ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் பலி

0 499

ஆப்­கா­னிஸ்­தானில் விவ­சா­யி­க­ளு­டைய களியாட்ட நிகழ்­வொன்றில் ஏற்­பட்ட குண்­டு­வெ­டிப்பில் 4 பேர் உயி­ரி­ழந்­த­துடன் பலர் காய­ம­டைந்­தனர்.

ஆப்­கா­னிஸ்­தானில் தென்­ப­கு­தியில் ஹெல்மண்ட் மாகா­ணத்தில் கடந்த சனிக்­கி­ழமை விவ­சா­யி­க­ளுக்­கான களியாட்ட நிகழ்வு நடந்­தது. இங்கு சுமார் 1000 பேர் கூடி­யி­ருந்­தனர். இதன்­போது திடீ­ரென குண்­டு­வெ­டிப்பு ஏற்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

காய­ம­டைந்­த­வர்கள் அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் குண்­டு­வெ­டிப்பை தொடர்ந்து நிகழ்­வுகள் அனைத்தும் நிறுத்­தப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

மேலும், இந்தத் தாக்­கு­த­லுக்கு இது­வரை எந்த தீவி­ர­வாத அமைப்பும் பொறுப்­பேற்­க­வில்லை.

இதற்கு முன்னர் ஆப்கா­னிஸ்­தானில் வியா­ழக்­கி­ழமை நடந்த விழாவொன்றின் போது நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்­லப்­பட்­டனர். பலர் காய­ம­டைந்­தனர். அந்தத் தாக்­கு­த­லுக்கு ஐ. எஸ். பொறுப்­பேற்­றி­ருந்­தது.

ஆப்­கா­னிஸ்­தானைத் தலிபான் தீவி­ர­வா­திகள் பிடித்து வைத்­துக்­கொண்டு பயங்­கர கட்­டுப்­பா­டுகள் விதித்­தனர். அமெ­ரிக்க தலை­மை­யி­லான நேட்டோ படை­களின் அதி­ரடி நட­வ­டிக்­கை­களால் கடந்த 2001 ஆம் ஆண்டு தலி­பான்கள் பிடி­யி­லி­ருந்து ஆப்கானிஸ்தான் விடுவிக்கப்பட்டது.

எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.