விஜயகலாவை கைது செய்யாது ஞானசாரரை சிறைவைப்பது நியாயமல்ல: சிங்கள ராவய

0 581

விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் மீண்டும் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மெனத் தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­காது, இரா­ணுவ வீரர்கள் பற்றி கருத்து தெரி­வித்த ஞான­சார தேரரை கைது செய்து சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளமை நியா­ய­மற்­ற­தென சிங்­கள ராவய அமைப்பின் பொதுச் செய­லாளர் மாகல்­கந்த சுதத்த தேரர் தெரி­வித்தார். இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள ஸ்ரீசத்­தர்ம விகா­ரையில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கல­கொட அத்தே ஞான­சார தேரரை அர­சியல் கைதியைப் போன்று சித்­தி­ரித்து சில அர­சி­யல்­வா­தி­கள் அவரைக் கொண்டு அர­சியல் நடத்­து­கின்­றனர். சிறைச்­சா­லையில் அவரை சிலர் சென்று சந்­திப்­பதன் நோக்கம் அவ­ரது விடு­த­லையை வலி­யு­றுத்­து­வ­தற்­காக அல்ல. மாறாக, இந்த விட­யத்தைக் கொண்டு அர­சியல் இலாபம் தேடவே முற்­ப­டு­கின்­றனர்.

இரா­ணுவ வீரர்கள் தொடர்பில் கருத்து வெளி­யிட்டு நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனக் குற்­றஞ்­சாட்டி ஞானசார தேரருக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றி­ருக்க விடு­த­லைப்­பு­லி­களை மீண்டும் உரு­வாக்க வேண்­டு­மெனக் கூறிய அவரும், நீதி­மன்­றத்­திற்கு கல்­லெ­றிந்த மேலும் சிலரும் தற்போது அமைச்சர்களாகவுள்ளனர். அவர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதியைக் கட்டுப்படுத்துகின்றனர்.

எனவே எமது நாட்டில் நீதியை நிலைநாட்டுவதில் சமத்துவம் பேணப்படு வதில்லை என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.