ஜூன் 10 இல் முஸ்லிம் பாட­சா­லைகள் திறப்பு

0 1,318

நாட்டில் இடம்­பெற்ற அசா­தா­ரண சூழ்­நி­லைகள் கார­ண­மாக கடந்த 22 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்­வரும் 6 ஆம் திகதி மீண்டும் திறக்­கப்படவிருக்கின்ற நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் மாத்திரம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென கல்வி அமைச்சின் தக­வ­லொன்று தெரி­விக்­கின்­றது.

தமிழ், சிங்கள பாட­சா­லைகள் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதலாம் தவணை விடு­மு­றைக்­காக மூடப்­பட்­டது. மீண்டும்  22 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­தது.

அத்­துடன் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு ஏப்ரல் 11 ஆம் திகதி விடு­முறை வழங்­கப்­பட்டு 2 ஆம் தவ­ணைக்­காக ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து இரண்டு தட­வைகள் பாட­சா­லை­களை மீண்டும் ஆரம்­பிப்­ப­தற்­கான திகதி ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் சிங்­கள,- தமிழ் பாட­சா­லைகள் எதிர்­வரும் 6 ஆம் திகதி மீள ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு நோன்பு விடு­முறை 6 ஆம் திகதி முதல் வழங்­கப்­ப­டு­வ­தனால் எதிர்­வரும் ஜூன் மாதம் 10 ஆம் திக­தி­யன்று மீள ஆரம்­பிக்­கப்­ப­டு­மென கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் இஸட். தாஜுதீன் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.