பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள்

குனூத் ஓதுமாறு உலமா சபை வேண்டுகோள்

0 416

எம்.ஆர்.எம்.வஸீம்

தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களை வழங்க முன்­வ­ரு­மாறும், வைத்­திய சாலை­களில் இரத்தப் பற்­றாக்­குறை நில­வு­வதால் தேவை­யான இடங்­க­ளுக்கு இரத்­தத்தை தான­மாக வழங்க முன்­வ­ரு­மாறும் ஜம்­இய்யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

அத்­துடன், நாட்டில் அமை­தியும் சமா­தா­னமும் ஏற்­பட குனூத் அந்­நா­ஸிலா ஓதுவோம் என்றும் உலமா சபை வேண்­டி­யுள்­ளது.
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று நாட்டில் இடம் பெற்ற மனி­தா­பி­மா­ன­மற்ற தாக்­கு­தல்­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது
நாட்டில் பல இடங்­க­ளிலும் அப்­பாவி மக்கள் மீது நடாத்­தப்­பட்ட மனி­தா­பி­மா­ன­மற்ற தாக்­கு­தல்­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது. கிறிஸ்­தவ சகோ­த­ரர்­களின் முக்­கிய தினங்­களில் ஒன்­றான இன்று அவர்­க­ளது மதஸ்­த­லங்­களை இலக்கு வைத்து தாக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது எந்­த­வி­தத்­திலும் ஏற்க முடி­யாத ஒன்­றாகும்.

இதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்கும் எமது ஆழ்ந்த அனு­தா­பத்தை தெரி­விப்­ப­துடன் இந்த தாக்­கு­தல்கள் தொடர்­பான உரிய நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்டு பல்­லின மக்கள் வாழும் இந்­நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­று­மை­யையும், புரிந்­து­ணர்­வையும் பாது­காக்க முன்­வர வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வலி­யு­றுத்திக் கேட்டுக் கொள்­கின்­றது.

இத்­த­ரு­ணத்தில் நாட்டு மக்கள் அனை­வரும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களை வழங்க முன்­வ­ரு­மாறும், குறிப்­பாக வைத்­திய சாலை­களில் இரத்தப் பற்­றாக்­குறை நில­வு­வதால் தேவை­யான இடங்­க­ளுக்கு இரத்­தத்தை தான­மாக வழங்க முன்­வ­ரு­மாறும் அனை­வ­ரையும் ஜம்­இய்யா கேட்டுக் கொள்­கின்­றது.

அனைத்து மத, சிவில் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து தத்தம் பிர­தேச மக்­களை சரி­யாக வழி­ந­டாத்­து­வ­தி­னூ­டாக சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான இன வாதப் பிரச்­சி­னை­களில் இருந்து எமது நாட்டு மக்­களை பாது­காக்க முன்­வ­ரு­மாறும், சமூக ஊட­கங்­களில் வலம் வரு­கின்ற வதந்­தி­களை பரப்­பு­வ­தி­லி­ருந்து சக­லரும் தவிர்ந்து நடக்­கு­மாறும் அன்­பாக வேண்டிக் கொள்­கின்­றது.
அதே நேரம் அர­சாங்­கமும் பாது­காப்­புத்­து­றையும் நாட்டில் உள்ள அனைத்து மதஸ்­த­லங்­க­ளுக்கும் உரிய பாது­காப்­பினை வழங்­கு­மாறும் வேண்டிக் கொள்­கின்­றது.

அத்­துடன், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பத்வாக் குழு செய­லாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,
எமது நாட்டில் நடை­பெற்ற மிரு­கத்­த­ன­மான தாக்­கு­தலை அடுத்து, ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலை நீங்கி, சுமூக நிலை ஏற்­பட்டு, சமா­த­னமும் சாந்­தியும் இன ஜக்­கி­யமும் ஏற்­பட முஸ்­லிம்கள் அனை­வரும் அல்­லாஹ்வின் பக்கம் கையேந்­து­மாறும், தமது பாவங்கள் மன்­னிக்­கப்­பட தௌபா, இஸ்­திக்பார் போன்­ற­வற்றில் ஈடு­ப­டு­மாறும், அத்­துடன், தொழு­கை­களில் குனூத் அந்­நா­ஸிலா ஒது­மாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டிக்­கொள்­கி­றது.

மேலும், இத்­தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆறுதல் கூறு­மாறும், காய­ம­டைந்­த­வர்கள் மிக விரைவில் குண­ம­டைய பிரார்த்­தனை செய்­யு­மாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டிக்­கொள்­கி­றது.

அத்­தோடு, மஸ்­ஜித்­களில் இமாம்கள் குனூத் அந்­நா­ஸி­லாவை ஓதும்­பொ­ழுது தேவை­யான துஆக்­களை மாத்­திரம் ஓதி சுருக்­க­மாக அமைத்­துக்­கொள்­ளு­மாறும் ஆலோ­சனை கூறு­கி­றது என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­த­விர, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­சபை மற்றும் முஸ்லிம் அமைப்­புக்கள் இணைந்து நேற்று மேல்­மா­காண ஆளுநர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்­தது.

அங்கு, அப்­பாவி மக்­களை கொலை செய்யும் இவ்­வா­றான மிளேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை இஸ்லாம் ஒரு­போதும் அனு­ம­திப்­ப­தில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

அத்­துடன் அப்­பாவி மக்கள் மீது இவ்­வா­றான மிளேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை மேற்­கொள்­ளவோ தற்­கொலை தாக்­கு­தல்கள் மற்றும் தீவி­ர­வாத செயல்­களை இஸ்லாம் ஒரு­போதும் அனு­ம­தித்­த­தில்லை. அது பெரும் பாவ­மான செய­லா­கவே கரு­து­கின்­றது. சகல மனி­தர்­க­ளுக்கும் கருணை காட்டுமாறும் நீதியுடன் செயற்படுமாறே போதிக்கின்றது. இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சகலவகையிலுமான வன்செயல்களையும் தீவிரவாதத்தையும் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் இதுபோன்ற தீவிரவாத செயல்களில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அத்துடன் இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அரச அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.