9 தற்­கொலை குண்­டு­தா­ரி­களில் பெண் ஒரு­­வரும் உள்­ள­டக்கம்

0 837

நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்ட தாக்­கு­தல்­களில் 39 வெளி­நாட்டு பிர­ஜைகள் உள்­ளிட்ட 359 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். புல­னாய்வுப் பிரி­வி­னரும் பாது­காப்­புத்­து­றை­யி­னரும் முன்­னெ­டுத்து வரும் விசா­ர­ணை­களில் முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்­றது. இரண்டு பிர­தான இஸ்­லா­மிய குழுக்கள் இந்த தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ளன. எனினும் பாது­காப்பு கருதி அவற்றை பகி­ரங்­கப்­ப­டுத்த முடி­யா­துள்­ளது என தெரி­வித்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்­தன ஒன்­பது தற்­கொலை குண்­டு­தா­ரி­களில் பெண்­ணொ­ரு­வரும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் குறிப்­பிட்டார். சர்­வ­தேச ஊட­கங்­க­ளுடன் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்­து ­கொண்டு உரை­யாற்றும் போதே இரா­ஜாங்க அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில், ஷங்­ரில்லா ஹோட்­டலில் குண்டை வெடிக்கச் செய்த இஸ்­லா­மிய தற்­கொலை குண்­டு­தா­ரியே ஏனைய இடங்­க­ளிலும் தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட குழுக்­களின் தலை­வ­ராவார். அத்­தோடு இவர் லண்­டனில் இள­மானிப் பட்­டத்­தையும், அவுஸ்­தி­ரே­லி­யாவில் முது­மானிப் பட்­டத்­தி­னையும் பெற்­றவர் என்­ப­தோடு வசதி படைத்­த­வ­ராவார். இவர் தொடர்­பான ஏனைய தக­வல்­களை பாது­காப்பு கருதி வெளி­யிட முடி­யா­துள்­ளது. இது தொடர்­பான துரித விசா­ர­ணைகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறித்த தாக்­கு­தல்­தா­ரி­க­ளுடன் வேறு ஏதேனும் குழுக்கள் அல்­லது அமைப்­புக்கள் தொடர்­பு­பட்­டுள்­ள­னவா என்­பது குறித்தும் , சர்­வ­தேச தொடர்­புகள் ஏதேனும் காணப்­ப­டு­கின்­ற­னவா என்­பது குறித்தும் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன. அத்­தோடு இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு வெளி­நாட்டு நிதி வழங்­கப்­பட்­டுள்­ளதா என்­பது தொடர்பில் சந்­தேகம் நில­வு­கின்­றது. இது தொடர்­பான விசா­ர­ணகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான சர்­வ­தேச குழுக்­களின் தலை­யீ­டுகள் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற போதும் இது­வ­ரையில் வெளி­நாட்டுப் பிர­ஜைகள் எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

நியு­சி­லாந்து பள்­ளி­வாசல் தாக்­கு­த­லொன்றில் கொல்­லப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­காக பழி­வாங்­கு­வ­தற்­கா­கவே இந்த தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் இலங்­கையின் புல­னாய்­வுப்­பி­ரி­வினர் வழங்­கிய தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இந்த விடயம் உண்­மை­யாக இருக்­கலாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. அவுஸ்­தி­ரே­லியா, பிரித்­தா­னியா, ஐக்­கிய அரபு இராச்­சியம் மற்றும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களின் உள­வுத்­துறை இது தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்கு இலங்­கைக்கு உத­வு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளன. இந்­தி­யாவும் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாறு தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு இலங்­கை­யி­லி­ருந்து யாரேனும் சிரி­யா­வுக்குச் சென்று பயிற்சி பெற்­றுள்­ளார்­களா? என்­பது தொடர்­பிலும், தாக்­கு­தல்­தா­ரிகள் இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை கொண்­டுள்­ளார்­களா? என்­பது தொடர்­பிலும், இதில் மாலைத்­தீவு பங்­க­ளாதேஷ் உள்­ளிட்ட நாடுகள் தொடர்­பு­பட்­டுள்­ளதா? என்­பது தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் எதிர்­வரும் இரு தினங்­களில் முழு­மை­யான தக­வல்­களை வழங்க எதிர்பார்க்கின்றோம் என்றார். இதேவேளை இச் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து வெளியிடுகையில், இது வரையில் 9 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பெண்ணொருவரது சடலம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவங்களுடன் தொடர்புடைய காணொலிகள் உள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளது என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.