் கோர விளை­வு­களை ஏற்­ப­டுத்­திய தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலின் எதி­ரொ­லி­யாக எழுந்­துள்ள தேசிய பாது­காப்பு குறித்த அச்­சு­றுத்தல் தொடர்­பாக லங்­கா­தீப வார இதழ் ஊட­க­வி­ய­லாளர் பிரி­யந்த கொடிப்­பிலி வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார்.

கலா­நிதி ஹரிந்த மேலும் கூறி­ய­தா­வது, இலங்கை முஸ்­லிம்­களைப் பகைத்துக் கொண்டு இங்­குள்ள இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை ஒழித்துக் கட்ட முடி­யாது. இஸ்­லா­மிய மக்­க­ளூ­டாகத் தான் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை இங்­கி­ருந்து விரட்­டி­ய­டிக்­கலாம். அதே போன்­ற­தொரு தவறை நாம் 1983 ஆம் ஆண்டு செய்­துள்ளோம். நாம் அன்று தமிழ் பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு முன்னர், தமிழ் மக்­களைப் பகைத்துக் கொண்டாம். அதன் பயங்­கர விளைவை நாம் 30 வரு­டங்­க­ளாக அல்­லல்­பட்டு அனு­ப­வித்தோம். இஸ்­லா­மிய மக்­க­ளுடன் பகை­மையை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வோ­மானால் இதனை விடவும் பாரிய விளை­வு­களை எதிர்­கொள்­வது தவிர்க்க முடி­யாது போகும். இன்­றைய நிலையில், இஸ்­லா­மிய தேசத்­துடன் தொடர்­புள்ள வழி­த­வறிச் சென்­றுள்ள வாலி­பர்­களை நாம் இனம்­கண்டு கொள்­வது முக்­கி­ய­மாகும். எமது தேசிய பாது­காப்புக் குறித்து இன்று தீர்­மானம் எடுக்­கின்ற எமது அர­சியல் தலை­வர்கள் இது விட­ய­மாக சிந்­திக்க வேண்டும்.

தனிப்­பட்ட அர­சியல் விருப்பு வெறுப்­புக்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து எமது அர­சியல் தவைர்கள் நடந்து கொள்ளும் முறையால் தேசிய பாது­காப்­புக்­குத்தான் அச்­சு­றுத்­த­லாக அமை­கி­றது.

நாடொன்றில் ஆட்சி அமை­யப்­பெற்­ற­வுடன் அதன் தலை­யாய கட­மை­யாக அமை­வது தேசிய பாது­காப்­பாகும். பாது­காப்­புத்­துறை, இரா­ணுவம் என்­பன அரசின் பொறுப்பில் வரு­கின்­றன. நாட்டின் நிலப்­ப­ரப்பு, சுயா­தீனம் என்­ப­வற்­றுக்குப் புறம்­பாக அன்­றாட தேவை­யாக பாது­காப்பு இயந்­தி­ரமே பிர­தான பாக­மாக விளங்­கு­கி­றது. இதில் உள்­நாட்டு – வெளி­யு­லகப் பாது­காப்பு ஆகிய இரண்­டுமே உள்­ள­டங்­கு­கின்­றன. தேசிய பாது­காப்பின் அடிப்­படை தர்­மங்­க­ளாக இவை கணிக்­கப்­ப­டு­கின்­றன.

வெளி­யு­ல­கி­லி­ருந்து வரும் அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து நாட்டைப் பாது­காப்­பதும் உள்­நாட்டில் தலை­யெ­டுக்கும் அர­சியல் ஊடாட்­டங்கள் உள்­ளிட்ட நாட்­டிற்கு எதி­ராக கிளர்ந்து வரும் சகல அச்­சு­றுத்­தல்கள், சவால்­க­ளி­லி­ருந்தும் நாட்­டுக்குப் பாது­காப்பு வழங்­கு­வ­துமே தேசிய பாது­காப்பு எனப்­ப­டு­கி­றது. மக்கள் நாட்டின் ஒரு பகு­தி­யாகும். எனவே மக்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கு­வதும் அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். இவை அனைத்தும் சேர்ந்தே தேசிய பாது­காப்பு எனப்­ப­டு­கின்­றது.

தற்­போது உல­கி­லுள்ள நாடுகள் தேசிய பாது­காப்பை முன்­னிலைப் படுத்­திக்­கொண்டு அடக்­கு­முறைச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது. இவற்றில் மனித உரி­மைகள், சிவில் உரி­மைகள், மொழிச்­சு­தந்­திரம் போன்­ற­னவும் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் தேசிய பாது­காப்பு போது­மா­ன­தாக இல்லை என்ற முறைப்­பாடும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

உலக நாடு­களில் கடந்த பதி­னைந்து இரு­பது வரு­டங்­க­ளாக பாது­காப்புச் சூழல் பெரு­ம­ளவில் விஸ்­த­ரிப்புச் செய்­யப்­பட்­டுள்ள போதிலும் அதிலும் திருப்தி காணாத சிந்­த­னையே நிலவி வரு­வதைக் காண்­கிறோம். இலங்­கையில் பாது­காப்பு நிலைமை திருப்தி, அதி­ருப்தி என்று இரு வகை­க­ளிலும் விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

30 வருட கால யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து வெற்றி கொண்­ட­மையை திருப்­தி­யாகக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. அதே­வேளை மறு­பு­றத்தில் தேசிய பாது­காப்புக் குறித்தும் சவால் உள்­ளது. அதே போன்று நல்­லி­ணக்கம் தொடர்­பா­கவும் சவால் உள்­ளது. கடந்த காலங்­களில் இவ்­வி­ட­யங்கள் தொடர்­பா­கவே பேசப்­பட்டு வந்­தன. இந்­நி­லை­யி­லேயே அண்­மையில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டு தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுடன் இவ்­வி­டயம் மேலும் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளது. தேசிய பாது­காப்பே அர­சாங்கம் ஒன்றின் பிர­தான கட­மை­யாகும். இத­னூ­டா­க­வேதான் அர­சாங்­கத்தின் பலம் நோக்­கப்­ப­டு­கி­றது. எமது நாட்டின் பாது­காப்பு ஒரு­வ­கையில் அர­சியல் ரீதி­யாக பிளவு பட்ட கதை­யா­கவே உள்­ளது. இதே போன்றே எமது நாட்டின் பெரும்­பா­லான விட­யங்­களின் அடிப்­படை அர­சியல் மய­மா­கவே உள்­ளன. அத்­துடன் அவற்றில் தனி­நபர் தலை­யீ­டு­களும் புகுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னா­லேயே பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

கேள்வி: தேசிய பாது­காப்பு குறைந்­ததன் பிர­தி­ப­லனை இப்­போது நாம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றோ­மல்­லவா?

பதில்: கடந்த சில தினங்­க­ளுக்கு முன் இடம் பெற்ற நிகழ்வை நாம் இரு வகை­களில் நோக்­கலாம். இது யார் செய்த தவறு என்­பதைத் தேடிப்­பார்க்க வேண்டும். இதனை விட இந்த அசம்­பா­விதம் ஊடாக எமது தேசிய பாது­காப்பில் உள்ள குறை­பா­டுகள், பல­வீ­னங்­களைக் கண்­ட­றிந்து அவற்றை சீர்­ப­டுத்திக் கொள்­வது எப்­படி என்­பதில் கவனம் செலுத்த வேண்டும். தேசிய பாது­காப்­புக்குப் பொறுப்புக் கூற­வேண்­டி­யது அர­சாங்­க­மாகும். ஜனா­தி­பதி, பிர­தமர் தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை உள்­ளிட்டோர் மீதுள்ள பொறுப்­பாகும். ஆனால் அர­சியல் யாப்பில் தேசிய பாது­காப்பு தொடர்­பாக சகல அதி­கா­ரங்­களும் ஜனா­தி­ப­தியின் பொறுப்­பி­லேயே உள்­ளன.

எமது நாட்டின் தேசிய பாது­காப்­புக்­குள்ள அச்­சு­றுத்­தல்கள் எவை என்­பதைத் தேடிப்­பார்த்தால் நாம் பல புறத்­திலும் சிக்­க­லுக்­குள்­ளேதான் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறோம். எமது நாட்டைச் சூழ­வுள்ள புதிய பூகோள அர­சியல் முறை­மை­யூ­டா­க­வேதான் எமது தேசிய பாது­காப்பை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. பல்­வேறு தரப்பு சார்ந்­தோரும் உள்­ளனர். பலம்­வாய்ந்த நாடு­களும் உள்­ளன. அவர்கள் விரும்­பு­கிற பூகோள அர­சி­யலை முன்­னோக்­கியே எமது வல­யத்தைச் சூழ­வுள்ள பிராந்­தி­யத்தில் பாது­காப்பு மூலோ­பாயச் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அமெ­ரிக்கா, இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா ஆகிய எந்த நாடா­க­வி­ருந்­தாலும் சரி, அவர்­களின் தேவையைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய முறை­மையே பாது­காப்புப் போர்­வை­யில் எம்­மீது திணிக்கின்றன. எங்­களை விட அவர்­க­ளுக்கே அத்­தேவை பிர­தா­ன­மா­க­வுள்­ளது. எனவே இந்து சமுத்­திரப் பாது­காப்புச் சவால் எமக்கும் சவா­லா­கவே உள்­ளது. உலகில் தலை­தூக்­கிய பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் எமக்கும் சவா­லா­கவே அமைந்­துள்­ளது. கடந்த தசாப்­தங்­களில் அது புது முகம் காட்டி செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. தீவி­ர­வாதம் முஸ்லிம் நாடு­களில் அமைப்­புக்கள் ரீதி­யாக தலை­தூக்­கின. 2001 செப்­டம்பர் 11 இரட்­டைக்­கோ­புர தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர் அமெ­ரிக்­காவின் தலை­மை­யி­லான நேச­நா­டுகள் ஒன்­றி­ணைந்து அல்­கை­தா­வுக்­கெ­தி­ராக நட­வ­டிக்­கை­களில் இறங்­கின. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தலை தூக்­கி­யது. இவ்­வ­மைப்பின் செயற்­பாடு அதி­ப­யங்­க­ர­மா­னது. மனி­தா­பி­மா­ன­மற்­றது. பாரிய இலக்­கொன்றை முன்­னெ­டுத்து இவர்­க­ளது நகர்வு அமைந்துள்ளது. அடிப்­ப­டை­வாத சிந்­த­னை­யுள்ள இஸ்­லா­மிய வாலி­பர்கள் இவர்­க­ளுடன் இணைந்­தனர்.
இஸ்­லா­மிய தேசம் என்­பதே இவர்­களின் எண்­ணக்­க­ரு­வாக இருந்­தது. உலகின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் இஸ்­லா­மிய வாலி­பர்கள் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குச் சென்று இவ்­வ­மைப்பில் இணைந்து போரில் ஈடு­பட்­டனர். உலகில் எந்த இடங்­க­ளிலும் வன்­மு­றை­களில் ஈடு­படும் வகையில் இவர்கள் தூண்­டப்­பட்­டனர். தமது கொள்­கையை ஏற்­காதோர், கொள்­கைக்கு முரண்­ப­டுவோர் யாராக இருந்­தாலும் அவர்­களைக் கொல்­ல­வேண்டும் என்று போத­னை­யூட்டுகின்றனர். அப்­போ­துதான் சுவர்க்­கத்தை அடை­யலாம் என்றும் ஆசை­யூட்­டுகின்றனர். இத்­த­கைய அமைப்­புக்­களில் இணைந்த பின்னர் அரசு மற்றும் அரச பாது­காப்புக் குறித்து எத்­த­கைய நிலைப்­பாடு இருந்­தாலும் அவற்றைப் பொருட்­ப­டுத்­த­மாட்­டார்கள். பாது­காப்பு முறைமை, எந்த நிறு­வ­னமோ, இரா­ணுவ கெடு­பி­டி­களோ இருந்­தாலும் கூட அவை­யெல்லாம் இவர்­க­ளுக்கு வெறும் தூசா­க­வேதான் தென்­படும்.

இத்­த­கைய தீவி­ர­வாத அச்­சு­றுத்தல் ஒன்று இலங்­கை­யிலும் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் தலை­தூக்­கி­யது. இஸ்­லா­மிய தேசத்­து­ட­னான தொடர்­புக்­கான வித்து இலங்­கை­யிலும் விதைக்­கப்­பட்­டது. இதுதான் நாம் தவ­றி­விட்ட இட­மாகும். இவர்­க­ளது அச்­சு­றுத்­தல்கள் குறித்து எமது புல­னாய்­வுத்­து­றை­யினர் முன்­னெச்­ச­ரிக்கை விடுத்தும் அது அசட்டை செய்­யப்­பட்­டுள்­ளது. அதன் பிர­தி­ப­ல­னையே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இத்தகைய தீவிரவாத அச்சுறுத்தலை அடக்குவதற்கு அமெரிக்கா போன்ற பலம்வாய்ந்த நாடுகளாலும் இயலாமல் போயுள்ளது.

இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் இலங்கையின் தேசிய பாதுகாப்பு முறைமையிலும் தளர்வை ஏற்படுத்தியமையும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. சோதனைச் சாவடி– செக்பொயின்ட்களும் குறைக்கப்பட்டமையை இங்கு குறிப்பிடவேண்டும். அமெரிக்கா குறிப்பிடத்தக்களவு சுதந்திர நாடாகவிருந்த போதிலும் அங்குள்ள பல பாதுகாப்புத் தடைகளைத் தாண்டியேதான் அந்நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும். ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிலும் இதே பாதுகாப்பு முறைமையேதான் அமுலில் உள்ளது.

எமது விமான நிலையங்கள் ஊடாக வருவோர், வெளியேறுவோர் யார் யார் என்றெல்லாம் மொனிட்டர் பண்ணும் முறையொன்றும் இங்கிருப்பதாகத் தெரியவில்லை. எமது பாதுகாப்புத்துறை முன்னணியில் உள்ளது. அவர்கள் நல்ல திறமைசாலிகள். ஆனால் அவர்களை வழிநடத்தக்கூடிய சிறந்த அரசியல் தலைமையொன்றே இன்றைய தேவையாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.