கஷோக்ஜி கொலை விசாரணையை சவூதி அரசே மேற்கொள்ளும்

சவூதி உறுதிபடத் தெரிவிப்பு

0 516

ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை அல்­லது சர்­வ­தேச ரீதி­யான விசா­ரணை அவ­சி­ய­மில்லை எனவும் அதி­கா­ர­மிக்க சட்ட முறை­மை­யினால் அதனைக் கையாள முடியும் எனவும் சவூதி அரே­பி­யாவின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் அடெல் அல்-­ஜுபைர் தெரி­வித்தார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ‘பேஸ் த நேஷன்’ என்ற அமெ­ரிக்க தொலைக்­காட்சி நிகழ்ச்­சிக்கு கருத்துத் தெரி­வித்த அவர் துருக்­கி­யி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்­தினுள் வைத்து ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்­டமை பாரிய அனர்த்­த­மாகும் எனத் தெரி­வித்­த­தோடு, சவூதி அரே­பிய தலை­மைத்­து­வத்தின் அனு­ம­தி­யுடன் அக் கொலை நிகழ்த்­தப்­பட்­டது எனத் தெரி­விக்­கப்­ப­டு­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்தார்.

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானின் உத்­த­ர­வுக்­க­மை­வா­கவே இக்­கொலை நிகழ்த்­தப்­பட்­டி­ருக்க வேண்­டு­மென அமெ­ரிக்க புல­னாய்வு முக­வ­ரகம் முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ர­சரே கொலைக்­கான உத்­த­ரவைப் பிறப்­பித்­தா­ரென அமெ­ரிக்க செனட் சபை உறுப்­பி­னர்கள் கடந்த டிசம்பர் மாதம் குரல் கொடுத்­தனர்.

பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மா­னுக்கும் இக் கொலைக்கும் எவ்­வித சம்­பந்­தமும் கிடை­யா­தென அல்-­ஜுபைர் தெரி­வித்தார். ஜமால் கஷோக்ஜி கொல்­லப்­ப­டு­வ­தற்­கான எவ்­வித உத்­த­ர­வு­களும் பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இதனால் முழு நாடும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.

அது ஒரு தவ­றான செய­லாகும். தமது அதி­கா­ரங்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு செயற்­பட்ட சவூதி அர­சாங்க அதி­கா­ரி­களின் செய­லாகும். மன்னர் இது தொடர்பில் விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டுள்ளார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இவ் விவ­காரம் தொடர்பில் 11 பேர் மீது குற்றம் சுமத்­தப்­பட்டு சவூதி அரே­பி­யாவில் விசா­ரண மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. இவர்­களுள் ஐவர் மரண தண்­ட­னை­யினை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். விசா­ர­ணைகள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

சட்­டத்­திற்குப் புறம்­பான படு­கொ­லைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட பெண் அறிக்­கை­யா­ள­ரான அக்னெஸ் கோலாமார்ட் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பில் துருக்­கியில் ஒரு வார­கால விசா­ர­ணையை நடத்­தி­ய­தோடு இது கொடூ­ர­மான திட்­ட­மி­டப்­பட்ட கொலை எனவும் சவூதி அரே­பிய அதி­கா­ரி­க­ளினால் திட்­ட­மி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்­டது எனவும் தனது ஆரம்ப கட்ட முடி­வுக்கு வந்­துள்ளார்.

அவரது இறுதி அறிக்கை ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளது.  துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தினுள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு துருக்கி எடுக்கும் முயற்சிகளுக்கு சவூதி அரேபியா இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் அக்னெஸ் கோலாமார்ட் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.