பரப்புரைகளின் பலமும் பதிலுரைகளின் பலவீனமும்

0 743

எவ்­வித தணிக்­கையும் தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்­ப­டுத்த ஒரு­வ­ருக்கு இருக்கும் சுதந்­தி­ரமே கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­தி­ர­மாகும். கருத்து வெளிப்­பாடு என்­பது பேச்சுச் சுதந்­திரம், ஊடகச் சுதந்­திரம், சிந்­தனைச் சுதந்­திரம், சமயச் சுதந்­திரம் போன்ற பல்­வேறு சுதந்­தி­ரங்­க­ளுடன் இணை­வாக முன்­னி­றுத்­தப்­ப­டு­கி­றது.

ஒரு நபரின் கருத்தை மற்­று­மொரு நபர் புரிந்­து­கொள்ள வேண்­டு­மாயின் அவர் அறிந்த, தெரிந்த மொழியில் அவ­ரிடம் முன்­வைக்­கும்­போதே அவரால் இல­குவில் புரிந்து கொள்ள முடி­கி­றது. ஏனெனில், மொழி ஒரு நாட்­டி­னு­டைய, தனி மனி­த­னு­டைய வாழ்வின் முக்­கிய அம்­ச­மாக இருக்­கி­றது.

இன­வாத அர­சியல் வாதி­களும், இன­வாத செயற்­பாட்­டா­ளர்­களும் இந்­நாட்டில் தொடர்ந்து ஏதோ ஒரு பிரச்­சினை ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்க வேண்டும் அல்­லது ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற மனப்­பாங்­கி­லேயே உள்­ளனர். இன­வாத பரு­வ­கால நோயும் அது­வாக இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இன­வாதப் போக்­கு­டை­ய­வர்­களின் செயற்­பா­டு­கள், ஊக்­க­ப்­ப­டுத்­தல்கள் மற்றும் பரப்­பு­ரைகள் அதனை நிரூ­பிப்­ப­தாக அமை­கி­றது. ஏனெனில், கடந்த சில வாரங்­க­ளாக வில்­பத்துக் காட்­டையழிப்­ப­தாக போலிப் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு அதில் அமைச்சர் றிஷாட் பதி­யு­தீனை தங்­க­ளது இன­வாதப் பரப்­பு­ரையின் கருப்­பொ­ரு­ளாக கையி­லெ­டுத்­துள்­ளதைக் காண முடி­கி­றது. அத்­துடன் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்­களில் இப்­ப­ரப்­பு­ரைகள் பல­மாக அமை­வ­தையும் காணக் கிடை­க்கி­றது. இவற்றின் பின்­ன­ணியில் பல்­வேறு விட­யங்கள் இருந்­தாலும், இக்­கா­லங்­களில் போலிப் பரப்­பு­ரைகள் முன்­வைப்­பதன் நோக்கம் புது­வருட கால­மாக ஏப்ரல் மாதத்தில் முஸ்லிம் வர்த்தக நிலை­யங்­களில் பௌத்த சிங்­கள மக்­களை நுகர்வு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டாமல் தடுப்­ப­தா­கவும் இருப்­பது கடந்த சில வரு­டங்­களில் நடந்­தே­றிய நட­வ­டிக்­கை­களின் ஊடாக உணர்ந்து கொள்ள முடி­கி­றது.

இந்­நாட்டில் சமா­தா­னமும் அமை­தியும், சமூக நல்­லி­ணக்­கமும் ஏற்­படக் கூடாது என்ற சிந்­த­னை­யி­லேயே இன­வாதப் பரப்­பு­ரை­களை பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் சில இன­வாத அர­சி­யல்­வா­தி­களும், அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் முன்­வை­த்து செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தோடு அவற்­றிற்கு ஒரு சில சிங்­கள மொழி ஊட­கங்­களும் ஒத்­து­ழைப்பு வழங்கிக் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

30 வருட காலம் இடம்­பெற்ற யுத்­தத்­திற்கு முடி­வு­கட்­டப்­பட்­டுள்­ளதால் மாத்­திரம் இந்­நாட்டில் உண்­மை­யான சமா­தானம் ஏற்­பட்­டு­விட்­ட­தாக அர்த்தம் கொள்ள முடி­யாது. அது எதிர்­மறை சமா­தானம் மாத்­தி­ர­மே­யாகும். நிலை­யான சமா­தா­னத்தை அல்­லது உடன்­பா­டான சமா­தா­னத்தை இந்­நாட்டில் அடைய வேண்­டு­மா­யின், திருப்­தி­கொள்­ளத்­தக்­க­தாக  மக்­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்த்து தேவை­களைப் பூர்த்தி செய்தல், சமூக இசை­வினை ஏற்­ப­டுத்­துதல், சம­மின்­மை­களை இயன்­ற­வரை குறைத்தல், நிலை­யான மக்கள் பயன் பெறும் அபி­வி­ருத்தி, மனித உரி­மை­க­ளுக்கும் சட்­ட­வாட்­சிக்கும் மதிப்­ப­ளித்தல், இணக்­கத்­தோடு இணைந்த ஜன­நா­ய­க­மான அர­சியல் நிலைப்­பாடு என்­பன நாட்டில்  ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

யுத்தம் நிறை­வ­டைந்து ஒரு தசாப்தம் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் மேற்­கு­றித்­த­வற்றை அடை­வ­தற்­காக முயற்­சிகள் எடுக்­கப்­பட்ட போதிலும் இன­வாதம் வெவ்­வேறு உரு­வங்­களில் அவற்­றிற்கு எதி­ராகச் செயற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை கடந்த கால வர­லாறுப் படி­மங்கள் புலப்­ப­டுத்­து­கின்­றன.  ஆதி­கா­லத்தில் காட்­டு­மி­ராண்­டி­க­ளாக வாழ்ந்த மனி­தர்­களில் எழுந்த கட்­டுப்­பா­டற்ற மன­வெ­ழுச்­சிகள், வன்­மு­றை­க­ளுக்கு வழி­வ­குக்கும் அடிப்­படை இயல்­பூக்­கங்கள் போன்று தற்­போ­தைய சில மனி­தர்­க­ளி­டை­யேயும் காணப்­ப­டத்தான் செய்­கி­றது. அத­னால்­தான், அத்­த­கை­ய­வர்கள் கட்­டுப்­பா­டற்ற மன­வெ­ழுச்­சி­க­ளினால் உந்­தப்­பட்டு வன்­மு­றை­சார்ந்த, அமை­தியைக் குழப்பக் கூடிய செயற்­பா­டு­க­ளையும், கருத்­துக்­க­ளையும் வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இவற்­றிற்கு சில ஊட­கங்­களும் பக்க துணை­யாகச் செயற்­ப­டு­வதைக் காணலாம்.

அர­சியல், வர்த்­தகம், பிர­பல்யம், விளம்­பரம் சார்ந்த சுய­ரூ­பங்­களை வேண்டி நிற்­ப­வர்­க­ளினால்; ஆதி மனி­தர்­க­ளி­டையே சுதந்­தி­ர­மாகக் காணப்­பட்ட அடிப்­படை இயல்­புகள் நவீன யுகத்தில் காலத்­திற்குக் காலம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனால் இந்­நாட்டில் இன்­னுமே  சமா­தான கலா­சார மிக்க சமூ­கத்தை உரு­வாக்க முடி­யாமல் உள்­ளது. மனி­தனை மனி­த­னாக மாற்றக் கூடிய ஆரோக்­கி­ய­மான மனப்­பாங்­கு­களை கட்­டி­யெ­ழுப்பக் கூடிய மன­வெ­ழுச்­சி­களை முகா­மைத்­துவம் செய்தல், சகித்­துக்­கொள்ளல், பிறர் உணர்வை தான் பெறுதல், நன்­றி­யு­டைமை, பாராட்­டுதல், வர­வேற்றல், விட்­டுக்­கொ­டுத்தல், திறந்த புத்­து­ணர்­வான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ளல் போன்ற சமா­தானக் கலா­சா­ரத்­திற்­கான, நல்­லி­ணக்­கத்­திற்­கான பண்­பு­களை வளர்ப்­ப­தற்­கான செயற்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது காலத்தின் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

இவற்றை அர­சி­யல்­வா­திகள் மத்­தி­யிலும் ஏனைய மரண இயல்­பூக்கள் கொண்­ட­வர்­க­ளி­டத்­திலும் ஏற்­ப­டுத்­து­வதில் ஊட­கங்கள் பெரும்­பங்­காற்ற வேண்­டி­யுள்­ளது. ஊடகம் என்­பது சக்­தி­மிக்­கது. மனி­தனை மனி­த­னாக மாற்­றவும், மிரு­க­மாக மாற்­றவும், ஆட்­சியை ஏற்­ப­டுத்­தவும் அவற்றை இல்­லாமல் செய்­யவும் ஊடத்­தினால் முடியும். அந்­த­ளவு சக்தி மிக்க ஒன்­றான ஊடகம் ஊடக தர்­மத்­தையும் ஊடக ஒழுக்கக் கோவை­யையும் கடைப்­பி­டித்து செயற்­பட வேண்­டிய பொறுப்பும் உள்­ளது என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டி­ய­தாகும்.

 

முஸ்­லிம்­களும் ஊடக வரட்­சியும்

சனத்­தொகை எண்­ணிக்கை அடிப்­ப­டையில் உலகில் 59 ஆவது இடத்தை இலங்கை வகிக்­கி­றது. நம் நாட்டில்; ஏறக்­கு­றைய 2 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழ்­கின்­றனர். இவர்­களில்  74 வீத­மானோர் தாய்­மொ­ழி­யாகச் சிங்­க­ளத்­தையும் 18 வீதத்­தினர் தாய் மொழி­யாகத் தமி­ழையும் 8 வீத­மானோர் ஏனைய மொழி­க­ளையும் பேசு­கின்­றனர். இருப்­பினும், இலங்­கையின் சனத்­தொகை எண்­ணிக்கையில் 14 வீதத்­தி­னரே ஆங்­கில மொழியைப் பேசு­வ­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் குறிப்­பி­டு­கின்­றன. எனவே, இந்­நாட்டில் வாழும் மக்­களின் கருத்­துக்கள் அதி­க­ளவில் பகிர்ந்­து­கொள்­ளப்­ப­டு­வது சிங்­கள மொழி­யிலும், தமிழ் மொழி­யிலும் என்­பது புலப்­ப­டு­கி­றது.

ஒரு நாட்டில் ஒரு­வரின் அல்­லது ஒரு சமூ­கத்தின் கருத்து வெளிப்­பாட்டை எடுத்துச் செல்லும் ஓர­ல­காக ஊடகம் விளங்­கு­கி­றது. ஊடகம் என்­பது ஒரு சுதந்­திர நாட்டின் நான்கு தூண்­களில் ஒன்று. ஏனைய மூன்றும்; சட்ட மன்றம், நிர்­வாகம், நீதி­மன்றம் என்­ப­ன­வாகும். ஒரு ஜன­நா­யக நாட்டில் வாழும் ஒரு சமூ­கத்தின் அல்­லது ஒரு இனத்தின் உரி­மைகள் அதி­காரத் தரப்­பினால் அல்­லது மற்­று­மொரு சமூ­கத்­தினால் அல்­லது அச்­ச­மூ­கத்தைச் சார்ந்த ஒரு குழு­வினால் மறுக்­கப்­ப­டு­கின்­ற­போது, மீறப்­ப­டு­கின்­ற­போது அல்­லது பறிக்­கப்­ப­டு­கின்­ற­போது அவை தொடர்பில் பாதிக்­கப்­படும் சமூகம் அல்­லது இனம் தமது நிலைப்­பாட்டை, தாம் பாதிக்­கப்­படும் விதத்­தினை, எதிர்­நோக்கும் விளை­வு­களை ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ப­டுத்­து­வது பொது­வான நிலை­யாகும்.

இந்­நாடு காலனித்­துவ ஆட்­சியின் கீழ் இருந்த கால­கட்­டத்தில் வாழ்ந்த சிறு­பான்மை மக்கள் எதிர்­நோக்­கிய சவால்­க­ளையும், நெருக்­க­டி­க­ளையும் விடவும் சுதந்­தி­ரத்தின் பிற்­பட்ட காலத்தில் வாழ்­கின்ற  சிறு­பான்மை சமூ­கங்­க­ளான தமிழ் மக்­களும், முஸ்லிம் மக்­களும் எதிர்­நோக்­கு­கின்ற நெருக்­க­டி­களும் சவால்­களும் அதிகம் என்றே சமூக ஆய்­வா­ளர்கள் கூறு­கி­றார்கள். இந்­நி­லைமை கொஞ்சம் முன் நகர்த்­தப்­பட்டு  அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­களை நோக்­கிய நெருக்­க­டி­களை கடும்­போக்­கா­ளர்கள் முன்­னெ­டுத்­து­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அதன் அண்­மைய உதா­ர­ண­மாக வில்­பத்துக் காட்டை அக­தி­க­ளாக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் அழித்து அதில் அவர்கள் குடி­யேறி வரு­கி­றார்கள் என்ற பொய் பிர­சா­ர­மாகும். இப்­பி­ர­சா­ரத்தில் உண்மை­யில்லை என அரச தரப்­பிலும், பௌத்த சிங்­கள மத்­தி­யி­லுள்ள சமா­தான விரும்­பி­களும் கூறி வரு­கின்­ற­போ­திலும். இப்­போலிப் பரப்­பு­ரைகள் கடும்­போக்கு சமூ­க­ வ­லை­த்­தள­வா­தி­க­ளி­னால் பல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தையும் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

1980 களின் பிற்­பட்ட காலத்தில் உரு­வான யுத்த சூழ்­நி­லை­க­ளினால் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் சமூ­கமும் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் பாதிப்­புக்­குள்­ளான வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம் சமூ­கமும் எதிர்­கொண்ட விளை­வு­களின் நிதர்­ச­னங்­களை இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யாக வாழு­கின்ற  சிங்­கள மக்கள் முழு­மை­யாக அறிந்­தி­ருக்க சந்­தர்ப்பம் இருக்­க­வில்லை. அது­மாத்­தி­ர­மின்றி 2012 முதல் இன்று வரை முஸ்­லிம்கள் தொடர்­பாக பௌத்த – சிங்­கள மக்கள் மத்­தியில் பல­மாக  முன்­வைக்­கப்­பட்டு வரும் போலி  பரப்­பு­ரை­க­ளுக்கும்  இடைத்­த­டங்­கலை ஏற்­ப­டுத்தி அவை போலிப்­ப­ரைப்­பு­ரைகள் என்ற பதி­லு­ரை­களை முன்­வைக்க முஸ்லிம் சமூகம் இன்னும்  தமக்­கான பல­முள்ள பல்­மொழி ஊடக கட்­ட­மைப்­பைக் கட்­டி­யெ­ழுப்ப  முயற்­சிக்­க­வில்லை. இதனால் பல­மான போலிப் பரப்­பு­ரை­க­ளுக்­கான பதி­லு­ரைகள் பல­வீ­ன­மா­கவே காணப்­ப­டு­கி­றது.

பெரும்­பான்மை சிங்­கள சமூ­கத்தின் பெரும்­பா­லான மக்கள், நாட்டு நடப்­புக்­க­ளையும் ஏனைய  கருத்­துக்­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் இதர விட­யங்­க­ளையும் அறிந்­து­கொள்­வது சிங்­கள மொழி ஊட­கங்கள் வாயி­லாக மாத்­தி­ரமே என்­பது அறிந்த விட­ய­மாகும். அச்­சிங்­கள மொழி ஊட­கங்கள் எந்­த­ளவு தூரத்திற்கு சிறு­பான்மை சமூ­கங்கள் எதிர்­நோக்கும் நெருக்­க­டி­களை ஊடக தர்­மத்­து­டனும், நடு­நி­லை­போக்­கு­டனும் பிர­சு­ரிக்­கின்­றன என்­பது ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய விட­ய­மா­க­வுள்ள சூழலில் சில ஊட­க நிறு­வன முகா­மைத்­து­வமும், சில  ஊட­க­வி­ய­லா­ளர்­களும் இப்­போ­லிப்­ப­ரப்­பு­ரை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி வரு­வதைக் காண முடி­கி­றது.

இன்று பத்­தி­ரிகை, வானொலி, தொலக்­காட்­சி­களை பின்­தள்ளி சமூ­க­வ­லைத்­த­ளங்கள் போலிப் பரப்­பு­ரை­களை மக்கள் மத்­தியில் முன்­கொண்டு செல்­வதில் முதன்மை வகிக்­கின்­றன. என்­பதை வில்­பத்து தொடர்­பிலும், அமைச்சர் றிஷாட் பதி­யுதீன் குறித்தும் போலிப் பிர­சா­ரங்­களை முன்வைப்பதற்­காக 300க்கும் மேற்­பட்ட போலி பேஸ்புக் பக்­கங்கள் உரு­வாக்­கப்­பட்டு சிங்­கள பௌத்த இளை­ஞர்கள் மத்­தி­யிலும், கிரா­மப்­புற மக்­க­ளி­டை­யிலும்; இன­வாதப் பரப்­பு­ரை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டுவ­தாகச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் ‘ஸ்மாட்போன்’ ஊடாக இணை­யத்­த­ளத்தை பயன்­ப­டுத்­து­பவர்­களின் தொகையில் 96 வீத­மானோர் பேஸ்புக் சமூ­க­வ­லைத்­த­ளத்தை பயன்­ப­டுத்­து­கின்­றமை 2018ஆம் ஆண்டின் புள்ளி விப­ரங்­க­ளி­னூ­டாக அறிய முடி­கி­றது. இதில் இலங்­கையின் சனத்­தொகை அடிப்­ப­டையில் பெரும்­பான்மை இனத்­த­வர்­களே அதிக எண்­ணிக்­கையில் இருக்­கின்­றனர். சனத்­தொகை அடிப்­ப­டையில்  பெரும்­பான்­மை­யினர் அதி­க­ளவு எண்­ணிக்­கையில் சமூ­க­வ­லைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்­து­கின்­றார்கள் என்று கரு­தினால் பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தை பயன்­ப­டுத்­து­கின்­ற­வர்­களில்; அதி­க­ளவு வீதத்தை அவர்­களே கொண்­டுள்­ள­துடன் 19 முதல் 29 வயது வரை­யான இளை­ஞர்­களே அதிகம் பேஸ்புக் பாவ­னை­யா­ளர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். இந்த இளை­ஞர்­களை பேஸ்புக் சமூ­க­வ­லைத்­த­ளத்­தி­னூ­டாக கவர்ந்­தி­ழுத்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல­மான  போலிப்­ப­ரப்­பு­களை முன்­னெ­டுத்து வரு­வதன் மிகப் பெரிய அத்­தாட்­சி­யாக நாம் நண்பர் என்ற அமைப்பு கடந்த வாரம் அமைச்சர் றிஷாட் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக 28 நக­ரங்­களில் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தமை சான்­றா­க­வுள்­ளது.

இந்­நி­லை­மைக்குக் காரணம், முஸ்லிம் மக்கள் பக்கம் காணப்­படும் நியா­யங்­க­ளையும், கருத்­துக்­க­ளையும், போலிப் பரப்­பு­ரை­க­ளுக்கு எதி­ரான பதி­லு­ரை­க­ளையும் சிங்­கள மொழியில் பல­மாக முன்­வைக்க முடி­யாத ஊடக வரட்சி முஸ்லிம் சமூ­கத்தில் தொடர்ந்து காணப்­ப­டு­வ­தாகும் என்­பதைச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

 

போலிப் பரைப்­பு­ரை­களும்

பல­மான  பதில்­களும்

இலங்­கையில் ஊட­கங்­களின் எண்­ணிக்­கைகள் அதி­க­ரித்­துக்­கொண்டு சென்­றாலும், சென்­ற­டைய வேண்­டிய செய்­தி­களும் தகவல்­களும் காலத்தின் தேவைக்­கேற்­பவும், சமூ­கங்­களின் ஒற்­று­மைக்கும், நல்­லி­ணக்­கத்­துக்கும், முன்­னேற்­றத்­திற்கும், அபி­வி­ருத்­திக்கும் ஏற்­பவும், அவ­ர­வ­ருக்­கு­ரித்­தான விதத்தில் அவ­ரவர் நிலை­மை­களை வெளிப்­ப­டுத்தும் விதத்தில் சென்­ற­டை­கின்­ற­னவா? இடம்­பெ­று­கின்ற நிகழ்­வுகள் அதனால் பாதிக்­கப்­ப­டு­கின்ற சமூ­கங்­களின் நிலை­மைகள் திரி­பு­ப­டுத்­தப்­ப­டாமல் நிதர்­ச­ன­மாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா? என்ற கேள்­வி­க­ளுக்கு மத்­தியில் முஸ்­லிம்கள்  தொடர்பில் இத்­த­கைய ஊட­கங்­க­ளினால் பிர­சு­ரிக்­கப்­படும் செய்­தி­களும், கட்­டு­ரை­களும், விமர்­ச­னங்­களும் ஒரு சமூ­கத்தை அல்­லது சமூ­கங்­களின் ஒற்­று­மையைப் பாதிக்­க­ாத ­வி­தத்­திலும் சம்­ப­வங்­களைத் திரி­பு­ப­டுத்­தாத விதத்­திலும் இன­மு­று­கலை தோற்­று­விக்­காத வகை­யிலும் ஊடக தர்­மத்­தோடு வெளி­வ­ரு­வதற்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­டு­கி­ற­தா என்றால் அதற்­கான பொது­வான பதில் இல்­லை­யாகும்.

யுத்த முடிவின் பின்­ன­ரான இந்­நாட்டின் அமைதிச் சூழ்­நி­லையில் அமை­தியைக் குழைப்­ப­தற்­காக பெரும்­பான்மை சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து அச்­ச­மூ­கத்தைப் பாது­காப்­ப­தாகக் கூறிக்­கொண்டு, அச்­ச­மூ­கத்தை  நல்­வ­ழிப்­ப­டுத்­து­கின்ற பணியைப் புரி­ய­வேண்­டி­ய­வர்கள் மத வன்­மு­றை­யா­ளர்­க­ளாக மாறி இந்­நாட்டில் வாழ்கின்ற சிறு­பான்மை சமூ­க­மான முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முஸ்­லிம்கள்; வாழ்­விடம், சமய, சமூக பண்­பாட்டு, கலை, கலா­சார, உணவு, உடை, திரு­நாட்கள் என சகல நட­வ­டிக்­கை­க­ளிலும் மூக்கை நுழைத்து, அவற்­றிற்கு எதி­ராக மூன்றாம் சக்­தி­களின் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருப்­பதை தமிழ் பேசும் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து வெளி­வரும் அச்சு ஊட­கங்கள் அவ்­வப்­போது வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால், எச்­ச­மூ­கத்தில் உள்­ள­வர்­க­ளி­டையே சிறு­பான்மை சமூ­கங்­களின் செய்­திகள் சென்­ற­டைய வேண்டும் என்ற இலக்கு உள்­ளதோ அந்த இலக்கை அடை­வ­தற்­கான முயற்­சிகள் தேசிய மட்­டத்தில் இது வரை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் முழுமையாக முன்­னெ­டுக்­க­வில்லை.

இந்­நி­லையில், பெரும்­பான்மை சமூ­கத்­தி­லுள்ள பெரும்­பா­லான மக்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத கடும்­போக்கு எண்­ணங்­களைக் கொண்ட அமைப்­புக்­க­ளி­னதும் அவ்­வ­மைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளி­னதும் நட­வ­டிக்­கைகள் குறித்து  முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்­ள­வர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற கருத்­துக்­களும், நியா­யங்­களும் வேண்டி நிற்கும் தீர்­வு­களும் சிங்­கள மொழி மூல ஊட­கத்­தி­னூ­டாக சிங்­கள மக்­க­ளி­டையே சென்­ற­டை­வ­தற்­கான வழிகள் குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்க வகையில் இன்னும் ஏற்­ப­டுத்­தப்படவில்லை. ஆனால் முஸ்­லிம்கள் தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன போலிப் பரப்­பு­ரை­க­ளுக்கு பல­மான முறையில் பதி­லு­ரைக்க வேண்­டிய பொறுப்பு சிங்­கள மொழியில் பரீட்­ச­யமுள்­ள­வர்­களின் தார்­மீக பொறுப்­பா­க­வுள்­ளது. அந்தப் பொறுப்பை முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள ஒரு சில விரல்­விட்டு எண்ணக் கூடி­ய­வர்கள் நிறை­வேற்றி வந்­தாலும்  மொழி­யாற்றல் இருந்தும் பலர் இப்­பொ­றுப்­பி­லி­ருந்து தவிர்ந்து தாங்­களும் தங்­க­ளது பாடும் என்ற மன­நி­லையில் இருப்­பதை பல­மான போலிப் பிர­சா­ரங்­க­ளுக்கு பல­மாக பதி­லு­ரைக்க முடி­யாமல் இருப்­பதைச் சுட்­டிக்­காட்ட வேண்டும். நடு­நி­லை­யாக இருந்து சிந்­திக்­கின்ற சிங்­கள  மக்­க­ளி­டையே முஸ்லிம் சமூ­கத்தின் கருத்­துக்கள்; தினசரி சென்றடைய வேண்டுமானால் குறைந்தபட்சம்  சிங்கள மொழியிலான தினசரி அச்சு ஊடகம் உருவாக்கப்படுவது அதி முக்கிய தேவையாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில் கிராமப்புற மக்களிடையே முஸ்லிம்கள் தொடர்பாக சென்றடைகின்ற போலிப் பிரசாரங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் உண்மைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வர்த்தக நோக்கங்களைத் தவிர்த்து, முஸ்லிம்கள்; நாளாந்தம் எத்தகைய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக வேண்டியேனும்; முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், போலிப் பிரசாரங்கள் என்பவை குறித்து தமிழ் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளும் கட்டுரைகளும் மொழிபெயர்புச்  செய்யப்பட்டு குறைந்த பட்சம் ஒரு மொழிபெயர்ப்பு பத்திரிகையாவது சிங்கள மொழியில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து  வெளிவருவது காலத்தின் கட்டாயம் என்று உணரப்படுவது அவசியமாகவுள்ளது.

கடும்போக்கு சிந்தனைகளைக் கொண்ட இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எதிர்ப்பு மற்றும் போலிப்பிரசார நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்திலிருந்து உரிய பதில்கள் அவர்களது மொழியில் அளிக்கப்படுவது அவசியமாகும். வில்பத்து தொடர்பிலும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் குறித்தும் முன்வைக்கப்படுகின்ற போலிப் பரைப்புரைகள் ஒரு சில சிங்கள ஊடகங்களில் தொடர்ச்சியாக  முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிலும், சமூகவலைத்தளங்கள் இதில் பெரும் பங்காற்றி வருகின்றன.

ஆதலால், முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற போலிப் பிரசார நடவடிக்கைகள் என்பவற்றுக்கு பதிலளிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இத்தேவையை நிறைவேற்ற குறைந்த பட்சம் சிங்கள மொழி மூலமான தினசரிப் பத்திரிகையொன்று தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளிவருமாயின் பலமடைந்து வரும் போலிப் பரப்புரைகளுக்கு பலமான பதில்களை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்பது நிதர்சனமாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.