ஹஜ் யாத்திரைக்கு போலியான பெயரில் சிலர் விண்ணப்பிப்பு

இரத்துச்செய்துவிட்டு 28 ஆம் திகதிக்கு முன் பதிவுக்கட்டணத்தை மீளப்பெற வலியுறுத்து

0 549

ஒரு சில ஹஜ் முக­வர்­களும், தனி நபர்­களும் ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கு போலி­யான பெயர்­களில் விண்­ணப்­பித்து பதி­வுக்­கட்­ட­ண­மான 25 ஆயிரம் ரூபாய் கட்­ட­ணத்தையும் செலுத்­தி­யுள்­ள­தாக அறி­யக்­கி­டைத்­துள்­ளது எனத் தெரி­வித்­துள்ள அரச ஹஜ் குழு, அவ்­வா­றா­ன­வர்கள் தங்கள் பதி­வு­களை  எதிர்­வரும் 28 ஆம் திக­திக்குள் இரத்­துச்­செய்­து­விட்டு பதி­வுக்­கட்­ட­ணங்­களை மீளப்­பெற்­றுக்­கொள்­ளலாம் என அறி­வித்­துள்­ளது.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் பய­ணிகள் தெரிவு தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும், முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சரின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘போலி­யான பெயர்­களில் விண்­ணப்­பங்­களைப் பதிவு செய்­துள்­ள­வர்­க­ளுக்கு எதிர்­வரும் 28 ஆம் திக­திக்குப் பின்பு பதி­வுக்­கட்­ட­ணங்கள் மீளக் கைய­ளிக்கப் பட­மாட்­டாது. இதே­வேளை ஹஜ் முக­வர்கள் போலி­யான பெயர்­களில் விண்­ணப்­பங்­களைப் பதிவு செய்­துள்­ளமை உறுதி செய்­யப்­பட்டால் அவர்­க­ளது ஹஜ் அனு­ம­திப்­பத்­திரம் இரத்துச் செய்­யப்­படும்.

இவ்­வா­றான போலி­யான விண்­ணப்­பங்கள் கார­ண­மாக ஹஜ் பய­ணத்­துக்­காக விண்­ணப்­பித்­துள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். எனவே இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஹஜ் முகவர்கள் மற்றும் உப முகவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.