யெமனில் பொதுமக்கள் உயிரிழப்பு யுத்த தரப்புகள் பரஸ்பர குற்றச்சாட்டு

0 553

பல வாரங்­க­ளாக யுத்­தத்தில் சிக்­கி­யுள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் மற்றும் சிறு­வர்கள் உள்­ள­டங்­க­லாக 20 பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து யெமனில் யுத்­தத்தில் ஈடு­படும் தரப்­புக்கள் பரஸ்­பரக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளன.

வட­மேற்கு யெமனின் ஹஜ்ஜாஸ் குஷார் மாவட்­டத்தில் சவூதி அரே­பிய – ஐக்­கிய அரபு அமீ­ரகக் கூட்டுப் படை­யினர் மேற்­கொண்ட வான் தாக்­கு­தலில் 23 பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக ஹெளதி சார்பு அல்-­ம­சிராஹ் தொலைக்­காட்சி தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே சவூதி அரே­பி­யா­வுக்குச் சொந்­த­மான அல்-­அ­ர­பிய்யா தொலைக்­காட்சி அலை­வ­ரிசை ஹெள­திகள் ஹாஜொர் பழங்­கு­டி­யின உறுப்­பி­னர்கள் பலரைக் கொன்­றுள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளது.

கடந்த இரு நாட்­களில் இடம்­பெற்ற உயி­ரி­ழப்­புக்­களில் 10 பெண்­களும் 12 சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக மருத்­துவ அறிக்­கை­களை மேற்­கோள்­காட்டி தெரி­வித்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை 30 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

இந்த உயி­ரி­ழப்­புக்­க­ளையும் காய­ம­டையச் செய்­த­மை­யி­னையும் நாம் ஒரு­மித்த குரலில் கண்­டிக்க வேண்டும் என ஐக்­கிய நாடுகள் சபையின் யெம­னுக்­கான மனி­தா­பி­மான இணைப்­பாளர் லைஸ் கிரான்டி அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

தீர்­வு­காண வேண்­டிய, தீர்­வு­கா­ணப்­படக் கூடிய இந்த முரண்­பாடு கார­ண­மாக தேவை­யற்ற முறையில் அப்­பாவி மக்கள் உயி­ரி­ழப்­பது அதிர்ச்­சியைத் தரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஹஜ்ஜாஸ் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள உதவி தேவைப்படும் மக்களும் முடியுமான வரை அனைத்து உதவிகளைச் செய்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.