பாகிஸ்தான் பழங்­குடிப் பிராந்­தி­யத்­திற்கு தனி­யான பொலிஸ் படை அமைக்­கப்­படும்

0 626

பாகிஸ்­தானின் சட்ட மற்றும் அர­சியல் நீரோட்­டத்தில் கடந்த வருடம் இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட ஏழு பழங்­குடி மாவட்­டங்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு அந் நாட்டு அர­சாங்­கத்தின் வட­மேற்கு கைபர் பக்ஹ்­துன்க்ஹ்வா மாகாணம்  22,000 பேர் கொண்ட பல­மான பொலிஸ் படை­யொன்­றுக்­கா­கான ஆட்­சேர்ப்பை செய்­ய­வுள்­ளது என அர­சாங்கப் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

ஆப்­கா­னிஸ்­தானின் எல்­லையில் அமைந்­துள்ள பழங்­குடிப் பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள மில்­லி­யன்­க­ணக்­கான மக்­க­ளுக்கு சம உரிமை வழங்­கு­வ­தற்கு கடந்த வருடம் மே மாதம் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்கு பாகிஸ்தான் பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் வழங்­கி­யது.

இதன் மூலம் இதற்கு முன்னர் கைபர் பக்ஹ்­துன்க்ஹ்வா மாகாணம் பிர­தேச மக்­க­ளுக்கு சம­வு­ரி­மை­யினை மறுத்­து­வந்த, பழங்­குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் குற்­ற­மி­ழைத்தால் முழுப் பழங்­குடி சமூ­கமும் தண்­ட­னைக்கு இலக்­கா­கின்ற கால­னித்­துவ கால சட்­டங்­களை நீக்­கு­வ­தற்கும் சமஷ்டி அமைப்பில் நிரு­வ­கிக்­கப்­பட்டு வந்த ஏழு பழங்குடி மாவட்டங்களை ஒன்றிணைப்பதற்கும் வழியேற்பட்டது.

ஆரம்பத்தில் ஆறாயிரம் பொலிஸாரை சேர்த்துக் கொள்வதற்கும், இரண்டாயிரம் படையினரையும் சேர்த்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என மாகாண அரசாங்கப் பேச்சாளர் அஜ்மல் வாஸிர், புதிதாக இணைக்கப்பட்ட பழங்குடி மாவட்டங்களின் அமைதியும் சிறந்த சமாதானமுமே அரசாங்கம் முன்னுரிமையளிக்கும் விடயங்களாகும் எனவும் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக தலிபான் மற்றும் அல்-கைதா கிளர்ச்சிக்காரர்கள் பழங்குடிப் பிரதேசங்களை பயிற்சி பெறுவதற்காகவும், பாகிஸ்தான் மற்றும் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தி வந்தனர். அதற்குக் காரணம் அப்பிரதேசங்களில் அரசாங்கத்தில் பிரசன்னம் இல்லாதிருந்தமையாகும்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக பாகிஸ்தான் இராணுவம் இந்தப் பிரதே சங்களில் பல இராணுவ நடவடிக்கைகளைமேற் கொண்டது. இதன் காரண மாக பலர் இடம்பெயர்ந்து தற்போது பழங்குடிப் பிராந்தியங் களுக்கு வெளியே அமைந் துள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.