சூடான் ஆளும் கட்சி தலைமைப் பத­வியை ஜனா­தி­பதி ஒமர் இரா­ஜி­னாமா செய்தார்

0 509

சூடானின் ஆளும் தேசியக் காங்­கிரஸ் கட்சித் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து ஜனா­தி­பதி ஒமர் அல்-­பஷீர் விலகிக் கொண்­டுள்­ளா­ரென கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் அக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை வரை நீடித்த கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் மிக­நீண்ட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் இந்த முடி­வு எடுக்கப்பட்­டுள்­ளது.

தேசியக் காங்­கிரஸ் கட்­சியின் அடுத்த தேசிய மாநாட்டில் நிரந்­த­ர­மான தலைவர் ஒருவர் நிய­மிக்­கப்­படும் வரை கட்­சியின் பதில் தலை­வ­ராக சூடானின் தெற்கு கொர்­டோபேன் மாநி­லத்தின் முன்னாள் ஆளுநர் அஹமட் ஹாரூன் செயற்­ப­டு­வா­ரென அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய காங்­கிரஸ் கட்சித் தலை­மைத்­துவப் பொறுப்­புக்­களை அஹமட் ஹாரூ­னுக்கு கைய­ளிப்­ப­தற்கு ஜனா­தி­பதி எடுத்­துள்ள முயற்­சி­யினை கட்சி ஏற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2014 ஆம் ஆண்டு வரை தெற்கு கொர்­டோபேன் மாநி­லத்தின் ஆளு­ந­ராக ஹாரூன் கட­மை­யாற்­றினார். அதற்கு முன்­ன­தாக, மனி­தா­பி­மான விவ­கார அமைச்­ச­ரா­கவும், சூடானின் உள்­துறை அமைச்சின் இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் பணி­யாற்­றி­யி­ருந்தார்.

சூடானின் டாபூர் பிராந்­தி­யத்தில் யுத்தக் குற்­றங்­களில் ஈடு­பட்­டி­ருந்­தமை மற்றும் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­கா­கவும் 2017 ஆம் ஆண்டு சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­தினால் ஹாரூன் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.