போதைப் பொருள் விற்பனையாளர், பாவனையாளர்களுக்கு இஸ்லாமிய ஷரீஆ, நாட்டின் சட்டத்தின் கீழ் தண்டனைகள்

ஊரிலிருந்து தனிமைப்படுத்தப்படுவர்; நன்மை தீமைகளில் பள்ளிவாசல் பங்கெடுக்காது; ஜனாஸாவை அடக்கவும் தனியான இடம் கல்முனை பெரிய பள்ளிவாசல் போதை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

0 748

(அஸ்லம் எஸ்.மெளலானா,
எஸ்.எல். அப்துல் அஸீஸ்)

கல்­மு­னையில் புகைத்தல் மற்றும் போதைப்­பொருள் பாவ­னையை முற்­றாக தடுக்கும் பொருட்டு ஒழுங்கு செய்­யப்­பட்ட போதை ஒழிப்பு பிர­க­டன மாநாடு நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை கல்­முனை முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெற்­றது.

கல்­முனை புகைத்தல், போதைப்­பொருள் ஒழிப்பு செய­ல­ணியின் ஏற்­பாட்டில் அதன் தலை­வ­ரான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலை­மையில் இடம் பெற்ற இந்­நி­கழ்வில் மன்னார் மேல் நீதி­மன்ற நீதி­பதி அல்­ஹாபிழ் என்.எம்.அப்­துல்லாஹ் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்­ட­துடன் கல்­முனை மாந­கர முதல்வர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஏ.எம்.றகீப் உட்­பட பொலிஸ் மற்றும் முப்­ப­டை­களின் உயர் அதி­கா­ரிகள், அர­சியல் பிர­மு­கர்கள், உல­மாக்கள், கல்­வி­மான்கள், வர்த்­த­கர்கள், இளை­ஞர்கள், மாண­வர்கள் மற்றும் பொது­மக்­களும் பெருந்­தி­ர­ளானோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் பிர­க­ட­னங்கள், எதிர்­கா­லத்தில் நடை­மு­றைக்கு வரும் பிர­க­ட­னங்கள் என்று இரு வகை­யான பிர­க­ட­னங்கள் ‘அல்­லாஹு அக்பர்’ எனும் கோஷத்­துடன் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டன.
உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் பிர­க­ட­னங்கள்

01. கல்­முனைப் பிர­தே­சத்தில் புகைத்தல் மற்றும் போதைப் பொருட்­களை பாவித்தல், அவற்றை விற்­பனை செய்தல், விநி­யோ­கித்தல், கொண்டு செல்­லுதல், பாது­காத்தல், சேமித்து வைத்தல் ஆகிய அனைத்தும் இன்று முதல் முற்­றாகத் தடை செய்­யப்­ப­டு­கின்­றன.

02. கல்­முனைப் பிர­தே­சத்தில் வாழும் ஒரு நபர் மேற்­படி குற்­றங்­களில் ஈடு­ப­டும்­போது புகைத்தல், போதைப் பொருள் ஒழிப்பு செய­ல­ணி­யினால் அமைக்­கப்­படும் விசா­ரணை சபையின் முறை­யான விசா­ரணை ஒன்றின் முடிவில் நிரூ­பிக்­கப்­படின் இஸ்­லா­மிய ஷரீ­ஆ­விற்­க­மை­யவும் இலங்கை ஜன­நா­யகக் குடி­ய­ரசின் நீதித்­துறைச் சட்­ட­திட்­டங்­களை அனு­ச­ரித்தும் குறித்த நப­ருக்கு சீர்­தி­ருத்த (தஃஸீர்) தண்­ட­னைகள் நிறை­வேற்­றப்­படும் .

03. குறித்த குற்­றச்­செயல் தொடர்­பான சாட்­சி­யங்­களை மறைத்தல், விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க மறுத்தல், குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு உத­வுதல், ஊர்க் கட்­டுப்­பாட்­டினை மீறுதல் ஆகிய அனைத்தும் தடுக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றில் ஈடு­படும் எவ­ராக இருப்­பினும் அவர்­க­ளுக்கும் தண்­ட­னைகள் நிறை­வேற்­றப்­படும்.

04. மேற்­படி குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக பொலிஸ் திணைக்­களம், நீதி­மன்றம் மற்றும் அரசு அங்­கீ­காரம் பெற்ற விசா­ரணை சபைகள் எடுக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளுக்கும் இச்­செ­ய­லணி பூரண ஒத்­து­ழைப்பை வழங்கும்.

அதே­வேளை மேற்­படி கட்­டுப்­பா­டு­களை மீறி புகைத்தல், போதைப்­பொருள் விட­யத்தில் தொடர்ந்தும் ஈடு­ப­டு­பவர்கள் அல்­லது இது விட­ய­மாக நீதி­மன்­றத்­தினால் தண்­டனை வழங்­கப்­பட்­டவர் புகைத்தல், போதைப்­பொருள் செய­ல­ணியின் விசா­ரணை சபை­யிடம் குற்­றத்தை ஒப்புக் கொண்டு தௌபாச் செய்ய மறுத்தால் கீழ் குறிப்­பி­டப்­படும் தண்­ட­னைகள் எதிர்­கா­லத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய நிர்ப்­பந்தம் உரு­வாகும்.

01. அவர்­களின் பெயர்­களை பள்­ளி­வா­சல்­களின் விளம்­பரப் பல­கையில் காட்­சிப்­ப­டுத்தி, ஊர்க்­கட்­டுப்­பாட்டை மீறி­யவர் என இனங்­காட்­டுதல்.
02. குறித்த நபரின் திரு­மணம், மரணம் முத­லான நன்மை தீமை­களில் பள்­ளி­வா­சலின் பங்­க­ளிப்­பு­களை விலக்கிக் கொள்­ளுதல்.
03. குறித்த நபர் ஊரி­லி­ருந்து முற்று முழு­தாக தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டுவார்.
04. குறித்த நபரின் ஜனா­ஸாவை அடக்கம் செய்­வ­தற்கு மைய­வா­டியில் தனி­யான இடம் ஒதுக்­கப்­படும்.

இப் பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவரும் பைஅத் எனும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இப் போதையொழிப்பு மாநாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அன்றைய தினம் கல்முனை வர்த்தக சமூகத்தினர் தங்கள் வியாபார நிலையங்களை மூடி ஆதரவினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.