கருமலையூற்றுப் பள்ளிவாசலை மீட்க நடவடிக்கை வேண்டும்

பாராளுமன்றில் இம்ரான் எம்.பி. வலியுறுத்து

0 429

திரு­கோ­ண­மலை கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­சலை விடு­வித்­துக்­கொள்ள முஸ்லிம் கலா­சார அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்­டத்தின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு, பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சு மற்றும் மலை­யக புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு, உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

திரு­கோ­ண­மலை கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் தொடர்பில் இன்று தேசிய ரீதியில் மட்­டு­மன்றி சர்­வ­தேச ரீதி­யிலும் பேசப்­பட்டு அவதா­னிக்­கப்­பட்டு வரு­கின்­றது. சுமார் 400 வரு­டங்கள் பழைமை வாய்ந்த இந்த பள்­ளி­வாசல் 2009 ஆம் ஆண்டு படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்த பின்னர் தொழுகை இடம்­பெ­றாமல் இருக்­கின்­றது. கடந்த அர­சாங்க காலத்தில் நான் மாகாண சபையில் இருந்து இந்த பள்­ளி­வாசல் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு முன் கொண்­டு­வந்த நிலையில் இன்னும் அந்த பள்­ளி­வா­சலை பெற்­றுக்­கொள்ள பேச­வேண்­டிய நிலையில் இருக்­கின்றேன்.

அதனால் 400 வருடம் பழைமை வாய்ந்த இந்த பள்­ளி­வா­சலை பழைய நிலை­மைக்கு கொண்­டு­வர அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்­பாக பாது­காப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்த்­த­ன­வுடன் கலந்­து­ரை­யாடி இருக்­கின்றேன். இருந்த போதும் எமது அர­சாங்­கத்தில், எமது அமைச்சர் ஒருவர் இதற்கு பொறுப்­பாக இருந்தும் இந்தப் பள்­ளி­வா­சலை பெற்றுக் கொள்ள முடி­யாமல் இருப்­பது குறித்த கவலை எனக்கும் எமது மக்­க­ளுக்கும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது.

எனவே எமது சமு­கத்தின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக இதனை கருதி இந்த பள்­ளி­வா­சலை மீண்டும் பெற்­றுக்­கொள்ள தேவை­யான நட­வ­டிக்­கை­களை அமைச்சர் மேற்­கொள்­ள­வேண்டும்.

அதே­போன்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இருக்கும் தபால் அலு­வ­ல­கங்­களில் பல குறை­பா­டுகள் இருக்­கின்­றன. சென்ற காலத்தில் இருந்த பிரச்­சி­னைகள் இன்னும் அவ்­வாறே இருந்து வரு­கின்­றன. குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தபால் விநியோகஸ்தர் வெற்றிடங்களை நிரப்பவும் உப தபால் காரியாலயங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.