பெண்கள் முகத்தை முற்­றாக மூடி வெளியில் செல்­வதை தவிர்க்­கவும்

மாவனெல்லை பள்ளிவாசல்கள் சம்மேளனம் வலியுறுத்து

0 724

அமீர் ஹுஸைன்,
எம்.எல்.எஸ்.முஹம்மத்

மாவ­னெல்லை பிர­தேச பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ளனம் முஸ்­லிம்­க­ளுக்கு விடுத்­துள்ள ஒரு அறி­வித்­தலில் பெண்கள் வெளியில் செல்லும் போது முற்­றாக முகத்தை மறைப்­பதை (புர்கா) தவிர்த்துக் கொள்­ளு­மாறு துண்டுப் பிரசும் மூலம் கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

முஸ்லிம் பெண்கள் பொது இடங்­களில் நட­மாடும் போது கறுப்பு நிற ஆடை­யுடன் முற்­றாக முகத்தை மறைத்­த­வர்­க­ளாக அடை­யாளம் தெரி­யாத நிலையில் நட­மா­டு­வதால் இப்­பி­ர­தே­சத்தில் வாழும் சிங்­கள மக்கள் அச்­சத்­து­டனும் வீணான சந்­தே­கத்­து­டனும் பார்க்கும் நிலை­மைகள் உரு­வாகி வரு­வதால் இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­கவும் அந்த அறி­வித்­தலில் தெரி­விக்­கப்பட் டிருக்­கின்­றது.

அதே நேரம் நாட்டின் பல இடங்­களில் நடை­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தலைத் தொடர்ந்து நாட்டில் ஒரு­வி­த­மான அசா­தா­ரண சூழ்­நிலை ஏற்­பட்டு வரு­வதை உணர முடி­வதால் அத்­த­கைய நிலை­மை­க­ளுக்கு பிர­தான காரணம் முஸ்லிம் சமூ­கத்தை ஏனைய சமூ­கத்­த­வர்கள் சந்­தேகக் கண்­கொண்டு அச்­சத்­துடன் நோக்கும் நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தாகும் என்று நேற்று முன்­தினம் காலையில் மாவனல்லை பிர­தேச செய­லாளர் பிரி­யங்­கனீ பெதங்­கொ­டவின் தலை­மையில் நடை­பெற்ற உயர்­மட்ட கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் கேகாலை மாவட்ட அர­சாங்க அதிபர் சந்­தி­ர­சிரி பண்­டார ஆகி­யோரின் தலை­மையில் நடை­பெற்ற உயர்­மட்ட கலந்­து­ரை­யாடல் என்­ப­வற்றில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது மாவ­னல்லை முஸ்லிம் சமூ­கத்தின் முக்­கி­ய­மான தலை­வர்கள், பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபை பிர­தி­நி­திகள் வர்த்­தக சமூ­கத்­தினர் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

அதனால் தற்­போ­தைய நிலையில் மாறி வரு­கின்ற சூழலில் ஏனைய சமூ­கத்­த­வர்கள் மத்­தியில் ஏற்­பட்டு வரு­கின்ற முஸ்­லிம்கள் தொடர்­பான வன்­முறை உணர்வை கட்­டுப்­ப­டுத்து வதற்­கா­கவும் பெண்­களின் பாது­காப்பு கரு­தியும் முகம் மூடு­வதை தவிர்க்­கு­மாறு கோரு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்டு அதற்­கான அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அத்­துடன் நக­ரத்­திலும் எல்லா ஊர்­க­ளிலும் குறிப்­பாக முஸ்லிம் இளை­ஞர்கள் ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளோடு செயலாற்­று­கின்­ற­போது சகிப்­புத்­தன்மை, சக­வாழ்வை வெளிப்­ப­டுத்தும் வகையில் உய­ரிய பண்­பு­களை வெளிப்­ப­டுத்தும் வகையில் நடந்­து­கொள்ள வேண்டும் என்ற விட­யமும் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

மாவ­னல்லை மஸ்ஜித் சம்­மே­ளனம் வெளி­யிட்­டுள்ள துண்டுப் பிர­சு­ரத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

1. தனி­ந­பர்கள் இரு­வ­ருக்­கி­டையில் ஏற்­படும் பிரச்­சி­னை­களை சமூகப் பிரச்­சி­னை­யாக மாற்­றாது உட­ன­டி­யாக அது­பற்றி அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யத்­திற்கு தெரி­யப்­ப­டுத்தி குறித்த பிரச்­சி­னைக்கு சட்ட ரீதி­யாகத் தீர்­வு­காண முயற்­சிக்க வேண்டும்.

2. ஊரிற்கு புதி­தாக வரு­ப­வர்கள் தொடர்­பாக மஸ்ஜித் நிர்­வாகம் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். மேல­திக தேவைகள் ஏற்­படின் அவர்கள் பற்றி அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யத்­திற்கு அறி­விக்க வேண்டும்.

3. ஊரில் வாட­கைக்கு வீடு­களை வழங்­கு­ப­வர்கள் அது தொடர்­பாக மஸ்ஜித் நிர்­வாகம் மற்றும் கிராம அதி­கா­ரி­க­ளுக்கு எழுத்து மூலம் அறி­விப்­ப­துடன் பொலிஸ் நிலை­யத்­திற்கு சென்று உரிய பதி­வு­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும்.

4 .பெண்கள் உரிய பாது­கா­வ­லர்கள் இன்றி வெளியே செல்­வதை தவிர்த்துக் கொள்­வ­துடன் முக­மூடி பர்தா அணியும் பெண்கள் பாது­காப்புக் கார­ணங்­களை முன்­னிட்டு தேவை­யான போது தமது ஆள­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்க வேண்டும்.

5. வெளியே செல்­லும்­போது அனை­வரும் தமது ஆள­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேசிய அடை­யாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

6. நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளதால் இரவு நேரங்களில் வீணாக வெளியே சுற்றித் திரிவதையும் மற்றும் குழுவாகக் கூடிநின்று கதைப்பதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

7. அறிமுகமற்ற நபர்கள் மற்றும் வாகனங்கள் ஊரினுள் வருகின்றபோது அது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.