மியன்மார் இராணுவத்தினரின் மீது சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

0 518

ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தமது வீடு­களை விட்டு வெளி­யே­றிய அமை­தி­யற்ற வட­மேற்கு ராக்கைன் மாநி­லத்தில் அரக்கான் இரா­ணுவம் என்ற கிளர்ச்சிக் குழு­வி­ன­ருக்கு எதி­ராக தீவிர நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் வேளையில் மியன்மார் இரா­ணு­வத்­தினர் கிரா­மங்கள் மீது எறி­கணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தோடு பொது­மக்கள் உணவு மற்றும் மனி­தா­பி­மான உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் தடை­யாக இருந்­தனர் என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை தெரி­வித்­துள்­ளது.

அதி­கப்­ப­டி­யான சுயாட்­சி­யினைக் கோரி­வரும் ராக்கைன் இனக்­கு­ழு­வான அரக்கான் இரா­ணு­வத்­திற்கு எதி­ரான மோத­லின்­போது பொது­மக்­களைத் தடுத்து வைப்­ப­தற்­காக தெளி­வற்­றதும் கடு­மை­யா­ன­து­மான சட்­டங்­களை இரா­ணு­வத்­தினர் பயன்­ப­டுத்­தி­யமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கடந்த திங்­கட்­கி­ழமை குறித்த மனித உரி­மைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

தற்­போ­தைய இந்த நட­வ­டிக்கை மியன்மார் மனித உரி­மைகள் தொடர்பில் எவ்­வித கரி­ச­னையும் கொள்­ள­வில்லை என்­பது மீண்டும் ஒரு­முறை நிரூ­ப­ண­மா­கி­யுள்­ள­தாக நெருக்­கடி தொடர்­பான சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் பணிப்­பாளர் டிரானா ஹஸன் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

மக்கள் குடி­யி­ருக்கும் கிரா­மங்கள் மீது எறி­கணைத் தாக்­கு­தல்கள் நடத்­து­வ­தையும், உணவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு தடை விதிப்­ப­தையும் எந்த வகை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

கிளர்ச்­சிக்­கா­ரர்கள் கடந்த ஜன­வரி மாதம் பொலிஸ் காவ­லரண் ஒன்றின் மீது மேற்­கொண்ட தாக்­கு­தலில் 13 அதி­கா­ரிகள் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து மியன்மார் அர­சாங்கப் படை­யி­ன­ருக்கும் அரக்கான் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இடை­யே­யான மோதல்கள் தீவி­ர­ம­டைந்­தன.

கிளர்ச்­சிக்­கா­ரர்­களை அடக்­கு­வ­தற்­கான முயற்­சி­யாக 2017 ஆம் ஆண்டு ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பாரிய நட­வ­டிக்கை இடம்­பெற்ற பகு­தி­யான குறித்த பிர­தே­சத்தில் அதிக எண்­ணிக்­கை­யி­லான படை­யினர் பணியில் ஈடு­ப­டுத்தப் பட்­டுள்­ளனர்.

ஜன­வரி 28 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை காரணமாக 5,200 பொதுமக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை தொடர்பில் மியன்மாரிலிருந்து உடனடியான பதில்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.