ஹஜ் யாத்­திரை 2019: முக­வரை தேர்ந்­தெ­டுக்கும் இறுதித் தினம் இன்­றாகும்

உப முக­வ­ரிடம் பணம் செலுத்­தாதீர்: ஹஜ் குழு

0 537

இம்­முறை ஹஜ் பய­ணிகள் 3400 பேர் புனித மக்கா செல்லத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளனர். ஹஜ் பய­ணிகள் அங்­கீ­க­ரி­க்கப்­பட்ட முக­வர்­களை இன்று தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்ள வேண்டும். தவறும் பட்­சத்தில் காத்­தி­ருக்­கின்ற அடுத்த விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை செல்ல அனு­மதி வழங்­கப்­ப­டு­மென ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முக­வர்­களை நாடாமல் உப முக­வர்­க­ளுக்கு பணத்­தையும் கட­வுச்­சீட்­டையும் கொடுத்து ஏமாற்­ற­ம­டையும் ஹஜ் பய­ணி­க­ளுக்கு  ஹஜ் குழுவோ முஸ்லிம் சமயப் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமோ பொறுப்­பா­காது என்றும் முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்­சரின் பிரத்­தி­யேகச் செய­லா­ளரும் ஹஜ் குழு முக்­கி­யஸ்­த­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம்  தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

2019 ஆம் ஆண்­டிற்­கான ஹஜ் ஏற்­பா­டு­களில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணக்­க­ளமும் ஹஜ் குழுவும் இணைந்து 92 முக­வர்­களை தெரிவு செய்­துள்­ளன. முக­வர்கள் பற்­றிய அனு­ப­வங்கள், அவர்­களால் அழைத்துச் செல்­லப்­படும் வழி­காட்­டியின் அனு­ப­வங்கள் உள்­ள­டங்­க­லாக இந்த முக­வர்கள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­றனர்.

நாட­ளா­விய ரீதி­யாக சென்று அனு­ம­திக்­கப்­பட்ட ஹஜ் பய­ணி­க­ளுக்­காக  பல விளக்க மாநா­டு­களை நடத்தி வரு­கின்றோம். அதில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முக­வர்­க­ளையே  நாட வேண்டும் எனவும் வலி­யு­றுத்திக் கூறி­வ­ரு­கின்றோம்.  ஏனென்றால் சில கிரா­மங்­களில் உப­மு­க­­வர்கள் பணம் மற்றும் கட­வுச்­சீட்­டுக்­களை அற­வி­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு பதுளை மாவட்­டத்தில் 12 ஹஜ் பய­ணி­க­ளுக்கு ஹஜ் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டது. அவர்கள் உப­மு­க­வர்­கள் மூல­மாக திணைக்­க­ளத்தை நாடி­யி­ருந்­தனர்.

ஹஜ் பய­ணிகள் உப முக­வர்­களை நாடிச்­சென்று  பாதிப்­புக்கள் ஏற்­பட்டால் அந்த முக­வர்­க­ளுக்கு எதி­ராக ஹஜ் குழு­வி­ன­ருக்கோ அல்­லது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கோ எந்­த­வி­த­மான சட்ட நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாது. அவர்கள் எங்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­வர்கள் அல்லர். விசே­ட­மாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முக­வர்­களை மட்­டுமே நாட வேண்டும் என்­பது  எங்­க­ளது கட்­டா­ய­மான வேண்­டு­கோளாகும். அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முக­வர்கள் பற்றி எங்­க­ளு­டைய இணை­யத்­த­ளத்­திலும் மற்றும் பத்­தி­ரிகை விளம்­ப­ரத்தின் ஊடா­கவும் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம். அத்­துடன், தெரிவு செய்­யப்­பட்ட ஒவ்­வொரு ஹஜ் பய­ணி­க­ளுக்கும் நாங்கள் பிரத்­தி­யே­க­மாக இதனைக் கைய­ளித்­தி­ருக்­கின்றோம்.

கட்­டண உயர்வு

அதே­வேளை, 2015 ஆம் ஆண்டில் ஹஜ் கட்­டணம் நான்கு இலட்­சத்­துக்கு  ஐந்து இலட்­சத்­துக்கும் இடைப்­பட்­ட­தாக இருந்­தது. கடந்த வருடம் ஐந்­தரை இலட்­சத்தில் இருந்து ஆறு இலட்சம் இடைப்­பட்­ட­தாக இருந்­தது. இந்த வருடம் ஆகக் குறைந்த வச­தி­க­ளுடன் குறைந்த கட்­ட­ண­மாக ஒரு முகவர் ஆறு  இலட்சம் செலுத்த வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த கட்­டண உயர்­வுக்கு முக்­கிய காரணம் எமது நாட்டின் பண வீக்­க­மாகும். கடந்த வருடம் ஹஜ் கட­மைக்கு சென்­ற­போது, சவூதி ரியாழின் பெறு­மதி ரூபா 41 ஆக இருந்­தது. இந்த முறை ரூபா 49 ஆக உயர்ந்­துள்­ளது. இவையே ஹஜ் கட்­டண உயர்­வுக்கும் முக்­கிய கார­ண­மாகும்.

அது மட்­டு­மன்றி சவூதி அரே­பி­யாவில் சில புதிய வரிகள் அற­விடத் தீர்­மா­னித்­துள்­ளார்கள். இவை­யெல்­லா­வற்­றையும் கருத்திற் கொண்டு பார்க்கும் போது முக­வர்­களின் செலவு கூடி­யி­ருக்­கின்­றது. இம்­முறை ஹஜ் பயணி­களை அழைத்துச் செல்லக்கூடிய ஆகக் குறைந்த கட்­டணம்  ஆறு இலட்­ச­மாக அமையும்.  இதை விட சொகு­சு­க­ளுடன் செல்ல விரும்­பினால்  ஆறு இலட்­சத்­திற்கு மேல் அற­விட வேண்டும். நல்ல சொகு­சு­க­ளுடன் செல்­வ­தாக இருந்தால் ரூபா எட்­டரை  இலட்­சம்­வ­ரை­யிலும்  அற­வி­டு­வ­தாகத் தெரிய வரு­கி­றது.

 முறைப்­பா­ட­ளிக்­கலாம்

எவ்­வா­றா­யினும் நாங்கள் ஹஜ் யாத்­தி­ரை­யா­ளர்­க­ளுக்கு வலி­யு­றுத்திக் கூறிக் கொள்­வது  ஆறு இலட்­சத்­துக்கு குறை­வாக ஒரு முக­வர்­க­ளையும் நாட வேண்டாம். அவ்­வாறு செய்­வார்­க­ளாயின் அது ஒரு பிழை­யான நோக்­கிலே செய்­வார்கள் என்று நாங்கள் கரு­து­கிறோம். எந்­த­வொரு ஹஜ் யாத்­தி­ரை­யா­ளர்­களும் முக­வர்கள் கொடுத்த வாக்கை நிறை­வேற்றவில்­லை­யெனில் முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கத்தின் தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொண்டு முறைப்­பாடு தெரி­விக்­கலாம் அல்­லது எழுத்து மூல­மாவது சரி ஹஜ் யாத்­தி­ரை­யா­ளர்கள் தங்­க­ளது முறைப்­பா­டு­களைத் தெரி­விக்­கலாம்.

எந்­த­வொரு முக­வரும் பொருத்­தத்­திற்கு அப்­பாற்­பட்டு மேல­தி­க­மான பணம்  கோரு­வார்­க­ளாயின் அது சம்­பந்­த­மாக திணைக்­க­ளத்­துக்கு தெரி­யப்­ப­டுத்த முடியும். இதுவரையிலும் 3400 ஹஜ் பயணிகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்கள்  அவர்களுக்கு தேர்ந்தெடுக் கப்பட்டதற்கான உறுதி படுத்தல் கடிதங்களும் வழங்கப்பட்டு இருக் கின்றன. இதன் அடிப்படையில் அந்த ஹஜ் பயணிகள் இன்றைய தினத்திற்குள் முகவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு வேண்டு கோள் விடுக்கின்றோம். இக் கால எல்லைக்குள் முகவர்களைத் தேர்ந்தெடுக்க தவறும் பட்சத்தில் காத்திருக் கின்ற ஏனைய ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கு யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.