ஷங்கிரிலா தாக்குதலில் உயிரிழந்த வர்த்தகரின் ஜனாஸா நல்லடக்கம்

மஹிந்த கோத்தாபாய ராஜபக்ஷ பங்கேற்பு

0 440

கொழும்­பி­லுள்ள ஷங்­கி­ரிலா ஐந்து நட்­சத்­திர ஹோட்­டலில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தலில் சிக்கி உயி­ரி­ழந்த வர்த்­த­க­ரான ரிஷாட் ஹமீதின் ஜனாஸா நல்­ல­டக்கம் நேற்றுக் காலை ஜாவத்தை ஜும்ஆப் பள்­ளி­வாசல் மைய­வா­டியில் இடம்­பெற்­றது. உடத்­த­ல­வின்­னையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் பிர­பல வர்த்­த­க­ராவார். இவ­ரது மனை­வி­யான ஜெஹான் ஹமீட், ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன அமைப்பின் முக்­கிய செயற்­பாட்­டா­ள­ராவார்.

ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ச உட்­பட பிர­மு­கர்கள் பலரும் கலந்து கொண்­டனர்.
இதே­வேளை முன்னாள் ஜனா­தி­ப­தியும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக்ச ஜனா­ஸாவை நேரில் சென்று பார்­வை­யிட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­கி­டையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்­டலில் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த வவு­னியா, பட்­டா­னிச்சூர் பிர­தே­சத்தைச் சேர்ந்த நிசாட் முகமட் நளீர் எனும் இளை­ஞரின் ஜனாஸா நேற்று வவு­னி­யாவில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. கொழும்பில் ஹோட்டல் முகா­மைத்­துவ கற்கை நெறியை தொடர்ந்து வரும் இவர், சினமன் கிரான்ட் ஹோட்­டலில் தொழிற்­ப­யிற்­சியைப் பெற்று வந்த நிலை­யி­லேயே இத் தாக்­கு­தலில் சிக்கி உயி­ரி­ழந்­துள்ளார். நேற்றுக் காலை பட்­டா­னிச்­சூரில் இடம்­பெற்ற ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.