மரணதண்டனை விரைவில் அமுலுக்கு வர வேண்டும்

0 757

நாட்டில் போதைப்­பொருள் கடத்­தலில் ஈடு­பட்டு மர­ண­தண்­டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைச்­சா­லை­களில் இருக்கும் கைதி­களின் ஆவ­ணங்கள் அனைத்­துமே கள­வா­டப்­பட்­டுள்­ளன. அந்த ஆவ­ணங்கள் நீதி­ய­மைச்சில் கூட இல்லை என்ற அதிர்ச்சி தரும் தக­வ­லொன்­றினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தினம் வெளி­யிட்­டுள்ளார்.

போதைப்­பொருள் வர்த்­த­கர்­களின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களும், சிவில் அமைப்­பு­களும் செயற்­பட்டு வரு­கின்­றன என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். முல்லைத் தீவு முள்­ளி­ய­வளை வித்­தி­யா­னந்த மகா­வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற தேசிய போதைப்­பொருள் ஒழிப்பு வாரத்தைப் பிர­க­ட­னப்­ப­டுத்தும் நிகழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­ப­தி­யினால் இத்­த­கவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

போதைப்­பொருள் கடத்­த­லுக்கு எதி­ராக கடந்த நான்கு வரு­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்கள் இவ்­வாரம் முதல் புதிய உத்­வே­கத்­துடன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்றும், போதைப்­பொருள் கடத்­தற்­கா­ரர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­க­வேண்டும் என்ற தீர்­மா­னத்­தி­லி­ருந்து தான் ஒரு­போதும் பின்­வாங்கப் போவ­தில்லை என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் நேரடிக் கண்­கா­ணிப்பின் கீழ் ‘போதை­யற்ற தேசம்’ எனும் தொனிப்­பொ­ருளில் இம்மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை தேசிய போதைப்­பொருள் ஒழிப்பு வாரம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நாட்­டி­லுள்ள அனைத்து பாட­சா­லைகள், மதத்­த­லங்கள் என்­ப­வற்றில் விழிப்­பூட்டும் நிகழ்ச்­சி­களை நடாத்­து­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

போதைப்­பொருள் கடத்தல் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­பட்டு மரண தண்­டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறை­களில் இருக்கும் கைதி­க­ளுக்கு மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யும்­படி ஜனா­தி­பதி கடந்த வருடம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வதை மனித உரிமை அமைப்­புகள், சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் எதிர்த்­தன. ஏதோ கார­ணத்­தினால் மரண தண்­டனை அமு­லாக்கம் தாம­திக்­கப்­பட்டு வந்­தது.

-ஜனா­தி­பதி மீண்டும் தனது நிலைப்­பாட்­டினை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் ஜனா­தி­பதி காலம் தாழ்த்­தாது தனது பத­விக்­கா­லத்­திலே இதனை அமுல்­ப­டுத்த வேண்டும். அடுத்து வரும் காலங்­களில் ஜனா­தி­ப­தி­யாக வேறொ­ருவர் தெரி­வு­செய்யப்பட்டால் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­ப­டுமா? என்றும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பூட்­டல்கள் அரச அலு­வ­ல­கங்கள், பிர­தேச செய­ல­கங்­க­ளிலும் இடம்­பெ­றவுள்­ளமை மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் என நம்­பலாம். அண்­மையில் பிலிப்­பைன்­ஸுக்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி அங்­கி­ருந்து போதைப்­பொருள் தடுப்பு குறித்து புதிய விட­யங்­களைக் கற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார். பிலிப்­பைன்­ஸி­லி­ருந்து போதைப்­பொருள் தடுப்­புக்­கு­ழு­வொன்று விரைவில் இலங்­கைக்கு வர­வுள்­ளது. எனவே போதைப்­பொருள் கடத்­த­லுடன் தொடர்­பு­பட்டு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள கைதி­க­ளுக்கு தண்­டனை விரைவில் நிறை­வேற்­றப்­படும் என நம்­பலாம்.

மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்­க­ளுக்கு மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் மாத்­திரம் போதைப்­பொருள் வர்த்­த­கத்தை இலங்­கையில் முற்றுமுழு­தாக ஒழித்­து­விட முடி­யாது.

மீண்டும் மீண்டும் போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்கள் உரு­வா­கிக்­கொண்டே இருப்­பார்கள். போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்­களின் பின்­ன­ணியில் இருந்து செயற்­படும் அர­சி­யல்­வா­தி­களும் இனங்­கா­ணப்­பட வேண்டும். ஜனா­தி­பதி அவ்­வா­றான அர­சி­யல்­வா­தி­களை இனங்­கண்­டி­ருந்தால் அவர்­க­ளுக்கு அமைச்­சுப்­ப­த­விகள் வழங்­கு­வதைத் தவிர்க்க வேண்டும். மக்­களும் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்தும் தவிர்த்து புறக்கணிக்க வேண்டும்.

போதைப்பொருளிலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு உலமாசபை, பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள், அஹதிய்யா பாடசாலைகளும் செயலில் இறங்க வேண்டும். இளைஞர்களும் மாணவர்களும் போதைப்பொருளற்ற சமூகத்துக்காக நெறிப்படுத்தப்பட வேண்டும். போதையற்ற தேசத்திற்கு நாமும் பங்களிப்பு செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.