குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் இன்று பூரண ஹர்த்தால்

0 539

புத்­தளம் அரு­வாக்­காடு பிர­தே­சத்தின் குப்பைத் திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று வெள்­ளிக்­கி­ழமை புத்­த­ளத்தில் முழு நாள் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது.

புத்­தளம் மாவட்ட சர்வ மத செயற்­கு­ழுவின் ஏற்­பாட்டில் நேற்று முன்­தினம் புதன் கிழமை முதல் தொடர்ந்து மூன்று தினங்கள் புத்­த­ளத்தில் கறுப்பு நாட்­க­ளாகப் பிர­க­டனப் படுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அதில் ஒரு அங்­க­மா­கவே இந்த முழு நாள் ஹர்த்தால் இன்று அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது.

இன்­றைய ஹர்த்­தாலின் போது வைத்­தி­ய­சாலை, மருந்­தகம் (பார்­ம­சிகள்), மருத்­துவ நிலை­யங்கள், மருத்­துவ ஆய்­வுக்­கூடம் தவிர்ந்த ஏனைய அனைத்து நிறு­வ­னங்­க­ளையும் மூடி இந்த ஹர்த்­தாலை வெற்­றி­ய­டையச் செய்­யு­மாறு அனை­வ­ருக்கும் ஏற்­பாட்டுக் குழு அழைப்பு விடுத்­துள்­ளது. அத்­துடன்  இன்­றைய தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­வது அமைதிப் போராட்­ட­மே­யன்றி, எவ்­வி­த­மான வன்­மு­றையோ சட்­டத்­துக்கு விரோ­த­மான போராட்­டமோ அல்ல என்றும் ஏற்­பாட்டுக் குழு அறி­வித்­துள்­ளது.

மேலும் நேற்று வியா­ழக்­கி­ழமை புத்­தளம் பிர­தேச மக்கள் நோன்பு நோற்று மாலை நோன்பு துறக்கும் கூட்டு இப்தார் நிகழ்வில் அனை­வரும் கலந்து கொண்­டனர். இந்த இப்தார் நிகழ்வு புத்­தளம் கொழும்பு முகத்­தி­டலில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. நேற்று புத்­தளம் பிர­தேச மக்கள் நோன்பு நோற்ற நிலையில் பிரார்த்­த­னை­களில் ஈடு­பட்­டனர்.  இந்த தொடர் மூன்று நாள் போராட்­டங்­களின் போது புத்­த­ளத்தின் வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் வாகனங்களில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு மக்கள் இந்த குப்பைத் திட்டத்திற்கான எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.