மஹிந்த ராஜ­பக்ஷ தரப்­பி­னரே மைத்­தி­ரியின் முதுகில் குத்­தினர்

ஈடு­பா­டின்­றியே பேச்­சுக்கு செல்­கிறோம் என்­கிறார் தயா­சிறி

0 513

வெறும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக்கி ஆட்­சியை அமைக்க ஜனா­தி­பதி நட­வ­டிக்­கை­யெ­டுத்து அதில் நெருக்­க­டியை சந்­தித்த நேரத்தில் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக இல்­லாது மஹிந்த தப்­பினர் ஜனா­தி­ப­தியின் முதுகில் குத்­தி­னார்கள். இந்த மனக் கசப்­பு­க­ளு­டன்தான் மீண்டும் பேச்­சு­வார்த்­தையில் அமர்­கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர எம்.பி தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியை காப்­பாற்­றவே வரவு செலவு திட்­டத்தை நாம் எதிர்க்­க­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

வரவு செலவு திட்­டத்தை தோற்­க­டிக்க நோக்கும் இருக்­க­வில்லை. அது­மட்­டு­மல்ல, இந்த வரவு செலவு திட்­டத்தை தோற்­க­டிக்க மஹிந்த தரப்­பி­ன­ருக்கும் எந்த நோக்­கமும் இருக்­க­வில்லை. அவர்கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரவு செலவு திட்­டத்தை தோற்­க­டிக்க எந்த முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியால் அர­சாங்கம் பாது­காக்­கப்­ப­டு­வ­தாக கூறு­வது முட்டாள் தன­மான விமர்­ச­ன­மாகும்.

வாக்­க­ளிக்­கா­ததும் அர­சாங்­கத்தை எதிர்க்­கவே வாக்­கெ­டுப்பு தினத்­தன்று நாம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழு­வாக கூடி பொது இணக்­கப்­பாடு ஒன்­றுக்கு அமை­யவே வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளாது நிரா­க­ரித்தோம். இது அர­சாங்­கத்தை எதிர்க்கும் நோக்­க­மே­யாகும். இதில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது எதி­ர­ணிக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை என கூறு­வது தவ­றா­னது.

மஹிந்த தரப்பே முதுகில் குத்­தி­யது. கடந்த ஆண்டு ஒக்­டோபர் மாதம் அர­சியல் புரட்­சியை மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுக்க அதற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யது. வெறும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக்கி பாரா­ளு­மன்­றத்தை கலைத்து மீண்டும் எமது ஆட்­சியை உரு­வாக்­குவோம் என நாம் முடி­வெ­டுத்து மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­த­ம­ராக்கி இறு­தியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே நெருக்­க­டியில் தள்­ளப்­பட்டார். அதன்­போது பாரா­ளு­மன்­றத்தில் 113 பலமும் இல்­லாது, நீதி­மன்ற ஆத­ரவும் இல்­லாது இறு­தி­யாக ஐக்­கிய தேசிய கட்­சி­யையும் பகைத்துக் கொண்டு தனித்து ஜனா­தி­பதி போரா­டிய வேளையில் பொது­ஜன பெர­மு­ன­வினர் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக செயற்­ப­டாது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து பொது­ஜன பெர­மு­ன­விற்கு கட்சி தாவினர்.

இது ஜனா­தி­ப­தியின் முதுகில் குத்­திய செய­லாகும். மஹிந்த தரப்­பினர் செய்த மிகப்­பெ­ரிய துரோகச் செயல் இது­வாகும். ஜனா­தி­பதி இவர்­களை நம்­பியே ஆட்­சியை கலைக்க நட­வ­டிக்கை எடுத்தார். ஆனால் இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யையும் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளையும் பழி­வாங்கும் நோக்­கத்­தி­லேயே நடந்­து­கொண்­டனர். இந்த மனக் கசப்­புகள் எமது மனங்­களில் உள்­ளன.

ஈடு­பாடு இல்­லாத உற­வுக்கே தயா­ரா­கின்றோம்

இன்றும் இரண்டு தரப்­பி­னரும் இணைய வேண்டும் என்ற பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நாளைய தினமும் நாம் பேசு­கின்றோம். என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.