இஸ்ரேலிய சிறைகளில் பலஸ்தீன கைதிகள் உண்ணாவிரத போராட்டம் 

0 542

இஸ்ரேல் சிறைச்­சா­லையில் நிலவும் மோச­மான நிலைக்கு எதிர்ப்புத்  தெரி­வித்து இஸ்­ரே­லிய சிறை­க­ளி­லுள்ள பலஸ்­தீனக் கைதிகள் கால வரை­ய­றை­யற்ற உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஒன்­றினை கூட்­டாக ஆரம்­பித்­துள்­ளனர்.

சுமார் 30 கைதிகள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இப் போராட்­டத்தை ஆரம்­பித்­தனர், எதிர்­வரும் வாரங்­களில் மேலும் 1,500 பேர் இப் போராட்­டத்தில் இணைந்து கொள்­ள­வுள்­ளனர் என அர­சியல் கைதிகள் உள்­ளிட்ட கைதி­களால் உள்ளூர் ஊட­கங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இஸ்­ரேலின் தற்­போ­தைய பிர­த­ம­ரான வல­து­சாரி லிகுட் கட்சித் தலைவர் பெஞ்­சமின் நெட்­டன்­யாகு ஐந்­தா­வது தட­வை­யாக பிர­தமர் பத­விக்குப் போட்­டி­யிடும் இஸ்­ரே­லியப் பொதுத் தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் இப் போராட்டம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.

பிர­தா­ன­மாக தெற்கு நெகெவ் பிராந்­தி­யத்தில் அமைந்­துள்ள மோச­மான பெயரைச் சம்­பா­தித்­துள்ள இஸ்­ரே­லிய இரா­ணுவச் சிறையில் கைய­டக்கத் தொலை­பேசி அழைப்­புக்கள் வரு­வதைத் தடுக்கும் உப­க­ரணம் பொருத்­தப்­பட்­ட­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து கைதிகள் உணவு மற்றும் பானம் அனைத்­தையும் மறுத்து வரு­கின்­றனர்.

இந்த உப­க­ரணம் கைதி­களின் உடல் நலத்­திற்கு கேடு விளை­விக்கும் ஒன்­றாகும். அது புற்­று­நோ­யையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது என கைதிகள் தமது அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளனர்.

பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை நிறுத்­து­வ­தற்கு அவை அவ­சி­ய­மாகும் என இஸ்­ரே­லியப் பொதுப் பாது­காப்பு அமைச்சர் கிலாட் ஏர்டன் தெரி­வித்­துள்ளார். இந்தக் குற்­றச்­சாட்­டினை பலஸ்­தீனக் கைதிகள் மறுத்­துள்­ளனர்.

கைய­டக்கத் தொலை­பேசி சேவை இல்­லாமல் தமது குடும்­பத்­தி­ன­ருடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்த முடி­யா­துள்­ளது. பெரும்­பா­லான கைதி­களின் உற­வி­னர்­களால் அவர்­களை வந்து பார்க்க  முடி­யாத நிலையும் காணப்­ப­டு­கின்­றது.

உணவுத் தவிர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­படும் கைதிகள் பாது­காப்புக் கார­ணங்கள் என்ற போர்­வையில் தனிமைச் சிறையில் அடைக்­கப்­படல், ஒரு சிறைக் கூடத்­தி­லி­ருந்து பிறி­தொரு சிறைக் கூடத்­திற்கு மாற்­றப்­ப­டுதல் உள்­ளிட்ட தண்­ட­னை­க­ளுக்கும் உள்­ளா­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­கின்­றது.

குற்றம் சுமத்­தப்­ப­டாது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 200 பேர் உள்ளடங்கலாக 5,450 பலஸ்தீனக் கைதிகள் இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜெரூசலத்தைத் தளமாகக் கொண்ட பலஸ்தீன கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.