ரோஹிங்ய அகதிகளை இடம் மாற்றும் திட்டம் நெருக்கடிகளை உருவாக்கும்

ஐ.நா. எச்சரிக்கை

0 536

அடிக்­கடி புயல் தாக்கம் ஏற்­ப­டு­கின்ற மக்கள் வசிக்­காத பகு­தியில் 23,000 அக­தி­களை அடுத்த மாதம் குடி­ய­மர்த்­து­வ­தற்­கான திட்­டத்தை பங்­க­ளாதேஷ் தொட­ரு­மானால் அது புதிய நெருக்­க­டி­களை எதிர்­நோக்க வேண்­டிய ஆபத்து உரு­வாகும் என ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை­க­ளுக்­கான தூதுவர் எச்­ச­ரித்­துள்ளார்.

அண்­மையில் பஹாசன் சார் பகு­திக்கு விஜயம் செய்­தி­ருந்த மியன்மார் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் பெண் அறிக்­கை­யா­ள­ரான யங்ஹீ லீ கடந்த திங்­கட்­கி­ழமை ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் வங்­காள விரி­கு­டா­வி­லுள்ள குறித்த தீவு வாழ்­வ­தற்கு உண்­மை­யி­லேயே பொருத்­த­மா­ன­தாக இருக்கும் எனக் கரு­த­வில்லை எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

அதனை மோச­மான திட்டம் என அறி­வித்த அவர் அக­தி­களின் சம்­ம­த­மின்றி இவ்­வாறு அவர்­களை வேறு இடத்­திற்கு மாற்­று­வது புதிய பிரச்­சி­னை­களை உரு­வாக்கக் கூடி­யது எனத் தெரி­வித்தார்.

அக­திகள் சேறும் சக­தியும் நிறைந்த பருவப் பெயர்ச்சிக் காலங்­களில் அடிக்­கடி வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டு­கின்ற தாழ் நிலத்­தீ­வான வாழ்­வா­தார வச­திகள் மிகக் குறைந்த ஹாசன் சார் பகு­தியில் அடைத்துவிடப்­ப­ட­வுள்­ளனர் என ரோஹிங்­யா­வுக்கு ஆத­ர­வா­ன­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

2017 ஆம் ஆண்டின் பிற்­ப­குதி தொடக்கம் மியன்மார் இரா­ணு­வத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட கொலைகள், பாலியல் வன்­பு­ணர்­வுகள் மற்றும் தீ வைப்­பி­னை­ய­டுத்து பங்களாதேஷுக்கு தப்பி வந்து தஞ்சமடைந்த 730,000 இற்கும் மேற்பட்ட ரோஹிங்ய மக்கள் சனநெரிசல்மிக்க முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.