இந்திய விமானி இன்று விடுவிக்கப்படுகிறார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அறிவிப்பு

0 595

அமைதி மற்றும் நல்­லெண்ண அடிப்­ப­டையில் அபி­நந்தன் நாளை (இன்று) விடு­விக்­கப்­ப­டுவார் என பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் நேற்று அறி­வித்­துள்ளார். நேற்று முன்­தினம் பாகிஸ்தான் வான் பரப்­புக்குள் நுழைந்த இந்­திய போர் விமா­னத்தை பாகிஸ்தான் சுட்­டு­வீழ்த்­தி­யது. இதில் இந்­திய விமா­னி­யான அபி­நந்தன் கைது செய்­யப்­பட்டார். இவரை கடந்த இரு தினங்­க­ளாக பாகிஸ்தான் மிகவும் கண்­ணி­ய­மாக நடாத்­தி­வந்த நிலையில் அவரை நல்­லெண்ண அடிப்­ப­டையில் விடு­தலை செய்யத் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாகிஸ்தான் பிர­தமர்  இம்ரான் கான் நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் வைத்து அறி­வித்தார்.

இதன்­போது இம்ரான் கான் மேலும் உரை­யாற்­று­கையில்,

காஷ்­மீரில் நடக்கும் எல்­லா­வற்­றுக்கும் பாகிஸ்­தானை எவ்­வ­ளவு காலம் பழி­சு­மத்த முடியும் என்று கேட்க விரும்­பு­கிறேன்.

பாகிஸ்தான் ஊட­கங்கள் போர் குறித்­தான எதையும் கூற­வில்லை. ஆனால், இந்­தி­யாவில் போர் குறித்து  இந்­திய ஊட­கங்­களால் தூண்­டப்­ப­டு­வது வருத்­த­ம­டையச் செய்­துள்­ளது. நாங்கள் இந்­தி­யா­வுடன் பேச்­சு­வார்த்­தையை முன்­வைத்­துள்ளோம். ஆனால் அவர்­க­ளது தரப்­பி­லி­ருந்து வரும் செய்­திகள் நல்ல விதத்தில் இல்லை.

பாகிஸ்தான் எச்­ச­ரிக்­கை­யோடும், சுய கட்­டுப்­பாட்­டு­டனும் நடந்­து­கொண்­டது. இந்­திய அத்­து­மீ­ற­லுக்குப் பதி­லடி தந்­த­து­கூட, எங்கள் இறை­யாண்­மையை காத்­துக்­கொள்ளும் வல்­லமை எங்­க­ளுக்கு உண்டு என்­ப­தைக்­காட்­டத்தான்.

அமெ­ரிக்­காவில் நடந்த செப்­டம்பர் 11 தாக்­கு­த­லுக்கு முன்­பா­கவே தற்­கொலை குண்­டு­வெ­டிப்பில் விடு­தலைப் புலிகள் ஈடு­பட்­டி­ருந்­தனர். அவர்கள் இந்­து­மத நம்­பிக்­கையை சேர்ந்­த­வர்கள். தற்­கொலை குண்டு தாக்­குதல் என்­பது பல­வீ­ன­மா­ன­வர்­களின் தந்­திரம். அதற்கு மதச்­சாயம் பூச­மு­டி­யாது. ஆனால், இந்த தந்­திரம் ஏன் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­ப­தற்­கான உண்­மை­யான கார­ணி­களைத் தேட­வேண்டும்

இந்­திய மக்கள் தற்­போ­துள்ள அரசின் போர் பற்­றிய  தூண்­டு­தலை ஆத­ரிக்­க­வில்லை. இந்­தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல் எல்­லா­வற்­றுக்கும் காரணம் காஷ்மீர். நான் இந்­திய மக்­க­ளிடம் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக காஷ்­மீரில் நடப்­பது குறித்த கேள்­வியைக் கேட்க விரும்­பு­கிறேன்.

காஷ்­மீரில் உள்­நாட்டுப் போராட்டம் நடந்து வரு­கி­றது. காஷ்மீர் தலை­வர்கள் ஒரு­கட்­டத்தில் இந்­தி­யா­வி­லி­ருந்து பிரி­வி­னையை கேட்­க­வில்லை. ஆனால், இந்­தியா இழைத்த கொடு­மைகள் கார­ண­மாக அவர்கள் இப்­போது சுதந்­திரம் கேட்­கி­றார்கள். அவர்கள் கேட்­பார்கள். ஏன் 19 வயது இளைஞர் மனித வெடி­குண்­டாக மாற வேண்டும்? காஷ்­மீரில் நடப்­பவை அனைத்­துக்கும் பாகிஸ்­தானை எவ்­வ­ளவு காலம் பழி­சு­மத்த முடியும். அது­மட்­டு­மில்­லாது ஆதா­ர­மில்­லாமல் நட­வ­டிக்கை எடுக்க முடியும்?

நாங்கள் மோதலை விரும்பவில்லை என்று தெரிவிக்க இந்திய பிரதமர் மோடிக்கு  நேற்று மாலையிலிருந்து தொலைபேசியில் முயற்சித்தேன் எனத் தெரிவித்தார்.

இம்ரான் கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.