சூடானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர் திடீர் உயிரிழப்பு

0 526

பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு எதி­ராக அரபு நாடான சூடானில் ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­று­வரும் நிலையில் பாது­காப்புப் படை­யி­னரால் தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த ஆர்ப்­பாட்­டக்­காரர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அர­ச­சார்­பற்ற அமைப்­பொன்று தெரி­வித்­துள்­ளது.

தேசிய புல­னாய்வு பாது­காப்பு சேவையின் கட்­டுப்­பாட்டில் இருந்­த­போது ஆசி­ரி­ய­ரான அஹ்மட் அல்ஹைர் உயி­ரி­ழந்­த­தாக சூடான் வைத்­தி­யர்­களின் மத்­தி­ய­குழு அறிக்­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது. இறப்­புக்­கான காரணம் இன்னும் எது­வென இது வரை தெரி­ய­வ­ர­வில்லை.

சூடா­னிய பொலி­ஸாரும் தமது பங்­கிற்கு இறப்­பினை உறுதி செய்­துள்­ள­தோடு, தடுத்து வைக்­கப்பட்­டி­ருக்கும் போது ஆசி­ரியர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­வதை மறுத்­துள்­ளனர்.

விசா­ர­ணையின் போது சுக­வீ­ன­ம­டைந்த குறித்த நபர் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­படும் போது உயி­ரி­ழந்­த­தாக கஸ்­ஸாலா மாநி­லத்தின் பொலிஸ் பணிப்­பாளர் மேஜர் ஜெனரல் யாஸீன் ஹஸன் தெரி­வித்தார்.
அவ­ரது குடும்­பத்­தி­ன­ரிடம் அவ­ரது இறப்­புக்­கான காரணம் தெரி­விக்­கப்­பட்டு மருத்­துவ அறிக்கை வழங்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் இறப்­புக்­கான காரணம் அவர்­மீ­தான தாக்­குதல் கார­ண­மல்ல என்­பது தொடர்பில் அவர்கள் திருப்­தி­ய­டைந்­துள்­ளனர் எனவும் அவர் தெரி­வித்தார்.

கடந்த வாரம் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் பாது­காப்புப் படை­யி­னரால் தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த நிலையில் உயி­ரி­ழந்தார்.

பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்­வு­காணத் தவ­றி­ய­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஜனா­தி­பதி ஒமர் அல்-­ப­–சீரை பதவி வில­கு­மாறு கோரி கடந்த டிசம்பர் நடுப் பகு­தி­யி­லி­ருந்து சூடானில் ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.
ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்பமானதிலிருந்து சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சூடான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேவேளை இறந்தோரின் எண்ணிக்கை சுமார் 50 என எதிர்த் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.