பாதாள உலக தலைவன் மாகந்­துரே மதூஷ் கைது

அபு­தாபி, இலங்கை பொலிஸ் இணைந்து நட­வ­டிக்கை

0 652

இலங்­கையில் இடம்­பெற்ற பல பாதாள உலக கொலைகள், போதைப்­பொருள் கடத்­தல்­களின் பின்­ன­ணியில் இருக்கும் மிக முக்­கிய புள்­ளி­யான பாதாள உலக தலைவன் மாகந்­துரே மதூஷ் என­ப்படும் சம­ர­சிங்க ஆரச்­சி­லாகே மதூஷ் லக்­சித்த ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் தலைநக­ரான அபு­தா­பியில்  6 நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

தனது மகனின் முத­லா­வது பிறந்த நாள் களி­யாட்ட நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­டி­ருந்த போது அவர் இவ்­வாறு இலங்கை உள­வுத்­து­றைக்கு கிடைத்த இர­க­சிய தக­வ­லுக்­க­மைய – ஐக்­கிய அரபு அமீ­ரக போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வுடன் இணைந்து முன்­னெ­டுத்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யி­லேயே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக பாது­காப்பு தரப்பு தக­வல்கள் தெரி­வித்­தன.

இதன்­போது டுபாயில் இருந்­து­கொண்டு  பாகிஸ்தான் ஊடாக இலங்­கைக்கு போதைப்­பொருள் கடத்தும் முக்­கிய புள்­ளி­யான பல்­வேறு குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டைய கஞ்­ஜி­பான இம்ரான் மற்றும் மாகந்­துரே மதூஷின் மிக நெருங்­கிய சகா­வான அங்­கொட சூட்டி, பல்­வேறு கொலைகள், போதைப்­பொருள் குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டைய பிர­பல பாதாள உலக தலை­வ­னான கெசல்­வத்த தினுக ஆகி­யோரும்  பொலி­ஸாரால் கைது செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக குறித்த களி­யாட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த இலங்­கையின் பிர­பல பாடகர் அமல் பெரேரா மற்றும் அவ­ரது மகன் நதீக பெரேரா, தெவனி இனிம எனும் சிங்­கள நாட­கத்தின் நடி­க­ரான ரயன் உள்­ளிட்­டோரும் இதன்­போது பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், சுமார் 25 பேர் இதன்­போது பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்டு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் தெரி­வித்­தன.

இந்த 25 பேரில் பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் தேடப்­ப­டுவோர் மற்றும் இரு பிர­தேச அர­சி­யல்­வா­தி­களும் உள்­ள­டங்­கு­வ­தாக உத்­தி­யோ­க­பூர்­மற்ற தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தின.

மஹ­ர­கம களு துஷா­ரவின் மனை­வியை, மாகந்­துரே மதூஷ் டுபாய்க்கு அழைத்து அவ­ருடன் வாழ்ந்து வந்தார். வெலிக்­கடை சிறைக் கல­வ­ரத்­தின்­போது களு துஷார  எனும் துஷார சந்­தன கொல்­லப்­பட்ட பின்னர் அவரது மனை­வியை மதூஷ் டுபாய்க்கு அழைத்து இவ்­வாறு வாழ்ந்து வந்­துள்ளார்.

இந்­நி­லை­யி­லேயே அவர்­களின் மகனின் முதலாம் பிறந்த நாளை மதூஷ் அபு­தாபி 6 நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில்  நேற்று  அதி­காலை ஏற்­பாடு செய்­துள்ளார். இந்­நி­லையில் இலங்­கையின் உளவுத் துறையும் ஏனைய போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் திட்­ட­மிட்ட குற்­றங்­களை தடுக்கும் பொலிஸ் பிரிவு ஆகி­யன இணைந்து முன்­னெ­டுத்­தி­ருந்த இர­க­சிய நட­வ­டிக்­கையில் மதூஷின் நகர்­வுகள் தொடர்பில் தகவல் சேக­ரிக்­கப்­பட்டு கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வந்­துள்­ளன.

அதன்­ப­டியே மதூஷ் அபு­தாபி ஆறு நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு வரு­வதும் அங்கு களி­யாட்ட நிகழ்­வு­களில் பங்­கேற்­பதும் குறித்த தகவல் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ளன. அத­னை­ய­டுத்தே இலங்­கையின் சிறப்பு பொலிஸ் குழு, ஐக்­கிய அரபு அமீ­ரக பொலி­ஸா­ருடன் இணைந்து நடாத்­திய  விஷேட நட­வ­டிக்­கையில் மதூஷ் உள்­ளிட்ட பாதாள உலக தலை­வர்கள் சிக்­கி­யுள்­ளனர்.

மாகந்­துரே மதூஷ் இலங்­கைக்கு போதைப் பொருள் கடத்தும் மிக முக்­கிய நபர்­களில் ஒரு­வ­ராக அடை­யாளம் காணப்பட்­டுள்­ள­துடன் இலங்­கையில் இடம்­பெற்­றுள்ள 10 இற்கும் அதிக கொலை­க­ளுடன் அவ­ருக்கு தொடர்­பி­ருப்­பது வெளி­ப்படுத்­தப்பட்­டுள்­ளது. குறிப்­பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சுற்றி வளைப்பு பிரிவின்  பொறுப்­ப­தி­க­ாரியாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் ரங்க ஜீவ மீதான தாக்­கு­த­லு­டனும், களுத்­துறை சிறைக் கைதிகள் கொலையின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யுமான அங்­கொட லொக்­க­ாவுக்கு  பூரண ஆத­ரவு கொடுத்­தமை உள்­ளிட்­ட­ தொடர்­புகள் ஏற்க­னவே வெளி­ப்படுத்­தப்பட்­டி­ருந்­தன.

இந் நிலை­யி­லேயே பல்­வேறு குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டைய இலங்­கைக்கு மிக அவ­சி­ய­மான அவர் சிக்­கி­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும் அபு­தா­பியில் அவர்கள் சிக்­கிய போது அந்த களி­யாட்­டத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 20 கிராமுக்கும் அதிக நிறை கொண்ட கொக்கைன் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் மதூஷை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் வெளி விவகார அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும்  பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து விஷேட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-vidivelli

Leave A Reply

Your email address will not be published.