மெள­லவி ஆசி­ரியர் நிய­மனம் உடன் வழங்­கப்­ப­ட ­வேண்டும்

அழுத்தம் கொடுப்போம் என்­கிறார் ஹக்கீம்

0 593

இந்த வரு­டத்­துக்குள் மெள­லவி ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­ப­ட­வேண்டும். அதற்­காக அர­சாங்­கத்­துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று நகர திட்­ட­மிடல், நீர்­வ­ழங்கல் மற்றும் உயர்­கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அத்­த­ன­கல்ல தேர்தல் தொகு­தியில் அமைந்­துள்ள உடு­கொட அரபா மகா­வித்­தி­யா­ல­யத்­துக்கு குவைத் நாட்டு தன­வந்­தரின் நிதி உத­வியில் கட்­டப்­பட்டு அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்ட புதிய பாட­சாலை கட்­டிடத் திறப்­பு­விழா நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இதில் சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

பல­வ­ரு­டங்­க­ளாக இழு­ப­றியில் இருக்கும் மெள­லவி ஆசி­ரியர் நிய­ம­னத்தை விரைவில் வழங்­க­கு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க கடந்த மீலாத்­தின நிகழ்வில் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார். ஆனால் இன்னும் அந்த நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டாமல் இருக்­கின்­றன. 600 மெள­லவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் இந்த வரு­டத்­துக்குள் வழங்­கப்­ப­ட­வேண்டும். அதற்­காக பிர­த­ம­ருக்கும் அர­சாங்­கத்­துக்கும் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

அத்­துடன் மெள­லவி ஆசி­ரியர் நிய­ம­ன­மா­னது கடந்த வருட இறு­தியில் வழங்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­போதும் கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் இடம்­பெற்ற அர­சியல் குழப்ப நிலை கார­ண­மாக இந்த வேலைத்­திட்­டங்கள் கைவி­டப்­பட்­டி­ருந்­தன. அதனால் தற்­போது அர­சாங்கம் இது­தொ­டர்­பான நட­வ­டிக்­கை­களை விரைவில் மேற்­கொள்ளும் என எதிர்­பார்க்­கின்றோம்.

நாட்டின் மூவி­னங்­களைச் சேர்ந்த மாண­வர்­களை சம­அ­ளவில் சேர்த்­துக்­கொண்டு இன நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் நோக்கில் “ஒற்­றுமை பாட­சாலை” திட்­டத்தை நாடு­த­ழு­விய ரீதியில் நகர்ப்­பு­றங்­களில் அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

இன ரீதி­யான பாட­சா­லை­க­ளுக்கு அபி­வி­ருத்­தியை பெற்­றுக்­கொள்­வதில் சிக்­கல்கள் காணப்­ப­டுன்ற நிலையில், இத்­திட்டம் சகல தரப்­பி­ன­ருக்கும் வெற்­றி­ய­ளிக்­கு­மென எதிர்­பார்க்­கின்றோம்.

மேலும் உயர்­கல்வி பயிலும் மாண­வர்கள் எந்த பாடத்­து­றையை தெரி­வு­செய்தால் எந்த தொழில் துறைக்கு செல்­லலாம் என்ற அடிப்­படை தெளி­வில்­லாமல்  இருக்­கின்­றனர். அது தொடர்­பான வழி­காட்­டல்கள் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். அதனால் கல்­விப்­பொ­துத்­த­ரா­தர சாதா­ரண தரம்  மற்றும் உயர்­தர பரீட்சை முடிந்­ததும் மாவட்ட ரீதியில் வல­யக்­கல்வி அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து மாண­வர்­க­ளுக்கு தொழில் கல்­வியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வழி­காட்டல் வேலைத்­திட்டம் ஒன்றை மகா­பொல புல­மைப்­ப­ரிசில் நிதி­யத்­தி­னூ­டாக மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றோம்.

மேலும் அதி­க­மான பாட­சா­லை­களில் வளப்­பற்­றாக்­கு­றைகள் இருந்து வரு­கின்­றன. அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து கட்­டி­டங்­களை பெற்­றுக்­கொள்­வது பாரிய சிர­ம­மாக இருந்­து­வ­ரு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் இந்த பாட­சா­லைக்கு குவைத் நாட்டு தன­வந்தர் ஒருவர் முன்­வந்து இந்த கட்­டி­டத்தை நிர்­மா­ணித்­துக்­கொ­டுத்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. அத்­துடன் எனது அமைச்­சினால் சிறுவர் விளை­யாட்டு பூங்கா மற்றும் குடிநீர் தொகுதியொன்றை இந்தப் பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். அலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி, அல்ஹிமா நிறுவனத்தின் செயலாளர் நூறுல்லாஹ், பாடசாலை நிர்வாகத்தினர், பழையமாணவர், ஆசிரியர்கள், ஊர்மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.