இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைப்­பதே தாக்­கு­தல்­தா­ரி­களின் நோக்கம்

தேசிய ஷூறா சபை

0 570

நாட்டில் மிலேச்­சத்­த­ன­மாக குண்­டுத்­தாக்­கு­தலை முன்­னெ­டுத்­த­வர்கள் எமது நாட்டின் சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தைச் சீர்­கு­லைத்தல், பொரு­ளா­தார வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தல் போன்ற நோக்­கங்­களைக் கொண்டவர்கள் நாட்டின் விரோ­தி­க­ளா­கவே இருக்க முடியும். இவ்­வே­ளையில் நாட்டில் வாழும் மக்­க­ள­னை­வரும் ஒன்­றி­ணைந்து ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்­டி­யது அவ­சியம் என்­ப­துடன், நாட்­டுக்கு எதி­ரான எந்­த­வொரு செயற்­பாட்­டையும் எதிர்த்துப் போராட வேண்­டிய பொறுப்பு இந்­நாட்டு மக்­க­ளுக்கு உள்­ளது என்று தேசிய ஷூறா சபை தெரி­வித்­துள்­ளது.

தலை­நகர் கொழும்பு உட்­பட நாட்டில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்­க­ளுக்கு கடும் கண்­டனம் தெரி­வித்து தேசிய ஷூறா சபை அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.

அதில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,
உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவா­ல­யங்­க­ளையும், நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட தொடர் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்­களை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

இனங்­க­ளுக்கு இடையில் வன்­மு­றையைத் தூண்­டுதல் மற்றும் தேசிய பொரு­ளா­தா­ரத்தில் சரிவை ஏற்­ப­டுத்தல் ஆகிய நோக்­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தாக்­கு­தல்­களில் தமது உற­வு­களைப் பலி கொடுத்­த­வர்­க­ளுக்கு எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­வித்துக் கொள்­வ­துடன், தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்­த­வர்கள் விரை­வாக அதி­லி­ருந்து மீள்­வ­தற்குப் பிரார்த்­திக்­கின்றோம்.

இந்­நி­லையில் தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்கள் யாராக இருந்­தாலும் சட்­டத்தின் பிர­காரம் அவர்­க­ளுக்கு எதி­ராக விரைந்து நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று உரிய அதி­கா­ரி­களைக் கேட்டுக் கொள்­கின்றோம். அத்­தோடு இந்தச் சவாலை சீராகக் கையாள்­வ­தற்கும், நாட்டில் மீண்டும் சமா­தானம் மற்றும் ஸ்திர­நி­லையை நிலை­நாட்­டு­வ­தற்கும் முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தற்கும் தயாராக இருக்கின்றோம். மேலும் இவ்வேளையில் நாட்டில் வாழும் மக்களனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியம் என்பதுடன், நாட்டுக்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டையும் எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு இந்நாட்டு மக்களுக்கு உள்ளது என்று அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.